‘பாருக்குள்’ சீரியல்!




சினிமாவில் தான் பெரும்பாலான படங்களில் ‘பார்’ காட்சிகளை பார்க்க முடிகிறது என்றால், சின்னத்திரை யிலும் அது தொடரத் தொடங்கி விட்டது. சமீபத்தில் அடுத்தடுத்து ஒளிபரப்பாகும் நாதஸ்வரம், தெய்வமகள் சீரியல்களை பார்த்தபோது இரண்டிலுமே பார்களில் கதை மாந்தர்கள் குடித்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் குறிப்பாக தெய்வமகள் சீரியலில் பாரில் தன் நண்பர்கள் வட்டாரத்துடன் குடித்துக் கொண்டிருக்கும் இளைஞனைத் தேடி கதையின் நாயகியே பாருக்கு வருகிறாள். உடனே அங்கே குடித்துக் கொண்டிருக்கும் ஒரு கேரக்டர், ‘பொம்பளைங்க கூட இப்ப நேரடியா பாருக்கே குடிக்க வரத்தொடங்கிட்டாங்க’ என்று பேசவும் செய்கிறார். பாருக்குள் சீரியல். சீரியலுக்குள் வீடுகள்.