-
7th May 2016, 10:59 AM
#1
Senior Member
Senior Hubber
தண்ணீர் விட்டவுடன்
காற்றைத் துணைக்கழைத்து
தலையசைக்க வைத்து
மகிழ்ச்சியைச் சொல்கின்றன
செடிகள்..
*
சந்தோஷமே வ்ருக வருக..
இடர் களையும் பதிகம்
ஐந்தாம் பாடல்
*
**
பாடல் ஐந்து
கைலாய மலைவாழும் ஈசன் – அங்கே
கரங்குவித்து வணங்குவரை அணைத்திடும் நேசன்
வெயிலாக மழையாக வந்தான் – பின்பு
வேகமாய் அடியாரைக் காத்தருள் செய்தான்
மயிலாடும் கந்தனின் அய்யன் – அவன்
மாறாமல் நினைப்போர்க்கு என்றுமே மெய்யன்
பயிலாத பாமரர் சிந்தை – இவன்
பக்கம் பணிந்தால் காட்டுமே விந்தை
குணங்கண்டார் குணமே கண்டார்
…குறையிலா தவத்தோற் றத்தில்
உமைக்கண்டார் உமையுங் கண்டார்
…உடனுடன் கூடும் அன்பால்
அனந்தமாய் நெஞ்சில் கண்டார்
..அன்பிலே உனது தாளை
கணமென்றும் கண்ணில் கண்டார்
…காத்திடு கயிலை நாதா..
*
“ஆமா ஏன் சிரிக்கறே மனசாட்சி”
“பின்ன நீ நாதான்னு முடிச்சுருக்க.. எனக்கு
நாதா எனச் சொல்கிற ரமாப்ரபா நினைவு தான் வருது....
..அது சரி என்னமோ எழுதிப் பார்த்திருக்க இந்தப் பாட்டையே கரெக்டா..வா உள்ள போய்ப் பார்க்கலாம்..”
*
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
திரு நெடுங்களத்தில் உறையும் இறைவனே, மீனாட்சி மணாளா..
நீ மிக அரிய விசேஷமான குணங்களைப் பெற்றவர்கள்..எப்போதும் நல்லதையே சிந்தித்து நல்லதையே செயல் படுத்தும் குணவான்கள், ,தவம் மேற்கொண்டவர்கள், பாரில் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆகியோரிடம் பலி (பிட்ஷை) வாங்குகிறாய்
உனது அடியார்கள் என்ன செய்கிறார்கள்..
உனது இந்தச் செயலில் ஒன்றி உன்னைப் புகழ்ந்து நல்லோர்கள் பாடிய பாடல்களால் தொழத்தக்க உனது திருவடிகளை வணங்கி கரைகடந்த அன்போடு உன்னைத் தொழுது அந்தத் திருவடி நிழலை விலகாதவாறு இருக்கிறார்கள்..
அப்படி உள்ள அடியார்களின் இடர்களைக் களைவாயாக....
-
7th May 2016 10:59 AM
# ADS
Circuit advertisement
Bookmarks