-
2nd March 2009, 01:37 PM
#11
Senior Member
Seasoned Hubber
‘நல்ல கேரக்டர்கள் வேண்டும்': இசையருவி தொகுப்பாளினி ‘மகேஸ்வரி'
புதுச்சேரியில் நடந்த குளிர்பான விளம்பர படபிடிப்பில் பங்கேற்க வந்த நடிகர் விஜய். உடன் (இடது) எம்எல்ஏ என்.ஆனந்து.
சினிமாவில் நல்ல கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்றார் இசையருவி தொகுப்பாளினி ‘மகேஸ்வரி'.
இது குறித்து அவர் கூறியதாவது:
பூர்வீகம் பெங்களூர் என்றாலும் சென்னைதான் எல்லாம். படித்துக் கொண்டிருக்கும் போதே காம்பியரிங்கில் ஆர்வம் இருந்ததால் வந்து விட்டேன். அதோடு எனக்குள் கொஞ்சம் சினிமா ஆர்வமும் ஒட்டியிருந்தது. ஒரு வேளை நான் காம்பியர் ஆனதற்கு சினிமா கனவு கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
காம்பியரிங் உலகம் நிறைய கற்று கொடுத்திருக்கிறது. சினிமாவில் நடிப்பவர்கள் கூட காட்சிகளுக்கு ஏற்ப அழுது, சிரிக்க வேண்டும். ஆனால் காம்பியரிங் மட்டும்தான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் காம்பியரிங்கில் ஸ்பெஷல்.
காம்பியரிங் சுலபமானது அல்ல. தினமும் நிறைய விஷயங்களைக் கற்று கொண்டுதான் கேமரா முன்னால் நிற்க வேண்டும். தேர்வாகி முதல் ஷோ பண்ணும் போது நிறைய பதற்றம் இருந்தது. அதுக்காக கண்ணாடி முன் நின்று பேசிய தருணங்களை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது.
எனது சினிமா கனவு இப்போதுதான் கை கூடி வந்திருக்கிறது. தற்போது ‘ஓடி போலாமா' படத்தில் சந்தியாவின் ஃப்ரண்டாக நடித்து வருகிறேன். படம் வந்த பிறகு இந்தக் கேரக்டர் பெரிதாகப் பேசப்படும். இதைத் தவிர ‘கந்தசாமி', ‘குயில்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறேன். ‘குயில்' படத்தில் எனக்கு ஒரு பாடலே உண்டு.
சினிமாவில் எந்தக் கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன். அது எனக்கு நல்ல பெயரை வாங்கித் தருவதாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஓரிரு படங்களில் கிளாமராக நடித்து விட்டு மறு நாளே காணாமல் போன நடிகைகளின் கதை இங்கு நிறைய இருக்கிறது. அது மாதிரி காணாமல் போவதற்கு எனக்கு இஷ்டம் இல்லை.
நிறைய காதல் கடிதங்கள் வந்திருக்கின்றன. காதல் ஒரு மென்மையான உணர்வு. அதை உணரக்கூடிய தருணம் வருகிற போதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் காதல் வரும். அந்த தருணம் வரும் போது நானும் காதல் வயப்படுவேன். அதுவரைக்கும் என் குடும்பத்தினருடன்தான் காதல் இருக்கும்.
http://www.dinamani.com/Cinema/CineI...n%A7Ls&Topic=0
-
2nd March 2009 01:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks