பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ரம்யா -


சின்னத்திரை தொகுப்பாளினி, ரேடியோ ஜாக்கி, திரைப்பட நடிகை என பன்முகம் கொண்டவர் ரம்யா. அவரது இன்னொரு புதியமுகம் தற்போது பளு தூக்கும் வீராங்கணை. கடுமையான பயிற்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வீராங்கணையாகியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநில அளவிலான 5வது பளு தூக்கும் போட்டியில் மூன்றவாது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். அடுத்த போட்டியில் தங்கம் வெல்வேன் என்ற அப்போது அவர் கூறியிருந்தார்.


அதன்படி தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் நடந்து வரும் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் 70 கிலோ, 75 கிலோ, மற்றும் 80 கிலோ பிரிவில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் ரம்யா அடுத்து மும்பையில் நடைபெறும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

நன்றி: தினதந்தி