தமிழில் ஒளிபரப்பாகும் மாலினி ஐயர்


கடந்த 2004ம் ஆண்டு சகாரா டி.வியில் ஒளிபரப்பான இந்தி தொடர் மாலினி ஐயர். சினிமாவில் நம்பர் ஒன்னாக திகழ்ந்த ஸ்ரீதேவி நடித்த முதல் டி.வி.தொடர். இதனை அவரது கணவர் போனி கபூர் தயாரித்தார். மிகுந்த வரவேற்பை பெற்ற அந்த தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வானவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது ஒரு காமெடி தொடர்.


தமிழ்நாட்டு பிராமண பெண்ணான ஸ்ரீதேவி ஒரு பஞ்சாபியை திருமணம் செய்து கொண்டு வடநாட்டில் செட்டிலாகிறார். பஞ்சாபி கலாச்சாரத்திற்கும், தமிழ் பிராமணாள் கலாச்சாரத்திற்கும் ரொம்பவே வித்தியாசம், இதனை மாலினி ஐயர் எப்படி சமாளிக்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் தொடர். அப்பாவியான மாலினி ஐயர் செய்யும் கலாட்டாக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீதேவியின் நடிப்பை ரசிக்கும் வாய்ப்பும் தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.




நன்றி: தினதந்தி