-
9th February 2013, 04:59 PM
#331
Senior Member
Senior Hubber
சோகத்தின் சோர்வில் சுருண்டாலும் இங்கெமக்கு
யோகத்தைத் தந்தீரே ஆம்..
பழகு தமிழினில் பக்குவமாய்ப் பாக்கள்
அழகாய்ப் புனைந்தீரே ஆம்..
காதலிக்கு அருளும் மதி:வானும் நிலவும்;மதியின் இருமை ஒழுக்கம்:
முப்பாவில் முக்கனியை முற்றுமாய்ச் சாறெடுத்து
தப்பாமல் தேன்தோய்த்தே தந்தவரே - இப்புவியில்
இன்னும் பலவாறாய் இன்பத் தமிழ்க்கவியை
என்றுமே இங்கெனக்குத் தா(ரும்)
Last edited by chinnakkannan; 9th February 2013 at 05:08 PM.
-
9th February 2013 04:59 PM
# ADS
Circuit advertisement
-
9th February 2013, 05:35 PM
#332
Senior Member
Senior Hubber
ஆமாம் சிவமாலா நீங்கள் இட்ட வெண்பாக்கள் எங்கு போயின..?
-
9th February 2013, 06:12 PM
#333
Senior Member
Senior Hubber
படக்கென இங்கே பாய்ந்துவந்த பாக்கள்
தடக்கென மாயமாய்ப் போனாலும் நன்றாக
மஞ்சு மலைமுகட்டை மார்பில் தழுவதற்போல்
நெஞ்சுள்ளே நிற்கும் அவை..
-
12th February 2013, 09:13 PM
#334
Senior Member
Seasoned Hubber
lost for good....cannot be retrieved.
தாளில் எழுதிப்பின் தன்மடி மீதுவைத்துத்
தோளின் சுமைஇறக்கு மாபோலே---மீளவுமே
தட்டச்சு செய்தாலே தான் தொலையா நிற்றலுறும்
விட்டச்சம் வீற்றிருக்க லாம்.
திருத்தம் திறப்படுத்தும் காலை அழிந்தே
உறுத்தி உளைச்சல் உளத்தே -- கருத்திழந்தேன்
தூங்கி அதன்பின் தொடங்கவிலை இன்னுமே
ஆங்கிருப்பின் ஈங்களித்தல் அன்பு.
திரு சி.க அவர்களே! அந்த வெண்பாக்கள் எதிர்பாராதவகையில் அழிந்துவிட்டன. இப்போது ஆர்வமெல்லாம் சற்று தேக்க நிலையை அடைந்துள்ளது.
இவற்றை அலகிட்டுப் பிழைகளைக் கூறுங்கள்.
Your memory so good. You probably had a cursory look at it.... You are able to recall the substance so well.
Last edited by bis_mala; 12th February 2013 at 09:34 PM.
B.I. Sivamaalaa (Ms)
-
12th February 2013, 10:04 PM
#335
Senior Member
Senior Hubber
ஓ..உங்கள் பாட்டுக்கள் போய்விட்டனவா..வருத்தமாக இருக்கிறது.. நான் உங்களைப் போல அதை மேற்கோள் காட்டி மற்ற பாட்டுக்கள் எழுதியிருக்க வேண்டும் ..அது என்ன சி.க அ..என்றெல்லாம் அழைக்கிறீர்கள்.. நான் சி.க என்னைபெ.க ஆக்காதீர்கள்!
அலகிடுவ்தற்கு நான் என்ன கிளியா..
முதல் பாட்டில் இரண்டாம் வரியில் மோனைக்குறைவா.. விட்டச்சம் புரியவில்லை
இரண்டாவதில் சொற்குற்றம் இல்லை பொருட் குற்றம் தான்.. இருந்தால் நானே மீண்டும் போட்டிருக்க மாட்டேனா.. நான் எப்படி ஈங்களிக்க முடியும்..?!
-
13th February 2013, 05:14 PM
#336
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
ஓ..உங்கள் பாட்டுக்கள் போய்விட்டனவா..வருத்தமாக இருக்கிறது.. நான் உங்களைப் போல அதை மேற்கோள் காட்டி மற்ற பாட்டுக்கள் எழுதியிருக்க வேண்டும் ..அது என்ன சி.க அ..என்றெல்லாம் அழைக்கிறீர்கள்.. நான் சி.க என்னைபெ.க ஆக்காதீர்கள்!
அலகிடுவ்தற்கு நான் என்ன கிளியா..
முதல் பாட்டில் இரண்டாம் வரியில் மோனைக்குறைவா.. விட்டச்சம் புரியவில்லை
இரண்டாவதில் சொற்குற்றம் இல்லை பொருட் குற்றம் தான்.. இருந்தால் நானே மீண்டும் போட்டிருக்க மாட்டேனா.. நான் எப்படி ஈங்களிக்க முடியும்..?!
..................
-
13th February 2013, 06:01 PM
#337
Senior Member
Seasoned Hubber
Suggestion
"தோளின் சுமைஇறக்கும் தோரணையில்"
என்று பாடினால் பொருத்தமாய் இருக்குமா பாருங்கள்! மோனை வந்துவிடுமா.....
-
13th February 2013, 06:29 PM
#338
Senior Member
Seasoned Hubber
இன்னொன்று. தோளில் என்பதில் தோ என்பது நெடில். "மாபோல" (ஆ போல, அது போல) என்பதில் ஆவும் நெடில் மீள என்பதில் மீ என்பதும் நெடில். இதில் நெடில் வண்ணம் பயில்கின்றதன்றோ? ஆகவே வண்ணம் மேற்கொண்டு மோனை தவிர்க்கக்கூடாதா?
-
13th February 2013, 08:23 PM
#339
Senior Member
Senior Hubber
ஓ தாராளமாக..ச் செய்யலாம்.. சில சமயங்களில் நான் அங்ஙனம் செய்வதுண்டு...
பாலகன் போலே பணிவை முகம்காட்டி
வாலண்டைன் டேயென வாலாட்டித் தாவுமே
பாதகப் புன்னகை பக்குவமாய்ச் செய்தபடி
காதலிப் பூனையைக் கண்டு
-
13th February 2013, 10:21 PM
#340
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
chinnakkannan
ஓ தாராளமாக..ச் செய்யலாம்.. சில சமயங்களில் நான் அங்ஙனம் செய்வதுண்டு...
பாலகன் போலே பணிவை முகம்காட்டி
வாலண்டைன் டேயென வாலாட்டித் தாவுமே
பாதகப் புன்னகை பக்குவமாய்ச் செய்தபடி
காதலிப் பூனையைக் கண்டு
காதலி எப்படிப் பூனை?
காதலன் புன்னகை பாதகப் புன்னகையா?அந்தப்புன்னகையின் போது காதலன் வாலாட்டுகிறானா? அதனால்தானா வாலன்டைன் என்று வந்தது?
Bookmarks