Page 43 of 410 FirstFirst ... 3341424344455393143 ... LastLast
Results 421 to 430 of 4092

Thread: Manidharul Punithar, Maha-Avatar RAJINIKANTH News and Update

  1. #421
    Senior Member Veteran Hubber hamid's Avatar
    Join Date
    Jul 2008
    Location
    Doha, Qatar
    Posts
    3,627
    Post Thanks / Like
    தமிழக முதல்வர் கருணாநிதி யாரை அணைத்துக் கொண்டாலும் அவர் பெரிய ஆளாகிவிடுவார். அவர் யாரையாவது தள்ளிவிட்டாலும் கூட அவர்கள் பெரிய இடத்துக்குப் போய்விடுகிறார்கள் என்றார் ரஜினி காந்த்.

    சிவாஜி - தி பாஸ் படத்துக்காக 2007ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற ரஜினி தனது ஏற்புரையில் இப்படிப் பேசினார்:

    "ரொம்ப சந்தோஷமான நிகழ்ச்சி இந்த விழாவில் நடந்தது. எனக்கு தெரிந்து எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சேர்ந்து ஒரு பரிசை கலைஞருக்கு கொடுத்து இருக்க மாட்டார்கள். அந்த வாய்ப்பு எனக்கும், கமலுக்கும் கிடைத்தது மிகப் பெரிய பாக்கியம்.

    'உடல் நலக்குறைவாக இருந்ததால், கொஞ்சம் தூங்கி விட்டேன். சற்று தாமதமாக விழாவுக்கு வருகிறேன்' என்று எங்களிடம் கலைஞர் சொன்னார். அந்த பண்பு, அடக்கத்தை எப்படி சொல்வது?. அய்யா நீங்க நல்லாயிருக்கணும்.

    கலைஞர் எத்தனை மேடுகள், சிகரங்களைப் பார்த்தவர்.. எத்தனையோ மேடுகளும், சிகரங்களும் காணாமல் போனதையும் பார்த்திருக்கிறார். அவர் யாரை அணைத்துக் கொண்டாலும் அவர் பெரிய ஆளாகி விடுவார். அதேபோல் அவர் யாரை தள்ளினாலும் பெரிய ஆளாகி விடுவார்கள். இல்லையென்றால், சாய் பாபா அவருடைய வீட்டுக்கு வந்திருக்க மாட்டார்.

    என்னையும் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி!:

    'சிவாஜி' படத்துக்காக, கலைஞர் கையினால் பரிசு பெற்றது, மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த படத்தை தயாரித்த ஏவி.எம்.சரவணனுக்கு என் மனமார்ந்த நன்றி. படத்தை இயக்கிய ஷங்கருக்கு என் மனமார்ந்த நன்றி.

    நான் திரையுலகுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. கதாநாயகன் ஆகி 32 வருடங்கள் ஆச்சு. என்னை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டர்களுக்கும், என்னை ஏற்றுக்கொண்டு என் படங்களை ரசித்த ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..." என்றார் ரஜினி.

    http://thatstamil.oneindia.in/movies...-function.html
    Come back strong.. Come back soon..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #422
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    "நான் திரையுலகுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. கதாநாயகன் ஆகி 32 வருடங்கள் ஆச்சு. என்னை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டர்களுக்கும், என்னை ஏற்றுக்கொண்டு என் படங்களை ரசித்த ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..." என்றார் ரஜினி. "

    why sudden nanri for all of them? enthiran last film?
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  4. #423
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
    why sudden nanri for all of them? enthiran last film?
    sakala..
    unga personal wish paththi ellaam ethukku inga paesureenga

  5. #424
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    after enthiran he has sultan and probably more animation films, i dnon't have any wish that he shud retire or so.. i know well that industry will keep kamal & rajini alive in animated avatars, even after they retire
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  6. #425
    Senior Member Regular Hubber rifath's Avatar
    Join Date
    Nov 2009
    Posts
    373
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
    after enthiran he has sultan and probably more animation films, i dnon't have any wish that he shud retire or so.. i know well that industry will keep kamal & rajini alive in animated avatars, even after they retire
    neengal solvathu 100% sari

  7. #426
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    Quote Originally Posted by sakaLAKALAKAlaa Vallavar
    "நான் திரையுலகுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. கதாநாயகன் ஆகி 32 வருடங்கள் ஆச்சு. என்னை கதாநாயகனாக போட்டு படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டர்களுக்கும், என்னை ஏற்றுக்கொண்டு என் படங்களை ரசித்த ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..." என்றார் ரஜினி. "

    why sudden nanri for all of them? enthiran last film?
    sema catch sakala...
    thalaivar edho clue kudutthirukkaarnu nenakkiraen...
    Sach is Life..

  8. #427
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    243
    Post Thanks / Like
    ரஜினி படத்துல மொட்டை போட்டதற்க்கு ஸ்டேட் அவார்டு முதல்வர் கொடுத்துட்டார். அப்படியே நேசனல் அவார்டும் வாங்கி கொடுத்து இருக்கலாம். :P

  9. #428
    Senior Member Veteran Hubber
    Join Date
    Oct 2004
    Location
    Kailash
    Posts
    2,121
    Post Thanks / Like
    Quote Originally Posted by RajaRam
    ரஜினி படத்துல மொட்டை போட்டதற்க்கு ஸ்டேட் அவார்டு முதல்வர் கொடுத்துட்டார். அப்படியே நேசனல் அவார்டும் வாங்கி கொடுத்து இருக்கலாம். :P
    athe mathiri haalywood-la ungalaukku ' Vela Vetiyila paiyan' endra thalaipil, ungalukku ascaar award kudukanum. Intha awaard- baraak obaama kodukaporarm-ko

    Honestly, you worry me big time, get some anti-biotic to make u normal!

  10. #429
    Senior Member Veteran Hubber hamid's Avatar
    Join Date
    Jul 2008
    Location
    Doha, Qatar
    Posts
    3,627
    Post Thanks / Like
    http://www.padikkathavan.blogspot.com/


    Is there at least one film he has missed???

    வெள்ளித்திரை நட்சத்திர மண்டலத்தில்
    அபூர்வ ராகங்கள் முழங்க
    சூப்பராய் உதித்த ஸ்டார் நீ !

    காலப்போக்கில்
    உச்ச நட்சத்திரமாய் நீ மின்ன
    மற்றவை எல்லாம்
    மிச்ச நட்சத்திரங்களாய் மாறிப் போயின !
    ஏன் தெரியுமா?
    நட்சத்திரங்களில் நீ ஒரு
    சிவப்பு சூரியன் என்பதால்தான்!


    நீ
    அசாதாரணமான ஒரு
    உச்சரிப்பை
    அறிமுகப்படுத்தினாய் ! - அது
    அத்தனை பேர் செவிகளிலும்
    பைரவியாய் !


    உன்
    வல்லின மெல்லினங்களில்
    வள்ளிசாய் வசப்பட்டோம் நாங்கள் !


    உனக்கு
    சரியாகத்தான் பெயர் வைத்தார்கள் -
    ரசினி என்று !
    ஆம் !
    பார்க்கும்போதே
    ரசி - நீ, ரசி - நீ என்று எல்லோரையும்
    தூண்டுவதால்தான்
    நீ
    'ரசினி' ஆனாய் போலும் !



    யார்க்கும் நான் அடிமை இல்லை
    இது
    நான் போட்ட சவால்!
    ஆனால்
    என்றைக்கு நீ
    என்னை வாழ வைத்த தெய்வம் என்று
    உச்சிக்கு உயர்த்தினாயோ -
    அன்று முதல்
    உன் அன்புக்கு நான் அடிமை ஆனேன்..!





    ஆயிரம் ஜென்மங்கள் காத்திருந்து
    வணக்கத்துக்குரிய காதலிக்கு
    அக்னி சாட்சியாய்
    மூன்று முடிச்சு போட்டு
    மாப்பிள்ளை ஆனாய் நீ !
    அது உனக்கு
    இறைவன் கொடுத்த வரம் !
    அதனால்தானோ என்னவோ
    இன்றைக்கும் உனக்கு
    இளமை ஊஞ்சலாடுகிறது!




    அவள் அப்படித்தான் என்று
    நீ ஒதுக்கி விட்டுப்போன
    நீலாம்பரிகளும் சண்டிரமுகிகளும் ஏராளம் !
    அவர்கள் மாறினார்களா என்று தெரியாது !
    அதே சமயம்
    உன்னால்
    அன்னை ஓர் ஆலயம் என்று
    உணர்ந்தவர்கள் ஏராளம் ஏராளம் !


    நான் மகான் அல்ல என்று நீ
    அடிக்கடி சொன்னாலும்
    உன்னால் ஆன்மீகப் பாதையில்
    அடிஎடுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் !



    நீ
    உன்மீது அடிக்கடி விழும்
    நன்றி மறந்த கற்களைத் தடுக்க
    மௌனம் என்னும் கேடயத்தை
    மட்டுமே கைக்கொள்ளும்
    அஹிம்சைத் தளபதி !

    ரகுபதி ராகவ ராஜாராம் இசைத்து
    ராம் ராபர்ட் ரஹீமிடம் வேற்றுமை பார்க்காத
    உனக்கு
    சங்கர் சலீம் சைமனும் ஒன்றுதான்
    ஜான் ஜானி ஜனார்த்தனும் ஒன்றுதான் !




    ஊர்காவலனே,
    எல்லாம் உன் கைராசி என்று
    உன்னை நாடி வந்தோர்க்கு
    நான் வாழ வைப்பேன் என
    கைகொடுக்கும் கை ஆனாயே !
    அதை என்றைக்கும்
    நினைத்தாலே இனிக்கும் !


    உன்
    தலைமுடியில் வேண்டுமானால்
    இடைவெளி சற்றே அதிகமாகி இருக்கலாம் !
    ஆனால் உனக்கு
    தலைமுறை இடைவெளி என்பது மட்டும்
    கிடையவே கிடையாது !




    இன்றைக்கும்
    உன்னோடு சேர்ந்து ஆட
    ப்ரியாக்களும் காயத்ரிக்களும்
    தயாராக இருக்கிறார்கள் -
    பதினாறு வயதினிலே !

    உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் தெரியுமா?

    தமிழ்நாட்டில்
    நான் சிகப்புமனிதன் என்று
    கர்வப்பட்டு சுற்றிக்கொண்டிருந்த
    போக்கிரி ராஜாக்களும், மாங்குடி மைனர்களும்
    கடும் வெயிலில் நின்று
    கறுத்துக் கொண்டிருக்கிறார்களாம் -
    ஏனெனில்
    இங்குள்ள பெண்களுக்கு
    உன்னுடைய கறுப்புத்தான்
    மிகவும் பிடித்த கலராம்...!


    'ஜானி ஜானி' என்று கூப்பிட்டால்
    இங்குள்ள குழந்தைகள்
    'எஸ் பப்பா' என்பதில்லை -
    படையப்பா என்கின்றனவாம் !


    ஜஸ்டிஸ் கோபிநாத்தின்
    தீர்ப்புக்கள் மட்டுமல்ல
    எப்பொழுதும் இந்த
    பெத்த ராயுடுவின் தீர்ப்பும்
    சுத்தமாகத்தான் இருக்கும்..!
    அதனால்தான் நீ
    ஆந்திராவில்
    மொத்த பேரையும்
    உன் பின்னால்
    சுத்த வைத்த
    பெத்த ராயுடுவோ?

    மிஸ்டர் பாரத்தான உன்னைப் பார்த்து
    தம்பிக்கு எந்த ஊரு என்று கேட்டவர்களிடம்
    நாங்கள் தர்மயுத்தம்
    செய்து வந்தோம் !


    ஆனால்
    இன்றைக்குத்தான்
    பலபேருக்குத் தெரிந்தது
    இந்த தங்கமகனின்
    தாய் வீடு
    நாச்சிக்குப்பம் என்று!



    ஓஹோ !
    அதனால் தான்
    நீ
    அன்றைக்கே
    குப்பத்து ராஜா ஆனாயோ?

    அன்றைய குப்பத்து ராஜா
    இன்றைய ராஜாதி ராஜாவாகி
    தென்னாப்பிரிக்காவில் கூட
    அவன் கொடி பறக்குது !
    இருந்தாலும் எங்கும்
    எளியோர் இதயத்தில்
    அந்த ராஜா சின்ன ரோஜாதான் !

    சூப்பர் ஸ்டாரே,
    நீ
    குன்றுகளுக்கு மத்தியில்
    ஒரு மலை !
    அண்ணாமலை !

    நீ
    அருணாச்சலம் மட்டுமல்ல
    கருணாச்சலமும்தான் !

    நீ
    குணத்திலும் பணக்காரனாகி பல
    குசேலர்களை காத்த
    தர்மதுரை !

    நீ
    எங்கோ உயரத்தில் இருந்தாலும்
    அடியாழத்தில் இருந்து கொள்ளும்
    சிதறாத முத்து !

    நீ
    ஏற்றி இறக்கும்
    திரையுலக ஆடுபுலி ஆட்டத்தில்
    என்றைக்கும்
    பாயும் புலி !



    நீ
    அரசியல் சதுரங்கத்தில்
    யாரும் செக் வைக்க முடியாத
    தனிக்காட்டு ராஜா !

    அதனால்தான்
    இருபது ஆண்டுகளுக்கு முன்
    நீ
    வெறும் சிவா!
    இன்றைக்கோ சிவாஜி !



    மதுரையை ஆண்டவன் பாண்டியன் !
    மக்கள் மனங்களை ஆளும்
    நீயோ
    அலெக்ஸ் பாண்டியன் !

    நீ
    புரட்டு தெரியாத முரட்டுக் காளை !
    உன் கண்ணில் நீர் வழிந்தால்
    பொறுக்காத காளியிடம்
    நீ சக்தி கொடு
    என்று கேட்டாய்!
    அதனால்தான் அவள்
    கோடிக்கணக்கில் உனக்காகத்
    துடிக்கும் கரங்கள் தந்தாள்!

    நீ
    பொல்லாதவன் என்று
    பொய்யர்கள்
    புறம் சொல்வர் !
    ஆனால் உன்னை
    புரிந்தவர்களுக்குத் தெரியும் -
    நீ
    நல்லவனுக்கு நல்லவன்
    நாட்டுக்கொரு நல்லவன் என்று!

    நீ
    உன் அடுத்த வாரிசை
    எஜமானாக மட்டும்
    அடையாளம் காட்டவில்லை !
    நல்ல உழைப்பாளியாய் காட்டினாய் !




    வீரா - வருவீரா என்று
    உன்னை மன்னனாக்க பலபேர்
    துடித்த போது - ஒரு
    எந்திரன் போல ஆசைக்கு
    விடுதலை கொடுத்து
    எங்கோ தூரம் சென்று
    மனிதனாய் நிமிர்ந்தாய் !

    வாழ்க்கைப் பாடத்தைப்
    புரட்டிப் படித்த
    நீயா படிக்காதவன்?

    அலாவுதீனின் அற்புத விளக்கே !
    உன் வெளிச்சத்தில்
    வீட்டுப் பாடம் படித்த
    கலைஞர்கள் எத்தனை பேர் ?

    உன் பாஷாவைப் பார்த்து பாஸான
    கதாநாயகர்கள்தான் எத்தனை பேர்?

    உன் சத்திய நெற்றிக்கண் எரித்த
    மன்னிப்புத் தீயால்
    காணாமல் போன கழுகுகள்தான்
    எத்தனை எத்தனை?

    மாவீரனே !
    உன்னிடம்
    தில்லுமுல்லு செய்யவோ
    தப்புத்தாளங்கள் போடவோ
    யாராலும் முடியாது !
    ஏனெனில்
    நீ
    தர்மத்தின் தலைவன் !

    நீ
    எங்களுக்கு குரு
    சிஷ்யன் பல சித்தர்களுக்கு !

    நீ ஒரு நல்ல வேலைக்காரன் அல்லவா ?
    அதனால்தான் உனக்காகக்
    காத்திருக்கிறது -
    ஒரு நல்ல வேலையும் -
    அதற்காக காத்திருக்கிறது
    ஒரு நல்ல வேளையும்!



    இனி சில விந்தைகளைப் பார்ப்போமா?

    அன்புள்ள ரஜினிகாந்த்தே !
    நீ
    காந்தம் போல கடந்து செல்கையில்
    உலகெங்குமிருந்து எண்ண அலைகள்
    ஒரே இடத்தில் மையம் கொள்வதால்
    ராடார்கள் ஸ்தம்பிப்பதாக
    கையைப் பிசைகிறார்களாம் மீனம்பாக்கத்திலே..!

    சிவாஜி ராவ் கெயிக்வாட்டே,
    இன்னும் இருபதாண்டுகள் கழித்தாவது
    உன்னை
    இரண்டாம் இடத்துக்கு தான்
    அனுப்பவேண்டும் என்று
    உன் வீட்டில்
    இரண்டு வயது யாத்ரா
    முரண்டு பிடிக்கிறானாம் !




    கடத்தல் மன்னன் பில்லாவே !
    நீ
    சற்றே உஷாராக இரு !
    உன்னால்
    ஜப்பான் முதல் அமெரிக்கா வரை
    பல இதயங்கள் களவாடப்பட்டு
    இந்தியாவிற்கு இறக்குமதியாகின்றனவென்று
    உன் மீது
    ஒரு கண் வைத்திருக்கிறார்களாம்
    சுங்க அதிகாரிகள் !




    அவசர அடி ரங்காவே !
    கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு !
    ஆறிலிருந்து அறுபது வரை
    எட்டுக்கோடி இதயங்களிலும்
    அத்துமீறி நுழைந்து
    இண்டு இடுக்கின்றி நீயே
    ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக
    கணக்கெடுக்கிறார்களாம்
    காவல்துறையினர் !

    சொக்க வைக்கும் சுல்தானே,
    உன் வீச்சைக்
    கட்டுப்படுத்த வேண்டுமென்றால்
    புதிதாய் மன உச்சவரம்புச் சட்டம்தான்
    கொண்டுவரவேண்டும் போலும் !

    முள்ளும் மலரும் எதிலும் உண்டு என
    உணர்ந்த அதிசய பிறவியே!

    உனக்கு
    சினிமா ஆன்மிகம் அரசியல் என்று
    மூன்று முகம் !

    இனி எந்த முகம் உனக்கு
    என்று புவனமே கேள்விக்குறியோடு நிற்க
    நீயோ
    என் கேள்விக்கு என்ன பதில் என்று
    ராகவேந்திரரையும் பாபாவையும் கேட்கிறாய் !

    உனக்கு பதில் கிடைத்து
    நீ சினிமா என்றால்
    எங்களுக்கு நீ கவிக்குயில் !
    நீ இசைக்கும் அபூர்வராகங்களின்
    அடுத்த அவதாரத்தை நாங்கள் ரசிப்போம் !

    மனதில் உறுதி வேண்டும் நீ
    ஆன்மிகம் என்றால்
    உன் காலடியில் ஆறு புஷ்பங்கள்
    தூவிச் சொல்வோம்
    நீயே எங்கள் மகாகுரு என்று !

    நாடு காக்க அரசியல் காட்டில்
    நீ
    வேட்டையனாய் நுழைந்தால்
    உன் கர்ஜனைக்குப் பின் அணி வகுக்கும்
    ராணுவ வீரர்கள் நாங்கள் !

    இது புதுக் கவிதையோ
    எங்கேயோ கேட்ட குரலோ அல்ல
    தாய் மீது சத்தியம்!

    வாழ்க ரஜினி....

  11. #430
    Senior Member Diamond Hubber Nerd's Avatar
    Join Date
    Mar 2005
    Posts
    7,811
    Post Thanks / Like
    Great one

    Only a few verser are cheesy. Some of them are really clever like,

    அதனால்தான்
    இருபது ஆண்டுகளுக்கு முன்
    நீ
    வெறும் சிவா!
    இன்றைக்கோ சிவாஜி !

Similar Threads

  1. Title Update test
    By hamid in forum Testing
    Replies: 0
    Last Post: 3rd February 2011, 03:31 PM
  2. sangeetha maha yuddham
    By Plum in forum TV,TV Serials and Radio
    Replies: 33
    Last Post: 15th December 2010, 10:31 AM
  3. Update your bookmarks for this forum
    By Minni in forum Indian Food
    Replies: 2
    Last Post: 1st May 2005, 11:45 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •