பரமசிவனும், பார்வதியும் யார்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் கடவுள் முருகன் தொடரில் தற்போதைய எபிசோட்களில் அதிகமாக வரும் பார்வதி, பரமசிவன் கேரக்டர்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கும், ஆனால் அவர்கள் யாரென்று தெரியாது. அவர்கள் இருவரும் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள் தான்.


பரமசிவன் கேரக்டரில் நடிப்பவர் வம்சம் தொடரில் வில்லனாக நடித்த நந்தகுமார். ஆறடி உயரமும், சிவன் கேரக்டருக்கேற்ற முகமும் அமைந்திருப்பதால் அவருக்கு இந்த கேரக்டர் கிடைத்திருக்கிறது. அவரும் சிறப்பாக நடித்து பெண்களின் ஆதரவை பெற்று வருகிறார்.


பார்வதியாக நடிப்பவர் பிரபல செய்தி வாசிப்பாளர் பிரியா. அமைதியே உருவான முகம், கனிவான தோற்றம் இவருக்கு பார்வதி கேரக்டரை பெற்றுத் தந்திருக்கிறது. சிறிது காலத்துக்கு செய்தி வாசிப்பை ஒதுக்கி வைத்து சினிமாவில் தலை காட்ட துவங்கி உள்ளார். சீரியல் முழுக்கவே செண்டிமெண்டாக தாய்மை உணர்வுடன் உருகி வருகிறார்.



நன்றி: தினமலர்