-

ஆண்-பெண் என ஏன் படைத்தாய், ஈசா காமப்-பேய் பிடித்து அலையவோ.?
வீண் உற்றார் உறவினர் விருந்து நாடி, உரிமை கொண்டாடி குலையவோ
காண்-யாம் முதியோன் துதி எனை தனக்குத்-தானே மகுடம் சூடு சிலையரோ
தூண்-நாம் ஒருவரொருவர் பணப்-பங்காளி நெருங்கி ஏமாற்றுக் கலையரோ

சாண் சிறியோர் புத்திரர் முளைத்து விளைந்த பின் கைவிடும் கொலையரே
மாண்-குரு கல்வி கற்ற-பின்னும் தொடர்-உறுத்து விடாப்பிடி தலையரோ.?
நாண்-பெரியோர் தற்காலம்-ஒவ்வா நீதி ஏட்டுப்-பாடம் திணி தொலையரே
பூண்-விலங்கு புவி-சுவர்க்கம் ஆள-வந்த எமக்கு நரக-நோய் விலையதோ.?


விலையதே ஆம் மதலை- என் மைந்தா நீ தருவதன் பிரதியே பெறுவாய்
அலைக்-கழிக்கும் வேதாந்தம் அல்ல இதுவே உண்மை வாழ்-நெறி எவர்க்கும்
நிலை வாழ்க்கை-நியதி விதைத்ததே முளைக்கும் தினையோ வினையோ
கலைத்து நீ வீண் தேனீ கூட்டமாய் கொட்டுதே என ஓடி தப்பிக்க முயல் சுய
வலைப்பட்ட மூடனா நீ முழு உயர் அறிவு கொண்ட உத்தம மனிதனா சொல்
தொலைக்கவே முன்-பிறவி வினை இப்பிறவியும் நீ செய்த பின்-விளைவே
அலைந்து-திரி பேய் தற்கொலைப்-போக்கில் நீயே நரகம் ஈட்டிக்-கொண்டாயே

ஈட்டிக்-கொண்டவனே கணவன் தன் மனைவி வாழ்க்கைத்-துணைவி சொத்து
வீட்டில் எனக்கு மங்கை கட்டிலுக்கும் தொட்டில் என் ஆசை குடும்பம் கூட்ட
தீட்டி திட்டம் தன் சுயநலமே இலக்காய், மாதே என் தேவையை நிறைவேற்ற
காட்டினால் மங்கை எவளும் உன்னை மணக்க முன் வருவளோ கொடுப்பரோ

போட்டி ஒரு மாது, கணவன் தேவை எனைக்-காத்து சுகம்-தந்து சோறுபோட
ஆட்ட முயன்றால் வீட்டரசி என, ஆண் எவனும் ஏற்பனோ இல்லாளாய் ஆள
காட்டுப்-பாடம் அது மிருகமாய் தன் உரிமை மட்டும் நாட்டிப் பிடுங்கிக்கொள
நாட்டு வாழ் மானிட-நெறி கடமையே வாழ்க்கை உரிமை அன்று, ஆம் தத்தம்

சூட்டு உறு நன்னெறி இணை பிறரது உரிமையே எனது கடமை, தரவே நாடி
நாட்டவே வாழ்-பொருள் மாதே உன்-தேவை என் கடனே, எதிர்-விலையாய்
கூட்டவே என் தேவை நீ நிறைவேற்ற வா நாம் இருவர் ஒருவர்க்கு ஒருவர்
பூட்டுச்-சாவியாய் உன்னால் நான் வாழ, என்னால் நீ என உறு நெறி-முறை
ஏட்டுச்சுவடிப்-பாடமோ? அனுபவ நடைமுறை உண்மை எக்காலத்தும் நிலை-
நாட்டு-மனிதராய் காட்டு நெறி அற-வாழ்வால் புவி-சுவர்க்கம் திண்ணமே.
.
..