Thread started by kirukan on 24th March 2008 05:29 PM
மனம் வெதும்பும் நேரம்
மரிக்கும் பூ சிரிப்பு
மௌனமாய் இருந்தே
மலரும் பூ வெறுப்பு
மகிழ்ச்சியை மங்கவைக்க
மிரட்டும் பூ மறுப்பு
மணவாழ்வில் நான்
பெற்ற பூ பொறுப்பு
விட்ட பூ எதிர்பார்ப்பு
கற்ற பூ பண்பு
கிடைக்காத பூ மதிப்பு
----
Kirukan
-
From: kirukan
on 12th July 2020 06:09 PM
[Full View]
நல்லறம் நழுவாது நக்கிப் பிழையாது
நடுநிலை நிற்கும் நல்லூடகம்.
-
கிறுக்கன்
-
From: kirukan
on 12th July 2020 06:11 PM
[Full View]
ஊர்பசி போக்க தன்பசி மறந்து
உழைத்து இளைத்தவன் விவசாயி.
-
கிறுக்கன்
-
From: kirukan
on 12th July 2020 06:12 PM
[Full View]
நொடியை யுகமாக்கி தவிக்க வைத்து
தளர்த்திடும் முதுமையில் தனிமை
-
கிறுக்கன்
-
From: pavalamani pragasam
on 9th January 2021 05:45 PM
[Full View]

Originally Posted by
kirukan
நொடியை யுகமாக்கி தவிக்க வைத்து
தளர்த்திடும் முதுமையில் தனிமை
-
கிறுக்கன்
யுகம்தான் ஆகிவிட்டது நட்புகளை சந்திக்க!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
-
From: kirukan
on 11th January 2021 11:02 PM
[Full View]

Originally Posted by
pavalamani pragasam
யுகம்தான் ஆகிவிட்டது நட்புகளை சந்திக்க!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Vaanga Madam evlo naal achu..Welcome back

...Hope all is well ...
-
From: pavalamani pragasam
on 11th January 2021 11:38 PM
[Full View]
நான் காணாமல் போகவில்லை ஹப்தான் கைக்கு எட்டால் இருந்தது. திரும்ப கிடைத்த செய்தி கிடைத்ததும் தலைகால் புரியாத சந்தோஷம் எனக்கு!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
-
From: kirukan
on 13th January 2021 06:08 PM
[Full View]

Originally Posted by
pavalamani pragasam
நான் காணாமல் போகவில்லை ஹப்தான் கைக்கு எட்டால் இருந்தது. திரும்ப கிடைத்த செய்தி கிடைத்ததும் தலைகால் புரியாத சந்தோஷம் எனக்கு!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
-
From: RR
on 13th January 2021 08:49 PM
[Full View]

Originally Posted by
kirukan
சந்தோஷந்தில் திளைத்திடும் நண்பர் கிறுக்கனே
வந்திடுமோ இனி கவிதைகள் நறுக்கென?!
-
From: kirukan
on 14th January 2021 04:47 PM
[Full View]

Originally Posted by
rr
சந்தோஷந்தில் திளைத்திடும் நண்பர் கிறுக்கனே
வந்திடுமோ இனி கவிதைகள் நறுக்கென?!
எனை மறந்து எழுதும் போதை கிறுக்கன் நான்..

என் சந்தோஷம் மேடத்தின் வருகையும் அவர்களால் உயிர்தெழுந்த கவிதைக்கு கவிதையும்...சரியான் போட்டி தொடருங்கள்...:-d
-
From: RR
on 14th January 2021 05:14 PM
[Full View]

Originally Posted by
kirukan
எனை மறந்து எழுதும் போதை கிறுக்கன் நான்..

என் சந்தோஷம் மேடத்தின் வருகையும் அவர்களால் உயிர்தெழுந்த கவிதைக்கு கவிதையும்...சரியான் போட்டி தொடருங்கள்...:-d
அப்போ.. சற்று மறந்திடுவீர் உம்மை
இணைந்திடுவீர் எம்முடன் :-d