-
19th October 2015, 10:20 AM
#11
Junior Member
Devoted Hubber
உன்னதமாய் நண்பரோடு என் மகன் ஆடுகிறான்
உன்மத்தமாய் யாருடனோ அவன் பாடுகிறான்
உறக்கத்தில் யாரையோ தினம் தேடுகிறான்
உண்மையென்ன சொல்லுங்கள் டாக்டர்
கண்மணியின் கவலை இது கலங்கினாள்
கண்ணன் சின்ன குழந்தை அவன்
கண்முன் தான் யாரும் இல்லையே இதன்
காரணம் என்ன டாக்டர் ?
கவலை வேண்டாம் - டாக்டர் தில்லை
காரணம் இது மனநோய் இல்லை
கற்பனைக்கு கடிவாளம் இல்லை குழந்தை
கண்ணனுக்கு ஒன்றுமேயில்லை
கூட்டி வா உன் மகனை சரியாகும்
கூட வந்த கணவனுக்கோ ஆச்சரியம்
அதெப்படி சாத்தியம் டாக்டர்
அவளுக்குத்தான் மகனே இல்லையே !
Last edited by Muralidharan S; 19th October 2015 at 11:09 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
19th October 2015 10:20 AM
# ADS
Circuit advertisement
Bookmarks