-
15th November 2011, 11:54 AM
#1051
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன்,
'நடிகர்கள் திடீர் அரசியல் தலைவர்கள் ஆவது' பற்றிய விவாதத்தைத் துவக்கி வைத்து நடிகர்திலகம் அளித்த கருத்துக்கள் அடங்கிய 'முத்தாரம்' இதழின் அரிய பக்கங்களை தொகுத்தளித்தமைக்கு நன்றி.
நண்பர் சுப்புராஜ் சொன்னது போல, மக்கள் திலகம், நடிகர்திலகம், இலட்சிய நடிகர் போன்ற ஆழமான அரசியல் அடித்தளம் அமைந்த நடிகர்களுக்கு இத்தலைப்பு பொருந்தாது. எஸ்.எஸ்.ஆர். கூட பிற்காலத்தில் 'பசும்பொன் பேரவை'யோ ஏதோ ஒரு தலைப்பில் ஒரு இயக்கம் ஆரம்பித்து விட்டு பின்னர் அவரே அதை மறந்து விட்டார்.
அரிய ஆவணப்பதிவுகளை அளித்தமைக்கு நன்றி.
(பொம்மை இதழில் கூட 1976 வாக்கில், 'அரசியலில் நடிகனும் அவன் ஆற்றும் கடமையும்' என்ற தலைப்பில் நடிகர்திலகம் எழுதியிருந்தார். அக்கட்டுரையின் இடையிடையே 'நாம் பிறந்த மண்' படக்காட்சிகள் இடம்பெற்றிருந்தன).
-
15th November 2011 11:54 AM
# ADS
Circuit advertisement
-
15th November 2011, 12:41 PM
#1052
Senior Member
Diamond Hubber
சாரதா மேடம், முரளி சார் மற்றும் நம் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட சூப்பர்ஹிட் பாடலான 'அன்னை இல்லம்' திரை ஓவியத்தின் "மடிமீது தலை வைத்து"பாடல் வீடியோவாக.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 15th November 2011 at 05:07 PM.
-
15th November 2011, 01:23 PM
#1053
Senior Member
Diamond Hubber
அன்பு நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. நாம் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் திலகத்தின் 230- ஆவது காவியமான 'ஊரும் உறவும்' திரைப் படம் ராஜ் வீடியோ விஷன் மூலம் நெடுந்தகடாக வர உள்ளதற்கான வாய்ப்புகள் தெரிய ஆரம்பித்து உள்ளது.. 'ஊரும் உறவும்' நெடுந்தகட்டின் அட்டை முகபபிற்காக 'Spaark Media' நிறுவனம் வடிவமைத்துள்ள Design cover வடிவம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. நெடுந்தகட்டின் விலை ரூ 199/- எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
அன்புடன்,
வாசுதேவன்.
-
15th November 2011, 04:32 PM
#1054
Senior Member
Diamond Hubber
-
15th November 2011, 04:55 PM
#1055
Senior Member
Diamond Hubber
'செல்வம்' 46-ஆவது ஆண்டு தொடக்க விழா சிறப்பு நிழற்படம்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 15th November 2011 at 05:01 PM.
-
15th November 2011, 05:36 PM
#1056
Senior Member
Diamond Hubber
'நடிகர் திலகம்' திரியின் சாதனை.
நமது திரி (நடிகர் திலகம் பாகம் 7) 500-பக்கங்களைத் தாண்டி இமாலய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமான நமது அன்பு மாடரேட்டர்களுக்கும், நமது 'ஹப்' அங்கத்தினர்களுக்கும், குறிப்பாக கடல் கடந்த நாடுகளில் இருக்கும் நமது 'ஹப்' அங்கத்தினர்கள் அனைவருக்கும், அங்கத்தினர்களாக இல்லாவிடினும் நமது திரியை நாள்தோறும் படித்து இன்புறும் அனைத்து ரசிகர்களுக்கும், திரியை சிறப்பாக நடத்த பேருதவி புரிந்து கொண்டிருக்கும் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கும், மற்ற இதர அனைவருக்கும் நமது திரியின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றிகளை உளமாரத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் ஆதரவும், நமது இதய தெய்வத்தின் ஆசிகளும் பரிபூரணமாக இருக்கும் வரையில் நமது திரி வரலாற்று சாதனைகளைப் படைக்கப் போவது திண்ணம்.
வாழ்க நடிகர் திலகத்தின் வானளாவிய புகழ்!...
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 15th November 2011 at 06:29 PM.
-
15th November 2011, 08:58 PM
#1057
Junior Member
Senior Hubber
HEARTIEST CONGRATS FOR successful run of 500 pages. All credits to our GOD nadigarthilagam and sivaji fans wo are always most sincere and devoted to their GOD by birth.
ANNAI ILLAM pictures and our favorite heroine devika and NADIGARthilagam duet song well inserted in the thiri. kudo to friend vasudevan oNE OF MY VERY CLOSE FRIEND WHO IS ALSO sivaji fan and prefers devika as the best suied heroine for sivaji, has not taken food for many days when devika first and last time with mgr.
Regarding SELVAM, a movie which had made other side's mega colorful movie nowhere.
great days to remember.
-
15th November 2011, 11:18 PM
#1058
இந்த திரி ஐநூறு பக்கங்களை என்ன ஐயாயிரம் பக்கங்களையும் தாண்டும். பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.
வாசு சார்,
மடி மீது பாடல் காட்சிக்கு நன்றி. முன்பொரு முறை சரியாக சொல்லவேண்டுமென்றால் 2009 ஜூன்-ல் இந்தப் பாடலை பற்றி, அந்த போஸைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதைதான் சாரதா எழுதியிருக்கிறார். அந்த சில வரிகள் மீண்டும் உங்களுக்காக.
In Annai Illam, the வீணை வாசித்துக் கொண்டே ஏழு சுரங்களை வைத்து சிலேடை செய்யும் காட்சியில் நளினம் இருக்கும். ஆனால் அடுத்த பாடல் காட்சி இருக்கிறதே அது சூப்பர்.
குறிப்பாக இரண்டாவது சரணம். ஏற்றமும் இறக்கமுமாக உள்ள மணல் திட்டுகள். ஒன்றில் இறங்கி ஒன்றில் ஏறி, தேவிகா ஒரு சைடு போஸ்-ல் காலை சற்றே சாய்த்து நின்று இடது கை ஆட்காட்டி விரலால் வானத்தைக் காட்டி
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
என்று பாடியவுடன் நடிகர் திலகமும் மேலே ஏறி வந்து சேர்ந்து நின்று பின்னணி இசை இல்லாமல் சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே என்று பாடுவார். பிறகு இருவரும் மணலில் அமர்ந்து
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவோம்
என்று முடிக்கும் போது தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த ஒரு ரொமான்ஸ் பாடல் அங்கு முழுமை பெறும்.
அன்புடன்
-
15th November 2011, 11:34 PM
#1059
Senior Member
Senior Hubber
I dont know whether someone posted this here so i'm posting this.
Nice to See Major Sundarrajan &TMS singing Andha naal gnyabakam live at Sivaji function
Last edited by rajeshkrv; 15th November 2011 at 11:37 PM.
-
16th November 2011, 05:53 AM
#1060
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்,
லட்சுமி கல்யாணம், பரீட்சைக்கு நேரமாச்சு, சிவந்த மண், அன்னை இல்லம், செல்வம் என இந்தத் திரியை அட்டகாசமாகக் கொண்டு செல்கிறீர்கள். பம்மலாரும் நீங்களும் ஆற்றும் சேவைகளுக்கு நடிகர் திலகம் கூடவே துணை வந்து கொண்டு பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டுள்ளார். அவருடைய ஆசிகள் தங்களுக்கு பரிபூரணமாக உண்டு.
டியர் முரளி சார்,
அன்னை இல்லம் பற்றிய தங்கள் பதிவு நினைவூட்டல் மீண்டும் அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்கின்றன.
சகோதரி சாரதா,
தங்களுடைய சிவந்த மண் நினைவூட்டல் பதிவுக்கு மிக்க நன்றி. இதுவரை அதைப் படிக்காதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டியர் வாசுதேவன் சார்,
எல்.ஐ.சி. கட்டிடத்தின் மொட்டை மாடியில் சிவப்பு விளக்கு எரியுதம்மா பாடலும் அதற்குப் பின் வீட்டில் தாயாரின் மங்களமான முகத்தையும் பார்த்து மகிழ்வதும், அதே சமயம் தந்தையின் தண்டனை நினைவுக்கு வருவதையும் பிரதிபலித்து, உண்ணும் போது பரிமாறும் தாயாரின் தாலி ஆடும் போது, அதனுடைய ஊசலாட்டத்தையும் நினைத்து மனம் நெகிழ்வதும்...
வசனமே இல்லாத இந்த ஒரு காட்சிக்கே உலகில் யாரும் ஈடு இணையில்லாத நடிகர் சிவாஜி கணேசன் என்று நாம் மார்தட்டிக் கொள்ளாம்.
வாசுதேவன் சார், முடிந்தால் அந்தக் காட்சியை பதியுங்கள். பாடல் காட்சியைத் தனியாகவும் அந்தக் காட்சியைத் தனியாகவும் தரவேற்றலாம்.
ஊரும் உறவும் தகவலுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks