-
27th March 2013, 09:18 PM
#11
Senior Member
Senior Hubber
கரிச்சான் குஞ்சுடன்
கோழிக்குஞ்சு ஒன்று
நட்பானது..
மரத்தின் மேலிருந்து
அம்மா இல்லாதசமயம்
கரிச்சான்
தத்தித் தத்திக் கீழே வர
கோழிக்குஞ்சு ஆவெனப்பார்க்கும்..
இரண்டும் பேசிக் கொள்ளும்..
எங்க அம்மா
ஒய்யாரமா நடப்பாங்களே
எங்க அம்மா
புயலாப் பறப்பாங்களே
எங்க அம்மா ஒசரம்
எங்க அம்மாவுக்கு வால்
அழகா நீளமா இருக்கும்..
வளர்ந்ததுக்கப்புறம்
நீ என்ன ஆவே கரிச்சான் கேட்க
கொஞ்சம் இரு
எனத் தன்னைப் பார்த்துக்கொண்டு
அம்மா மாதிரி ஆவேன்
எனப் பெருமையாய்ச் சொல்ல
க்ரிச்சான் நா பறப்பேனே
ஒலகம் முழுக்க..
ஆனா நீ பாவம்..
ஏன்..
எங்க அம்மா சொன்னாங்க
முழுக்கப்புரியலை..
ஆனா
உங்க அம்மாவக் கொன்னுடுவாங்களாம்
உன்னையும் தானாம்..
அதுக்குத் தான் இந்த நெல் மணி..உணவு எல்லாம்..
நாங்க அலஞ்சு திரிஞ்சு
சாப்பிடறது
ஒங்களுக்கு
நடக்கற இடத்திலேயே கிடைக்கிறகாரணம்..
ச்சீ போ
பொய் சொல்ற
என் கூடப் பேசாத போ
எனக்கோபம் காட்டி
குட்டிக் குட்டியாய்ப்
பாதம் வைத்து
திரும்பி நடந்தது கோழிக்குஞ்சு
விசுக்விசுக்கென..
Last edited by chinnakkannan; 27th March 2013 at 09:22 PM.
-
27th March 2013 09:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks