-
2nd April 2010, 12:15 AM
#11
Senior Member
Platinum Hubber
Originally Posted by
app_engine
என் வாய்க்கு (இந்த இழையைப்பொறுத்த மட்டில்) பூட்டு
Well, time to unlock
thamizh
என்னங்க இப்படி சூடாயிட்டீங்க, பொறுமை, பொறுமை!
நீங்கள் இப்படிப்பிரதிபலிப்பதன் மூலம் மறைமுகமாக உங்களுக்கே தாம் தீங்கு செய்கிறீர்கள்
முதலாவது கேள்வி - இந்தக்குஷ்பு அம்மையார் எப்போது தமிழ்ப்பண்பாட்டின் "அதிகாரப்பூர்வ விமர்சகர்" ஆயித்தொலைந்தார்? ஏன் இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம்?
அவரது அரைவேக்காட்டுப்பிதற்றல்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, அனாவசியமான பிரதிபலிப்புகள் செய்ததால் தானே? "அவ கெடக்கா வெத்து வேட்டு, நாம யாரு, நம்ம வரலாறு என்ன, பண்பு என்ன, ஒழுக்கம் என்ன"ன்னு நம்வழியில் போய்க்கொண்டிருந்தாலே போதுமாக இருந்தது.
அரசியலில் புகழ் பெறுவதற்காக சில விஷமிகள் செய்த வலைக்குள் பொதுமக்கள் ஏன் விழ வேண்டும்? (ஒரு விதத்தில் இவங்க எல்லோரும் இன்னும் இந்த அம்மையாருக்கு மனதில் ஒரு கோயில் வச்சிருக்காங்களோ?)
பச்சையாகச்சொல்லப்போனால், இந்த அம்மாவுக்குக்கோயில் கட்டுனவனுக்கும், இவுங்க கருத்தை எதிர்த்து சண்டை போடுறவுங்களுக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. ரெண்டு பேரும் தேவையில்லாமல் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க
Please save your energy for more important things in life
-
2nd April 2010 12:15 AM
# ADS
Circuit advertisement
Bookmarks