-
7th May 2016, 11:15 AM
#10
Senior Member
Senior Hubber
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
எட்டாம் பாடல்
*
பாடல் எட்டு..
ஹாய் ட்யூட்ஸ்..
(உனக்குத் தான் வரலைல்ல..
ச்.. வரலைங்கறதுக்காக முயலாம இருக்கலாகுமா மன்ச்சு
சரி சரி எவ்வாழ்வும் வாழ்ந்து போ!
ஹை..இது நல்லா இருக்கே)
உங்களுக்கு ஒரு கேள்வி.. இறை உணர்வு என்பது என்ன.. அது எப்படிக் கிடைக்கும்..
சரி சரி முழிக்காதீர்கள் நண்பர்களே.. இறையுணர்வு என்பதைச் சொல்லில் வடிக்க இயலுமா..
காதலாகிக்கசிந்துகண்ணீர்மல்கி
ஓதுவார்தமைநன்னெறிக்குஉய்ப்பது
வேதம்நான்கினும்மெய்ப்பொருளாவது
நாதன்நாமம்நமச்சிவாயவே.
என்கிறார் ஞானம்.. அப்படிக் காதலாகிக் கசிந்து உருகறதைலாம் படிச்சா உணர முடியுமா..
முடியாதே..
பின்ன..
எப்படின்னு சொல்றதுக்கு முன்ன கண்ண தாசனைக் கூப்பிடலாமா..
பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான் என்கிற ஃபேமஸ் கவிதை எழுதி கடோசில இரண்டு வரிகள்..
அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனின்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து
அனுபவமே தான் நானெனச் சொன்னான்னு முடிச்சுருப்பார்..
ஸோ அனுபவம்.. இதையே திருமூலர் திருமந்திரத்துல என்ன சொல்றார்..
( விடமாட்டே போல இருக்கு..
ஷ்ஷ் மனசாட்சி)
கண்ணில் கனவு கண்டமகள்
..கவலை மறந்த அன்புமகள்
எண்ணம் போலே வளர்ந்துவிட்டாள்
…ஏதோ சேதியும் கேட்டுவிட்டாள்
வண்ண மாக அம்மா நீ
…வாழ்ந்த வாழ்க்கை சொல்லம்மா\
என்ன சொல்ல இயலுமடி
..ஏட்டில் எழுத்தில் வராதடியே..
அழகாய் வளர்த்த அன்புமகள் ஒரு நாள் தாயிடம் கேட்கிறாளாம்..அம்மா இந்தக் கல்யாண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கைலாம் நனனா இருக்குமா..
இந்தக்கால அம்மாவா இருந்தா ம்ம் உங்கப்பனுக்கு வாழ்ந்து என்ன சுகத்தைக் கண்டேன் ஒரு மலபார் கோல்ட் உண்டா ஒரு மல்டிப்ளக்ஸ்ல ஃப்ளாட் உண்டான்னு புலம்பியிருப்பா..
கேட்டது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால இருந்த மகள்.. அம்மாக்குள்ள் வெட்கப் பூ பூக்குது
அடிபோடி இவளேநீ என்ன கேட்டாய்
…அவருடனே நான்வாழ்ந்த வாழ்க்கை தானா
அடிஅடியாய் விருத்தத்தில் சொல்ல லாகா
..அழகான வாழ்க்கையது என்ன சொல்வேன்
கடிதெனவே பறந்ததுவே காலம் எல்லாம்
…கடிமணத்தால் அவரென்னை கட்ட பின்னே
வடிவமான வாழ்க்கைதான் வாழ்ந்தேன் பெண்ணே
.வார்த்தையினால் சொல்லமாட்டேன் போபோ கண்ணே
பின்ன.. பொண்ணுக்கிட்ட அம்மாவால பேசமுடியுமா..அதுவும் பெர்ஸனல் சீக்ரட் ஆச்சே..
(இன்னும் நீ திருமந்திரப் பாட்டுக்கே வரலை..இன்னும் ஸ்ரீலங்கா விசிட் இருக்கு திருநெடுங்களப் பாட்டு இருக்கு. ஐ ஜஸ்ட் ரிமைண்ட் யூ
ஷ்ஷ் மனசாட்சி..இதோ வந்துட்டேன்)
திரு மூலர் என்ன சொல்றார்..
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதேஆனந்தம்
மகட்குத் தாய்தன்ம ணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே
எலேய்..சும்மா முகத்தில இருக்கற கண்ண வச்சு பார்த்துட்டு இறைவுணர்வு ந்னா என்ன..எப்படி இருக்கும்னுலாம் கேட்காதயேள்.. அகத்தில் இறையிருத்தி அந்தக் கண்ணால் பார்த்தாத் தான் இறைபற்றித் தெரியும்.. நீங்க இப்படிக் கேட்கறது எப்படித்தெரியுமா இருக்கு..பொண்ணுகிட்ட அம்மாவானவள் எப்படி த் தன் கணவனோடு இருந்த இல்லறத்தை மகள் கேட்டா சொல்ல முடியாதோ அதே போலத் தான்.. அகக்கண் திறந்தால் தான் அந்த ஆனந்த இறையுணர்வு அகப்படுமாக்கும்.. புரிஞ்சுதோ..
*
இப்போ வீ ஆர் கோயிங்க் டு விஸிட் ஸ்ரீலங்கா..
அனுமன் முதல் முதலாய் இலங்கைக்கு நுழைகிறான்.. இலங்கை எப்படி இருக்கிறதாம்..
அங்குஉள்ளமாளிகைகள்எல்லாம்மிகஉயரமாகஇருக்கின்றன .சரி எவ்வளோ ஹைட் இருக்கும் ஒரு நூறு அடி இருக்குமா..ம்ஹூம்.. இல்லை.. வானில் மேய்கின்ற நிலவு முட்டும் வண்ணம் உயரம் கொண்டவையாம்
அந்த மாளிகையின் மேன்மாடச் சாளரங்களில் மேகங்கள் ஹாய் சொல்லிப் போய்க்கொண்டிருக்குமாம்..
அந்த மாளிகைகள் பளபளவென மின்னுகின்றனவாம்..
தங்கத்தால் செய்தவையா இருக்காது..தங்கம் இவ்வளவு பளபளப்பா இருக்காது..வைரம் வைடூர்யம் போன்ற பிரகாசமான கற்களால பண்ணியிருப்பாங்களோ..ம்ஹூம் தெரியலை
ஒரு வேளை இப்படி கதிரவன்கிட்ட கொஞ்சம் கேட்டு சூரியனோட ஒளியை வாங்கி அதனால செய்ததா இருக்குமா
அல்லது மின்னலைப் பிடித்து செய்தனரா அந்த மாளிகைகளை.. ஒண்ணுமே புரியலையே..”
*
நிற்க..இவ்வாறு தவிப்பது நானில்லை.. கவிச்சக்கரவர்த்தி கம்பன்..
பொன்கொண்டு இழைத்த? மணியைக் கொடுபொதிந்த?
மின்கொண்டு அமைத்த ? வெயிலைக் கொடுசமைத்த?
என்கொண்டு இயற்றிய எனத்தெரிவு இலாத-
வன்கொண்டல் விட்டுமதி முட்டுவன மாடம்
இப்படி மாட மாளிகைகள் இலங்கையில் மின்னின என்கிறார்..
*
:அந்த நகரம் காற்றில் மிதப்பது போல் தோன்றியது. நகரத்தின் வெளிக் கதவுகள் தங்கம் போன்ற ஒரு உலோகத்தால் செய்யப் பட்டிருந்தன. படிகள் வைடூரியக் கற்கள் பதிக்கப் பட்ட வெள்ளியால் அமைக்கப் பட்டிருந்தன.
நகரின் நடுவில் படிகம் போல் வெண் மணல் நிரப்ப்ப் பட்ட முற்றங்கள் அமைக்கப் பட்டிருந்தன” என சுந்தர காண்டத்தில் வர்ணிக்கப் படும் இலங்கையில் வாழ்ந்தவன் இராவணன்..
(ஹப்பாடி ஒருவழியா விஷயத்துக்கு வந்துட்ட..வா பாட்டுக்குள்ள போலாம்.. ரொம்ப நீளமாய்டுச்சு
ம்ம் சரி
பாடல் எட்டு..
குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ்இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்திஇராப் பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களமேயவனே
திரு நெடுங்களம் உறையும் இறைவனே..திரு நீல கண்டனே..
இலங்கை நகரம் எப்படிப் பட்டது…
மேருமலையின் சிகரங்கள் மூன்றை வாயுபகவான் பெயர்த்தெடுக்க அவை மூன்றையும் ஒன்றாக்கி அதன் உச்சியில் கட்டப் பட்டது இலங்கை நகரம்
அதன் சுற்றிலும் இருக்கும் மதில்கள் முழுவதும் பலவித கொடிகள் பறந்து கொண்டிருக்கும்
அப்பேர்ப்பட்ட இலங்கையின் மன்னன் ராவணன்..
அவன் உன் பக்தன் தான்..இருந்தாலும் என்ன செய்தான்..
உனக்காக சாமகானம் இசைத்தவண்ணம் உன்னை மயக்கி கைலாயத்தையே கீழே பூவுலகுக்குக் கொண்டு செல்ல ஆசைப்பட்டான்
அதையறிந்த நீ கால்கட்டைவிரலால் அவனை அழுத்தி பூவுலகில் தள்ளிவிட்டாய்..
இப்படி உனது பெருமைகளைப் பற்றி இரவும் பகலும் பாடி மனம்கனியும் அடியவர்களின் இடர் களைவாயாக..
**
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks