Page 62 of 63 FirstFirst ... 125260616263 LastLast
Results 611 to 620 of 626

Thread: TV tid bits

  1. #611
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சமூக சேவையில் ஆத்மதிருப்தி கிடைக்கிறது! மாரி ஜார்ஜ்


    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்து வருபவர் ஜார்ஜ். அதோடு, மாரி, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் செய்யலாம் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சமூக சேவையில் ஆர்வம் கொண்டவரான ஜார்ஜ், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றிய பிள்ளைகள் உள்ளிட்ட பலரது திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களுக்கு உதவிகள் பெற்று தருகிறார்.


    இதுபற்றி ஜார்ஜ் கூறுகையில், சென்னை ஸ்பெசல் ஒலிம்பிக் என்ற பெயரில் வருடந்தோறும் நிகழ்ச்சி நடத்துகிறேன். இதில், முழுக்க முழுக்க உடல்ஊனமுற்ற பிள்ளைகள் 75 சதவிகிதமும், மனநலம் குன்றிய பிள்ளைகள் 25 சதவிகிதமும் இருப்பார்கள். எல்கேஜி பிள்ளைகளுக்கு நடத்துவது போன்ற விளையாட்டு போட்டிகள் வைப்போம். கடந்த மூன்று வருடங்களாக இதை நடத்தி வருகிறேன். எனக்கென ஒரு டீம் உள்ளது. இதற்கு என்ஜிஓக்கள் வந்து கலந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஸ்பான்சர் செய்வார்கள். பிள்ளை களுக்கு உணவுகள் வழங்குவார்கள். சான்றிதழ், மெடல் எல்லாம் கொடுப்பார்கள்.


    மேலும், சமீபத்தில் கண்ணு தெரியாத ஒரு பெண்ணுக்கு ஜி.வி.பிரகாஷ் பாட வாய்ப்பு கொடுத்தார் அல்லவா. ஆனால் நாங்கள் அந்த மாதிரி பெண்ணுக்கு உதவிகள் செய்ய மாட்டோம். அந்த பெண்களை இந்த நிலைமைக்கு கொண்டு வர அவரது பெற்றோர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்கள். அதனால் அவர்க ளுக்குத்தான் நாங்கள் உதவிகளும், விருதும் கொடுப்போம். அதுவும் வீடுதேடி சென்றே கொடுப்போம்.


    அதேமாதிரி சென்னையில் வெள்ளம் வந்தபோது ஒரு தம்பதியினர் இலவசமாக மெழுகுவர்த்தி கொடுத்தார்கள். அவர்களையெல்லாம் உற்சாகப்படுத்தினால் இன்னும் பெரிய அளவில் சமூக சேவை செய்வார்களே என்பதால், அவர்கள் பேமிலி மெம்பர்களை வைத்தே அவர்களுக்கு விருது கொடுக்க வைத்தோம். அப்படி செய்வதால் அவர்களது பேமிலியும் அவர்கள் செய்த சமூகசேவையை பற்றி உணருவார்கள். முன்பு எதற்கு இந்த தேவையில்லாத வேலை என அவர்களை திட்டியவர்கள் கூட நாங்கள் உற்சாகப்படுத்துவதைப் பார்த்து அவர்களை அங்கீகரிப்பார்கள்.


    .அவர்களுக்கு ஒரு விருது கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பு கொடுத்து, இவர்களுக்கு அவர்களை உதவி செய்ய வைப்போம். அதன்பிறகு அந்த சமூகஆர்வலர்கள் அவர்களிடம் உதவி பெற்று இன்னும் அதிகப்படியான சமூகசேவை செய்வார்கள். பின்னர் எங்களுக்கும் அவர்களுக்குமிடையே தொடர்பு இருக்காது. 1998ல் இருந்து இந்த விசயத்தை தொடர்ந்து செய்து வருகிறேன்.


    இப்போது நான் ஓரளவு முகம் தெரிந்த நடிகராகிவிட்டதால், இந்த உதவியை இன்னும் அதிகப்படியாக செய்யவிருக்கிறேன். டைரக்டர் பாலாஜிமோகன் என்னோட சோசியல் ஒர்க் ப்ரண்டுதான். தனுசும் என்னோட ஈவன்டுகளுக்கு வந்திருக்கிறார். முக்கியமாக நாங்கள் எந்த டோனர்களிடம் பணம் வாங்குவதில்லை. ஈவண்டில் கலந்து கொள்ளும் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை அவர்களை செய்து கொடுக்க சொல்லி விடுவேன். சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்றுதிறனாளி, மனநலம் குன்றிய பிள்ளைகளை உற்சாகப்படுத்தவே இதை செய்து வருகிறேன். இதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைக் கிறது என்கிறார் அது இது எது ஜார்ஜ்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #612
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    ஆண்களை சீரியல் பார்க்க வைத்தது நான்தான்! - நாகினி மெளனிராய்




    பாலிவுட் திரையுலகில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகை களும் பரபரப்பு வளையத்திற்குள் சிக்கிக்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், இந்தியில் உருவாகி தமிழில் நாகினி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் நாகினி சீரியலில் நாயகியாக நடித்துள்ள மெளனிராயும் பரபரப்பாக பேசப்படும் நடிகையாகியிருக்கிறார்


    .காரணம், சீரியல்களில் குடும்பப்பாங்காக நடித்து வரும் அவர், நிஜத்தில் பயங்கர மாடர்ன் பெண். அதோடு, தான் பிகினி உடையணிந்து நீந்திக்குளிக்கும் போட்டோக்களையும் இணையதளங்களில் வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். அதன்காரணமாக, நாகினி சீரியல் இந்தியில் வெளியானபோது பெண்களை விட ஆண்கள்தான் அந்த சீரியலை வெகுவாக ரசித்தார்களாம். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள மெளனிராய், மற்ற நடி கைகள் பெண்களை சீரியல் பார்க்க இழுத்தனர். ஆனால் நான்தான், பெருவாரியான ஆண்களையும் சீரியல் பார்க்க வைத்தேன். இந்த பெருமைக்குரிய ஒரே நடிகை நான் மட்டுமே என்று கூறியுள்ளார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  4. #613
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    யூ டியூப் சேனலில் கலக்கும் ஸ்ரீரஞ்சனி


    விஜய் டி.வியிலும், புதுயுகம் சேனலிலும் நிகழ்ச்சி தொகுப்பு, நடனம் என்று கலக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீரஞ்சனி. கல்யாணம் முதல் காதல் வரை ஹீரோ அமித் பார்கவை காதலித்து திருமணம் செய்து கொண்டபிறகு சத்தமின்றி சின்னத்தரையிலிருந்து ஒதுங்கி விட்டார்.


    ஆனால் மீடியாவின் இன்னொரு தளத்தில் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூ டியூப் சேனலில் ரீல் அந்து போச்சு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு செம ரெஸ்பான்ஸ். இதுதவிர வெளிவரும் படங்களை விமர்சிக்கிறார். டுவிட்டர் பேஸ்புக் மூலம் திரைப்படங்களை புரமோட் செய்கிறார். இதற்கெல்லாம் காதல் கணவர் மிகவும் ஒத்துழைக்கிறாராம்.


    கணவர் அமீத் பார்கவ் தற்போது கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். கணவர் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கும் யோசனையிலும் இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி. டெக்னாலஜி வளரும்போது நாமும் அப்டேட் ஆகிக்கணும். ஒரே இடத்துல நிற்ககூடாது என்கிறார் ஸ்ரீரஞ்சனி.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  5. #614
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நடிப்புக்கு பிரேக் கொடுத்த சுஜிதா!


    குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கியவர் சுஜிதா. அதன்பிறகு சீரியல்களில் லீடு ரோல்களில் கணவருக்காக, மகாராணி, மருதாணி, விளக்க வச்ச நேரத்திலே, மைதிலி, ஒரு கை ஓசை என பல சீரியல் களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்த சுஜிதாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரியல்களில் காண முடியவில்லை.


    என்ன காரணம்? என்று சுஜிதாவைக் கேட்டால், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சீரியல்களில் நடிக்காமல் பிரேக் கொடுத்ததற்கு என் மகன்தான் காரணம். அவன் குழந்தையாக இருந்தபோது என்னை தேடமாட்டான். ஆனால் ஓரளவு விவரம் தெரிந்த பிறகு நான் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவனுக்காக இரண்டு வருடங்களாக சீரியல்களில் நடிக்கவிலை. தற்போது பிரீகேஜி படிக்கும் அவன், விரைவில் எல்கேஜி படிக்கப்போகிறான்.


    அதனால், மீண்டும் நான் நடிக்க தயாராகி விட்டேன். ஏற்கனவே நடித்தது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறும் சுஜிதா, ஒரு அம்மாவாக இருந்து பாச உணர்வுகளை வெளிப்படுத்திய எனக்கு இப்போது செண்டிமென்ட் வேடங்களில் கிடைத்தால் உணர்வுப்பூர்வமாக நடித்து நேயர்களை உருக வைத்து விடுவேன் என்கிறார்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #615
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like



    சின்னத்திரைக்கு டாடா காட்டிய நாகினி மெளனிராய்


    கடந்த பத்து ஆண்டுகளாக இந்தி சேனல்களில் டிவி தொடர், ஸ்டேஜ் ஷோக்களில் பங்கேற்று வந்தவர் மெளனிராய். குறிப்பாக பாலிவுட் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் கவர்ச்சிகரமாக தோன்றி கலக்கியவர் மெளனிராய். அவர் இந்தியில் நடித்த நாகினி சீரியல், தமிழிலும் ஒளிபரப்பாகி நாகினிராயை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் அடுத்து தமிழில் டப்பாகி வெளியாகும் நிலையில், அடுத்தபடியாக நாகினி தொடரில் மூன்றாம் பாகம் இந்தியில் படமாக்கப்படுகிறது.


    ஆனால், நாகினி தொடரின் முதல் இரண்டு பாகங்களில் நடித்த மெளனிராய், மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை. காரணம், இந்தியில் நடிகர் சல்மான்கான் தயாரிக்கும் ஒரு படத்தில் மெளனிராய்க்கு கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது. அந்த படத்தில் நாயகனாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை முன்பே முடிந்து விட்டதால், நாகினி மூன்றாம் பாகத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வருவதற்கு முன்பே, தான் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போவதை சொல்லி சீரியலில் இருந்து விலகிக்கொண்டுள்ளாராம் மெளனிராய்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #616
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டிவி நடிகர் பிரதீப் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை


    சுமங்கலி சீரியல் நாயகன் பிரதீப் கடந்த 3-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி செய்தி தமிழ், தெலுங்கு சீரியல் வட்டார நடிகர் நடிகைகளை உறைய வைத்தது. இதனால் சென்னையில் உள்ள சின்னத்திரை வட்டாரங்களில் அனைவரும் கவலையான முகத்துடன் காணப்பட்டனர்.


    மேலும், நடிகர் பிரதீப்பின் மரணம் தற்கொலை என்றபோதும், அவரது உடம்பில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டதால், யாரேனும் அவரை கொலை செய்திருப்பார்களோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உடலை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தற்போது அவரை யாரும் கொலை செய்யவில்லை. தற்கொலைதான் என்று மருத்துவ பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில், பிரதீப்பின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஐதராபாத் போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக, பிரதீப்பின் மனைவியும், நடிகையுமான பாவனி ரெட்டியின் உறவினர் ஷெராவன் என்பவரும் அவர்களது வீட்டில் தங்கியிருந்ததால், பிரதீப்பின் தற்கொலையில் அவருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #617
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விபத்தில் உயிரிழந்தது நானில்லை : நடிகை ரேகா விளக்கம்


    வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகை ரீகா சிந்து மரணம். பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பொழுது, விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.


    இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தது தெய்வ மகள் சீரியல் அண்ணியார் நடிகை காயத்ரி ரேகா என தகவல் பரவியது. இதனால் சினி உலகம் பரபரப்பானது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தது தான் இல்லை என ரேகா விளக்கம் அளித்துள்ளார். <br><br>வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் காயத்ரி ரேகா அளித்துள்ள விளக்கத்தில், கடவுள் அருளால் நான் நலமுடன் உள்ளேன். விபத்தில் சிக்கி உயிரிழந்தது வேறு சிந்து ரேகாவாக இருக்கலாம். நான் எனது குடும்பத்துடன் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    கார் விபத்தில் சின்னத்திரை நடிகை மர்ம மரணம்


    வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த டிவி துணை நடிகை ரீகா சிந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரில் அவருடன் வந்த மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.<br><br>பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் சாலையின் தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் ரீகாவுடன் வந்த அவரது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களும் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ரீகாவின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
    <hr>
    அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருந்த போது ரீகா மட்டும் எப்படி காரில் இருந்து வெளியே வீசப்பட்டார் எனவும், விபத்து என்றால் உடன் வந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடியது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம், சந்தீப்குமார் என்ற சின்னத்திரை நடிகர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரீகாவும் மர்மமான முறையில் இறந்துள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #618
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் சின்னத்திரையில் ரோகினி


    நடிகை ரோகினி தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அதுமட்டுமல்ல ஆவணப்பட இயக்குனர், குறும்பட இயக்குனர், திரைப்பட இயக்குனர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சமூக ஆர்வலர் என பல முகங்களை கொண்டவர். கங்கா என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். அதன்பிறகு கேள்விகள் ஆயிரம், அழகிய தமிழ் மகள், ரோகினியின் பாக்ஸ் ஆபீஸ், கேள்வி நேரம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


    >தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறார். லைட்ஸ் கேமரா ஆக்ஷ்ன் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இது சினிமா தொடர்பான நிகழ்ச்சி. சினிமா செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேட்டி என கலவையாக ஒளிபரப்பாகிறது. நேற்று (30ந்தேதி) ஒளிபரப்பை தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வார நாட்களில் மறு ஒளிபரப்பாகும்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  10. #619
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஆங்கிலத்தில் பேசவே ஆடியோ விழாவுக்கு அழைத்தனர் - பாவனா


    சினிமா படங்களின் ஆடியோ விழாக்களுக்கு சின்னத்திரையில் இருந்து ரம்யா, அஞ்சனா போன்ற தொகுப்பாளினிகள்தான் சமீபகாலமாக பங்கேற்று வருகிறார்கள். ஆனால், சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஏன்டா தலையில எண்ண வைக்கல படத்தின் ஆடியோ விழாவுக்கு எதிர்பாராதவிதமாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வந்திருந்தார்.


    அப்போது அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதையடுத்து பேசிய பாவனா பாலகிருஷ்ணன், நான் இதுவரை எந்த சினிமா படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இந்த நிகழ்ச்சிக்கு திடீரென்று அழைத்தபோது என்னை எதற்காக அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதனால் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்க வேண்டியுள்ளது. அதன்காரணமாகத்தான் உங்களை அழைத்தோம் என்று சொன்னார். நான் இந்த ஆடியோ விழாவிற்குள் வந்தது இப்படித்தான் என்று கூறிய பாவனா, தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி தொகுத்து வழங்கினார்.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #620
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டிடிக்கு போட்டியாக சுஹாசினியை களம் இறக்குகிறது ஜீ தமிழ்


    விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான காப்பி வித்த டிடி ரொம்பவே பாப்புலர். திரைப்பட நட்சத்திரங்கள் டிடி நடத்தும் நிகழ்ச்சியென்றால் மறுப்பேதும் சொல்லாமல் செல்வார்கள். அந்த அளவிற்கு டிடி நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலம். மற்றும் செல்லப்பிள்ளை. தற்போது புதிய பொலிவுடன் சில மாற்றங்களுடன் அதே நிகழ்ச்சி அன்புடன் டிடி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.<br>இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் சேனல் வீக்கெண்ட் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை இன்று முதல் (ஏப்ரல் 30) ஒளிபரப்புகிறது. இது ஒவ்பொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணக்கு ஒளிபரப்பாகும். வார நாளில் மறு ஒளிபரப்பாகும். இதனை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார். திரைப்பட நட்சத்திரங்களை ஜாலியாக பேட்டி எடுக்கும் அதே நிகழ்ச்சிதான் இதுவும். எந்த மாதிரியான அம்சங்கள் புதிதாக இருக்கும் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது தெரியும்.


    இந்த நிகழ்ச்சி குறித்து சுஹாசினி கூறியிருப்பதாவது: நிறைய சேனல்களில் நிறைய பேர் செலிபிரிட்டி சாட் ஷோ பண்றாங்க. அதையே நாமும் பண்ணணுமானுன்னு யோசித்தேன். ஆனால் அவர்கள் நம்முடன் பேசுகிற அந்த கொஞ்ச நேரத்தில் அவர்களோடு வாழ்க்கையையே திரும்பி பார்க்கிறது அற்புதமாக இருக்கும். அதனால் பண்ணலாமேன்னு தோணிச்ச்சு. பண்ண முடிவு பண்ணிட்டேன். எனக்கு எல்லா செலிபிரிட்டியும் தெரியும். ஆனால் அவுங்க பர்சனல் பற்றி தெரியாது. தெரிஞ்சுக்குவோம். அவுங்க என்னோட பேசுவாங்க. என்கிறார் சுஹாசினி.

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Page 62 of 63 FirstFirst ... 125260616263 LastLast

Similar Threads

  1. Musicians,events,anecdotes and tid-bits
    By rajraj in forum Indian Classical Music
    Replies: 223
    Last Post: 16th November 2020, 09:33 AM
  2. IR music bits as ringtone (mp3)
    By dochu in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 8
    Last Post: 17th June 2009, 03:05 PM
  3. Tid Bits Memories of Yesteryears
    By R.Latha in forum Memories of Yesteryears
    Replies: 0
    Last Post: 24th April 2009, 01:18 PM
  4. Tit Bits
    By R.Latha in forum TV,TV Serials and Radio
    Replies: 5
    Last Post: 1st March 2009, 12:13 AM
  5. THAMIZH - THULHIHALH (Tamil Tit-Bits & Episodes)
    By Oldposts in forum Tamil Literature
    Replies: 62
    Last Post: 29th January 2009, 10:02 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •