Results 21 to 30 of 453

Thread: INTERVIEWS With TV Artists

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    venkat nisha

    ‘‘விளையாட்டாகத்தான் எங்கள் காதல் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் திகட்டத் திகட்டக் காதலித்தோம். கல்யாணமும் செய்து கொண்டோம்.

    இதோ கடவுளின் பரிசாய் எங்கள் குழந்தை மாயா. அதே காதல், அதே ஜாலியோடு வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. கலகலவெனப் பேசுகிறார்கள் விஜய் டி.வி.யில் நடந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய நிஷா வெங்கட் இருவரும். (வெங்கட் வேறு யாருமில்லை... பிரபல பியூட்டிஷியன் மைதிலியின் மகன்)

    ‘‘எங்களுடைய காதல் கதையை என்னன்னு சொல்றது?’’ என்று இருவருமே அநியாயத்திற்கு வெட்கப்பட்டார்கள்.

    ‘‘நிஷா, நீ சொல்லுமா’’ என்று வெங்கட்டும், ‘‘இல்ல... இல்ல, நீங்களே சொல்லுங்க’’ என்று நிஷாவும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டார்கள்.

    கடைசியில் தங்களுக்குள்ளாகவே ‘இங்க்கி, பிங்க்கி, பாங்க்கி’ போட்டுப் பார்த்துக் கொண்டார்கள். கடைசியில் வெங்கட் சொல்வதாக முடிவானது.

    ‘‘நிஷா அப்போது காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். நானும் அதே காலேஜில் தான் படித்தேன். (நிஷா எனக்கு ஜூனியர்) காலேஜில் படிக்கும் ஒவ்வொரு பையனும் அந்த வயதில் ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாச்சே.... எனக்கும், ஒரு கேர்ள் ஃபிரெண்ட் வேண்டும் என்று முடிவெடுத்து, நிஷாவிடம் ஃபிரெண்டானேன். ஆனால் போகப் போக நிஷாவின் நல்ல குணங்கள் என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டன. குறிப்பாக ஸ்டேட்டஸ் பார்க்காமல் பழகும் நிஷாவின் குணம் சம்திங் நைஸ். கொஞ்சம் கொஞ்சமாக நிஷாவின் மேல் எனக்கு மரியாதை கலந்த அன்பு வந்து விட்டது’’ இதற்கிடையில் தெரிந்த நண்பர் மூலமாக சி.ஜே. பாஸ்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘அண்ணாமலை’ தொடரில் சுப்பு என்கிற கேரக்டரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் இது மட்டுமே வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருக்காதே’’ என்று வெங்கட் சொல்ல நிஷா இடைமறித்தார்.

    காதலை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டோமே தவிர, அந்த நேரத்தில் பொருளாதார ரீதியாக நாங்கள் செட்டிலாகவில்லை. வெங்கட்டும் பெரிதாய் எதுவும் சாதனைகள் செய்யாத காலகட்டம் அது. விளையாட்டாய் காதலிக்கும் போது, வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாய் அக்கறை இல்லை. ஆனால், கல்யாணம், குடும்பம் என்று வந்தால் பணம் வேண்டுமே... அதனால் இருவரும் வேலைக்குப் போக முடிவெடுத்தோம். நான் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். வெங்கட்டும் அவருடைய அம்மா நடத்தி வரும் பார்லரைக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தார். இருவருமே எங்கள் காதலை வீட்டில் சொல்ல முடிவெடுத்தோம். ஆனால் என்னுடைய மாமியாருக்கோ (வெங்கட்டின் அம்மா) தனக்கு வரப்போகும் மருமகள் தன்னுடைய பியூட்டி பார்லரைக் கவனித்துக் கொள்ளும் அளவுக்கு பியூட்டி நாலெட்ஜ் இருக்க வேண்டும்’’ என்று நினைத்தார்.

    ஆரம்பத்தில் எனக்கு பியூட்டி ஃபீல்டைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. ஆனால் வெங்கட்டைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துக்காகவே என் மாமியாரின் பார்லரிலேயே பியூட்டிஷியன் கோர்ஸைப் பிராக்டிக்கலாகக் கற்றுக் கொண்டேன்’’ என்று நிஷா சொல்ல,

    ‘‘உங்களுக்கு ஒன்று தெரியுமாங்க, நாங்க அந்த சமயத்தில் கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவெடுத்ததே சேர்ந்து படிக்கிறதுக்குத்தாங்க’’ என்று வெங்கட் சொன்னவுடன் நமக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. ‘‘ஆமாங்க... ஸ்கின் பியூட்டி, ஹேர் டிரெஸ்ஸிங் சம்பந்தமாக டிப்ளமோ கோர்ஸ் படிப்பதற்காக டெல்லி வரை செல்ல முடிவெடுத்தோம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ளாமல் சென்றால், நிஷா அங்கே தனியாகத் தங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. அதனால் கல்யாணம் செய்து கொண்டு வீட்டில் ஹனிமூன் என்று சொல்லி விட்டு டெல்லிக்குப் படிக்கச் சென்றோம். கோர்ஸை நல்லபடியாக முடித்து ஊருக்குத் திரும்பி, நானும் நிஷாவும் பிஸினஸை நல்லபடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதைத் தவிர, தற்போது வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும் ஆனந்தம்’ உட்பட பல சீரியல்களில் நான் பிஸி...’’ என்றவர்,

    என் மனைவி மீது நான் அதிக அளவு காதல் கொண்டது அவளின் பிரசவத்திற்குப் பிறகுதான். காரணம் குழந்தை பிறந்தவுடன் பிரெயினில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிஷா கோமாவுக்குச் சென்று விட்டாள். ‘‘என் நிஷா இல்லாமல் நான் எப்படி வாழப் போகிறேன் என்று நினைத்து நினைத்துத் தவித்தேன். என் உயிரே என்னை விட்டுப் போகப் போவது போல் ஒரு உணர்வு. அவள் கோமாவிலிருந்து, கண் விழித்த அந்தக் கணத்தை என்னால் ஆயுசுக்கும் மறக்க முடியாது’’ என்று அதுவரை ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த வெங்கட், நெகிழ்ந்து போய்ப் பேசினார்.

    ‘‘நான் வெங்கட் கூட ‘ஜோடி நம்பர் 1’ல் ஆடினதுக்கு ஒரு காரணம் இருக்கு. எனக்கு டெலிவரியான சமயத்துல கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருந்தேன் இல்லியா? அப்போ உடம்பு எடை கூடி, மனதளவிலும் ரொம்ப டிப்ரெஸ்டா இருந்தேன். அந்த சமயத்துல தான் ‘ஜோடி நம்பர் 1’ வாய்ப்பு வந்தது. வெங்கட் ஒரு நல்ல டான்ஸர்னு எனக்கு நல்லாத் தெரியும். ஆனால் எனக்கோ டான்ஸ் ஆடத் தெரியாது. நம்மால வெங்கட் ஜெயிக்க முடியாமப் போயிடுமோன்னு போட்டியில கலந்துக்க ரொம்பவே பயந்தேன். ஆனால் வெங்கட்தான் ‘நிஷா உனக்கு ஒரு அவுட்லெட் வேணும். நாலு பேரைப் பார்த்து பேசிப் பழக இது ஒரு நல்ல சான்ஸ். அதனால நாம தோத்தாலும் பரவாயில்லை... நீயும் என்னோட கண்டிப்பா ஆடணும்னு சொன்னாரு’ அவருக்காகத்தான், ஆட ஆரம்பிச்சேன். ஸ்டெப்_பை_ஸ்டெப்பா ஃபைனல்ஸ் வரைக்கும் வந்தோம். இந்தப் போட்டியில நாங்க ‘செவர்லெட்’ காரை ஜெயிச்சதை விட, என் கணவர் என் மேல் எவ்வளவு அக்கறை வச்சிருக்காருங்கிறதுதான் என்னை ரொம்பவே சந்தோஷப்பட வைத்து விட்டது’’ என்கிற நிஷா ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிக்குப் பிறகு ரொம்பவே பிஸி. தமிழ்நாடு அரசுடன் இணைந்து நடத்தும் பியூட்டி கோர்ஸ்கள், டான்ஸ் ப்ரோகிராம்கள் என்று பம்பரமாகச் சுழல்கிறார் நிஷா.

    எனக்கும் நிஷாவுக்குமான காதல் வாழ்க்கையில் சின்னச் சின்னப் பிரச்னைகள் வந்து கொண்டும் போய்க் கொண்டும்தான் இருக்கிறது. ஆனால் அதை நாங்கள் இருவருமே பெரிதுபடுத்துவதில்லை. ஒரேயொரு விஷயத்தில்தான் எனக்கு நிஷாவின் மேல் பயங்கரமாகக் கோபம் வரும் என்றவர், ‘‘நிஷா எந்த ஒரு விஷயத்திற்கும் முடிவெடுக்க ரொம்பவே தயங்குவாள். அது சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, பெரிய விஷயமாக இருந்தாலும் சரி... உதாரணத்திற்கு, ஹோட்டலுக்குச் செல்லலாம் என்று இரண்டு பேரும் முடிவெடுத்தால், பரபரவென்று கிளம்புவாளே தவிர எந்த ஹோட்டலுக்குப் போகலாம்? எந்த டிஷ் சாப்பிடலாம் என்று கேட்டால், நீங்களே சொல்லுங்கள் என்று சொல்வாளே தவிர, தனக்கு எது பிடிக்கும் என்ன வேண்டும் என்று கேட்கவே மாட்டாள். ஒவ்வொருவருக்குமென்று தனித் தனியாக விறுப்பு வெறுப்புகள் இருக்கிறது. நிஷாவுக்கு எத்தனையோ முறை இதைச் சொல்லிவிட்டேன்... கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்’’ என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார் வெங்கட்.

    ‘‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. அது என்னமோ தெரியலை கல்யாணத்துக்கப்புறம் எனக்குன்னு எதையும் யோசிக்கத் தோணலை நான் வேற, வெங்கட் வேறயா என்ன?’ நிஷா இயல்பாகச் சொன்னபோது, அவர்களுக்கிடையே இருந்த காதலின் ஆழம் புரிந்தது.

    காதல் தான் எங்களுக்கு வாழ்க்கையைப் புரிய வைத்தது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘‘காதலித்துத் திருமணம் செய்து கொண்டால், ஆரம்பத்தில் சந்தோஷமாக இருக்கும். போகப் போக பிரச்னைகள் அதிகமாகி விடும்’’ என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை.

    ‘‘சரியான புரிதல் இருந்தால் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் மரியாதையும், நம்பிக்கையும் வையுங்கள். எங்கள் காதல் நாங்கள் வாழ்க்கையில் ஜெயிக்கத் தேவையான சக்தியைக் கொடுத்திருக்கிறது. இதோ இந்த சக்தியோடு பியூட்டி சம்பந்தமான அகாடமி ஒன்றை ஆரம்பிக்க நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்து வருகிறோம்! நடத்தியும் காட்டுவோம்’’ நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார்கள் வெங்கட்டும் நிஷாவும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •