Page 9 of 46 FirstFirst ... 789101119 ... LastLast
Results 81 to 90 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #81
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Pudhiya Konangigal

    (Makkal TV, Tuesday to Friday, 10.30 p.m.)

    For four days at a stretch, the channel assures 96 hours of continuous viewing. This programme, which concentrates on comedy, will dwell on the present day life of the people living in the divisions mentioned above. Instead of the usual timings, Pragadeeswaran and Senthil will entertain viewers late in the evening, with their humorous songs.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #82
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Makkal Virudhu 2008

    (Makkal TV, Wednesday, 6.03 p.m.)

    The channel honours 31 achievers in the field of literature, music and theatre, besides those in medicine, agriculture, environment, sports and science, in the year gone by. Though this will be the first time Makkal Awards are presented, it is being envisaged as an annual Pongal event.
    "அன்பே சிவம்.

  4. #83
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Mallukattu

    (Makkal TV, Wednesday, 7 p.m.)

    If the intriguing title of the show brings to mind the well-known ‘jallikattu’ of the South, you aren’t off the mark. Just like the formidable bulls in ‘jallikattu,’ young, robust men will appear on imposing sets for a display of a variety of talent.
    "அன்பே சிவம்.

  5. #84
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Thamizh Pechu Engal Muchu

    (Vijay TV, Sunday, 9 a.m.)

    The search for the best Thamizh orator in Tamil Nadu has ended. Vijayan from Thanjavur has emerged winner. An intensive search was conducted across the State in cities including Salem, Coimbatore, Madurai, Tiruchi, Tirunelveli and Chennai. Innovative rounds were conducted such as ‘Kaaviya Surukkum’, ‘Vaadham Vivadam’ and ‘Vannangalum Varnanaigalum.’ The grand finale was held at Anna Kalaiarangam on December 20, 2008, where many literary icons and academicians participated.
    "அன்பே சிவம்.

  6. #85
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Lyricist Snehan introduced the three finalists — Vijayan, Arul Prakash and Abirami. The final performance was staged in front of a live audience. The three finalists had to speak on ‘Thamizhan.netru, indru, naalai’. The special guest, Nakkeeran Gopal and the audience chose Vijayan and Arul Prakash as the top two. In the final round, the two had to talk on ‘Naadu Engae Pogiradhu?’ This time, the voting was by Tamil scholars and the audiences. After a tie, Vijayan was declared winner and takes home the prize money of Rs. 5 lakh.
    "அன்பே சிவம்.

  7. #86
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Pongal Special

    (Vijay TV, Wednesday and Thursday)

    Vijay has lined up special programmes on January 14 and 15. January 14: At 7.30 a.m., it is ‘Sivakumarin diary’ where the actor takes a trip down memory lane. At 9 a.m., in a special episode of ‘Koffee with Anu Season 2’, Anu chats with veteran director Bharathiraja. At 10 a.m., Vijay and the crew share their views on ‘Villu.’ At 12 noon, in ‘Nayanmigu Nayantara’, the actor speaks about her films and friends. At 1 p.m. in ‘Cheranin Pokkisham’, Cheran dons the role of anchor and gets celebrities including Sivakumar, Satyaraj and Kanimozhi to share the one thing they treasure the most. At 2 p.m., watch ‘The Transporter’ dubbed in Tamil. At 5.30 p.m., a curtain-raiser of ‘Nandalala,’ a film by Mysskin, will be presented.
    "அன்பே சிவம்.

  8. #87
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    January 15: At 8 a.m., watch Premier Sirappu Pattimandram with Leoni as the judge. The topic of debate is ‘What fuels society’s growth — traditional values or modernism?’ At 9 a.m. is ‘Neeya Naana’ where a debate on urban-rural divide will be conducted and moderated by Gopinath. At 10 a.m. ‘Vivel Azaghiya Cinderella’ will feature Trisha. At 1 p.m., do not miss ‘Smiley Sneha’, where the actor will participate in adventure sports such as rifle shooting and scuba diving. At 1.30 p.m., in ‘Darling Darling Divya,’ Divya Spandana shares her personal photo album with viewers. Get to know more about Arya at 2 p.m. on ‘Naan Arya’, where he speaks about his upcoming project ‘Naan Kadavul’.
    At 3 p.m. it is ‘Chennai Virundhu’, a three-day festival, where all the stars from the small screen will perform under one roof. Watch curtain-raisers of ‘TAXI 4777’ and ‘Villu’ at 6 p.m. and 6.30 p.m. respectively.
    "அன்பே சிவம்.

  9. #88
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like
    ஜெயா டி.வி.யின் "காலை வணக்கம்', "கோலிவுட் டைரி' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் "சித்ராவை' சந்தித்தபோது கூறியதாவது:

    பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். தற்போது சென்னை வைஷ்ணவா கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வருகிறேன். என் அக்கா வைஷ்ணவிதான் முதன் முதலில் ஜெயா டி.வி.யில் காம்பியராக இருந்தாள். அப்போது நான் அவளுடன் ஸ்டுடியோவிற்கு செல்வேன். அப்போது அங்குள்ளவர்களிடம் நிறைய பேசுவேன். என்னை பார்த்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் உன் அக்காளுடன் சேர்ந்து நீயும் காம்பியரிங் செய்தால் நன்றாக இருக்குமே என சொன்னார்கள்.

    அதில் எனக்கு ஆர்வம் இல்லாததால் அதைப் பற்றி யோசிக்கவில்லை. பின்பு அக்கா மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றுவிடவே அக்கா இடத்துக்கு நான் போய்விட்டேன். அக்கா காம்பியரிங் செய்த போது பார்த்தவை இப்போது பயன்படுகிறது. அவ்வவளவுதான் நான் காம்பியர் ஆன கதை. மற்றபடி காம்பியர் ஆவதற்கு எந்த விதமான முயற்சிகளையும் நான் எடுத்ததில்லை.

    தற்போது ஜெயா டி.வி.யில் "காலை வணக்கம்', "கோலிவுட் டைரி' ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். கல்லூரி இல்லாத நேரங்களில் மட்டுமே ஸ்டுடியோவிற்கு போவேன். மற்ற நேரங்களில் படிப்புதான்.

    சின்ன வயதில் இருந்த ஐ.டி. துறையில் சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அதற்காக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறேன்.

    மற்றபடி காம்பியருக்கு பிறகு சீரியல் அப்புறம் சினிமா என எல்லோருக்கும் இருக்கிற ஆசைகள் எனக்குச் சுத்தமாக இல்லை. அதைப் பற்றி எதுவும் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை.

    5 வருடங்களுக்கு பிறகு எதாவது ஒரு ஐ.டி. கம்பெனியில் நிச்சயமாக பெரிய பதவியில் இருப்பேன் அவ்வளவுதான் இப்போதைக்கு. கல்லூரி வாழ்க்கையை மட்டுமே சந்தோஷமாக அனுபவித்து வருகிறேன். நான் ஏற்கெனவே நடிகை ஷோபனாவிடம் 3 வருடங்களாக பரத நாட்டியம் கற்று வருகிறேன். ஷோபனாதான் என் பரத நாட்டிய குரு. தற்போது சென்னையில் உள்ள பிரபல நாட்டியப் பள்ளியில் நடனம் கற்று வருகிறேன் என்றார் சித்ரா

  10. #89
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    தவிர்க்க முடியாமல் தவித்தேன்

    ஜானவி

    ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள தெரு போன்ற செட்டில் ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜானவி. "என் மன வானிலே' படத்தில் "ரோட்டோர பாட்டுச் சத்தம் கேட்குதா....' பாடலுக்கு அழகாக நடனமாடியும், போலீஸ் அதிகாரி மன்சூர் அலிகானை அழவைக்கும்படியும் நடித்தவர் இவர். "அன்பு' படத்தில் ஹீரோயினாக நடித்தவர். "அது தீபுவாச்சே' என்று மிரட்டாதீர்கள். அவர்தான் இப்போது ஜானவி என்று பெயர் மாற்றியிருக்கிறார். நாம் ஜானவியிடம் பேசினோம்.

    * "அன்பு' படம் வெளியான பிறகு அடுத்தடுத்து உங்களுக்கு பட வாய்ப்பு வராமல் போனது ஏன்?

    இயக்குநர்கள் விரும்பினால்தான் படங்கள் வரும். எனக்கு இயல்பிலேயே ஹோம்லியான முகம் அமைந்துவிட்டதால் நான் குடும்பப் பாங்கான கேரக்டருக்குத்தான் ஒத்துவருவேன் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

    ஆனால், தங்கை கேரக்டருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் ஒத்துக் கொள்ளவில்லை. நல்ல வாய்ப்புக்களை மட்டும் பயன்படுத்தி நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

    * இப்போது என்னென்ன படங்கள் கைவசம்?

    தெலுங்கில் ஈ.வி.வி. சத்தியநாராயணா டைரக்ஷனில் "எவ்ரி கோலா வாலூதே' என்ற படத்தில் ஹீரோயினா, ஆர்யன் ராஜேஷ் ஜோடியாக நடித்தேன். அந்தப் படம் அங்கே சில்வர் ஜூப்ளி.

    அடுத்து கன்னடத்தில் முரளி ஹீரோவாக நடித்த "சித்து' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அது விரைவில் ரிலீஸôகவுள்ளது. அடுத்து சிவ்ராஜ் குமார் ஜோடியாக "அன்னாதங்கி' என்கிற படத்தில் நடித்திருக்கிறேன். அந்தப் படமும் விரைவில் ரிலீஸôக இருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் நான்தான் ஹீரோயின்.

    தமிழில் "எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தில் "ஜெயம்'ரவியின் தங்கையாக நடித்தேன். இப்போது சேரன் ஸôர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கும் "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தில் பரத்தை துரத்தித் துரத்திக் காதலிக்கும் சுட்டிப் பெண்ணாக நடித்து வருகிறேன். இதில் இன்னொரு நாயகி மல்லிகா.

    அடுத்து, ஆர்.பி.செüத்ரி தயாரிப்பில் அவரது மகன் "ஜித்தன்' ரமேஷ் ஜோடியாக "மது' படத்தில் நடிக்கிறேன். அதில் இன்னொரு ஹீரோயினாக ப்ரியாமணி நடிக்கிறார்.

    "மது' படத்தில் ஃபர்ஸ்ட் ஆஃப் முழுக்க காலேஜ் பெண்ணாக நடிக்கிறேன். தலைமுடி ஷார்ட்டா வைத்துக் கொண்டு, காலேஜையே கலக்கிக் கொண்டிருப்பேன். ஆனா செகண்ட் ஆஃப்ல நீண்ட தலைமுடி வைத்துக்கொண்டு குடும்பப் பாங்கான பெண்ணாக வருவேன்.

    விவேக், ஹீரோ பரத் இருவருடனும் இணைந்து பர்ஃபாமன்ஸ் பண்ணக்கூடிய நல்ல கேரக்டர் அமைஞ்சிருக்கு. இளையராஜா ஸôர் இசையில் தென்னரசு டைரக்ட் பண்றார்.

    * தமிழ், தெலுங்கு, கன்னடம் எது முக்கியம்னு முடிவு பண்ணியிருக்கீங்க?

    தமிழ் தான் முதல் சாய்ஸ். பிறகுதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம்.

    நல்ல கேரக்டர் வரணும். நல்ல பர்ஃபாமன்ஸ் செய்து எனது திறமைகளை வெளியே கொண்டு வரணும்னு ஆசை.

    ஒரே நேரத்தில் இரண்டு வாய்ப்புகள் வந்து எதை ஒப்புக் கொள்வது என்ற குழப்பங்களும் வருகிறது. இப்படித்தான் "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, கே.எஸ். ரவிகுமார் ஸôர் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு அழைப்பு வந்தது. அதைத் தவிர்க்க முடியாமல் தவித்தேன்.

    * மும்பை நடிகைகள் தாராளமாகக் கவர்ச்சி காட்டி நடிக்கும்போது நீங்கள் அவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு எப்படிக் களத்தில் நிற்கப் போகிறீர்கள்?

    கவர்ச்சிங்கிறது நிரந்தரம் இல்லை. ஒருத்தரோட கவர்ச்சியை எத்தனைப் படங்களில் ரசிக்க முடியும்? அதனால் கவர்ச்சியால் மட்டும் ஜெயித்து விட முடியாது. திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும்.

    சேலஞ்சிங்கான கேரக்டர் கிடைத்து, அவற்றில் நடித்து பேசப்படணும்னு ஆசையாய் இருக்கு. தமிழில் எனக்கான ஒரு இடம் கண்டிப்பாக இருக்கும். அந்த இடம் கிடைக்கும் வரை போராடுவேன்.

    * ஏன் அடிக்கடி பெயர் மாற்றுகிறீர்கள்?

    நான் அடிக்கடி பெயர் மாற்றவில்லை. வீட்டில் எனக்கு திவ்யலட்சுமி என்று பெயர் வைத்தார்கள். செல்லமாக தீபிகா என்று அழைத்தார்கள். ஆனால், "அன்பு' படத்தின் டைரக்டர் தீபு என்று மாற்றி வைத்தார். இப்போதுதான் ஜானவி என்று பெயர் மாற்றியிருக்கிறேன்.

    என் அம்மா பெயர் ஜானகி என்று இருப்பதால் அதில் ஒரு எழுத்தை மட்டும் மாற்றி ஜானவி என்று வைத்திருக்கிறேன்.

    எனது பெரியம்மா விஜயலட்சுமிதான் எனக்கு சினிமாவில் வழிகாட்டியாகவும், கூடவே இருந்து உதவியும் வருகிறார்'' என்கிறார் திவ்யலட்சுமி.
    "அன்பே சிவம்.

  11. #90
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    'எவ்வளவு நாளைக்குத்தான் பாவாடை, தாவணி?'

    சினேகா!

    ""எனக்கு நம்பர்-ஒன், நம்பர்-டூ என்று எண்களில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. உடையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து கவர்ச்சியைக் காட்டுபவர்கள்தான் "நம்பர்-ஒன்' என்று சொல்கிறார்கள்.

    நான் அப்படி நடிக்க விரும்பவில்லை. குடும்பப் பாங்கான வேடங்களில், ஆபாசம் இல்லாத அழகான கிளாமர் வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்'' என்று எடுத்த எடுப்பிலேயே பேச ஆரம்பித்தார் சினேகா!

    ""அதனால்தான் "பவானி' படத்தில் ஆக்ஷன் கதாநாயகி வேடம் போட தயாராகி விட்டீர்களா?'' என்றதும், கலகலவென சிரிக்கிறார். பிறகு பேசும்போது, ""விஜயசாந்தி நடித்த "வைஜெயந்தி ஐபி.எஸ்.' படத்தை அப்படியே "பவானி'யாக எடுக்கவில்லை.

    ஒரு சின்ன கருவை மட்டும்தான் அந்தப் படத்திலிருந்து எடுத்திருக்கிறார்கள். அதை வைத்து இப்போதுள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஆர்த்திக்குமார்.

    அது ஒரு ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம். இது வேறு ஸ்டைலில் இருக்கும். எவ்வளவு நாளைக்குத்தான் பாவாடை, தாவணியுடன் நடிப்பது? கொஞ்சம் மாறுதல் வேண்டாமா? அதற்காக "பவானி' படத்தில் வித்தியாசமான கெட்-அப்பில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்காக சண்டைப் பயிற்சி எல்லாம் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

    விஜயசாந்தி அரசியலில் குதித்தது போல நீங்களும் அரசியலில் குதிப்பீர்களா?''

    இன்னும் ஐந்து வருஷம் நடிக்கலாம்னு இருக்கேன். அது என் விருப்பம். ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது நம் கையில் இல்லை. எல்லாம் அவன் செயல்.
    நடிகர்களில் சிரஞ்சீவியும், விஜயகாந்தும் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

    அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்வதை வரவேற்க வேண்டியதுதான்.

    உங்களது நிறைவேறாத ஆசை?

    சென்ற என் பிறந்த நாள் அற்புதமான நாளாக அமைந்தது. அன்னைக்கு எனக்கு நிறைய நகைகளும், பரிசுப் பொருட்களும் கிடைத்தன. இருந்தாலும் நான் குறைவாகத்தான் ஆசைப்படுவேன். நிறைவேறாத ஆசை என்று எதுவும் இல்லை.

    நிறைய சம்பளம் கொடுத்தால் ஒரு பாட்டுக்கு ஆடுவீர்களா?

    என் கொள்கைகளை நான் என்றைக்குமே விட்டுக் கொடுத்ததில்லை. "ஒவ்வொரு பூக்களும்...' போன்ற பாடல் காட்சியாக இருந்தால் சம்மதிப்பேன். குத்துப் பாடலில் ஒருபோதும் ஆட மாட்டேன்.

    அடிக்கடி கோயிலுக்குப் போகிறீர்களாமே? என்ன வேண்டுகிறீர்கள்?

    வேண்டுதலை வெளியில் சொல்லக் கூடாது என்பார்கள். அப்படி சொன்னால் அந்த வேண்டுதல் நிறைவேறாதாம். பொதுவாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும், அவை நல்ல படங்களாக இருக்கவேண்டும். வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும். விருதுகள் கிடைக்கிற மாதிரியான வேடங்கள் அமையவேண்டும் என்று ஆசைப்படுவேன். அது என் உள்மனசு எண்ணம்.

    உங்கள் வருங்கால கணவர் சினிமாவை சேர்ந்தவராக இருப்பாரா?

    தொழில் அதிபராக இருப்பார் என்று இப்போது சொல்லிவிட்டு பின்னர் சினிமாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் நீங்கள் கேட்கமாட்டீர்களா? அதனால் இப்போதைக்கு என் திருமணத்தைப் பற்றி நான் எதையும் முடிவு செய்யவில்லை, சொல்லவும் விரும்பவில்லை.

    பண்ருட்டியில் திருமண மண்டபம் கட்டியது போல் வேறு எங்கேயாவது திருமணம் மண்டபம் கட்டி வருகிறீர்களா?

    அதை என் அப்பாவிடம்தான் கேட்க வேண்டும்.

    இப்போது நடித்துவரும் படங்களைப் பற்றி கூறுங்கள்?

    "அறுவடை', "பவானி', "சிலம்பாட்டம்', "முரட்டுக்காளை', வசந்த பாலனோட "அங்காடித் தெரு' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இதில் "அங்காடித் தெரு'வில் கெஸ்ட் ரோல்தான் பண்றேன். அப்புறம் மூன்று படங்களில் நடிக்க பேசி வருகிறேன்'' என்றார்.
    "அன்பே சிவம்.

Page 9 of 46 FirstFirst ... 789101119 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •