Page 33 of 46 FirstFirst ... 23313233343543 ... LastLast
Results 321 to 330 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #321
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விரைவில் வில்லியாகப் போகிறேன் - ஏஞ்ஜல்


    கல்யாணம் முதல் காதல் வரை, அபூர்வ ராகங்கள் என சில தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ஏஞ்ஜல். எந்த சீரியலாக இருந்தாலும் எனக்கு தரப்படும் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறும் இவர், விரைவில் வில்லியாக டிவி நேயர்கள் என்னை பார்க்கலாம் என்கிறார்கள்.
    மேலும் அவர் கூறுகையில், கல்யாணம் முதல் காதல் வரை தொடரில்தான் நான் முதலில் நடிக்கத் தொடங்கினேன். நேயர்கள் கவனிக்கப்படும் வகையில் எனது கேரக்டர் அமைந்தது. அதையடுத்து அபூர்வ ராகங்களில் ஹீரோயினாக நடிக்கும் பவித்ராவின் நெருக்கமான தோழியாக நடிக்கிறேன். தோழி வேடம் என்றாலும் நல்ல கேரக்டர். தற்போது மேலும் இரண்டு சீரியல்களில் நடித்து வருகிறேன். அதுபற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். அதோடு, சீரியல்களில் நடிப்பது சம்பந்தமான எனக்கு தினமும் பல போன்கள் வருகிறது. ஆனால் நான் பண்ணும் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டுதான் நடிப்பேன்.
    >நான் சந்திக்கும் டைரக்டர்கள் உனக்கு கண்கள்தான் ப்ளஸ் பாய்ண்ட் என்கிறார்கள். அதோடு, நீ வில்லி வேடங்களில் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள். அதனால் இப்போது உருட்டி மிரட்டி நடிக்கக் கூடிய வில்லி வேடங்களை எதிர்பார்க்கிறேன். சில இயக்குனர்களும் சீக்கிரமே வில்லி வேடத்தில் நடிக்க அழைப்பு விடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதனால் இதுவரை செண்டிமென்ட் வேடங்களில் மட்டுமே என்னை பார்த்து வந்த டிவி நேயர்கள் விரைவில் வில்லியாகவும் எனது இன்னொரு அவதாரத்தைப் பார்க்கலாம் என்கிறார் ஏஞ்ஜல்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #322
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அம்மா வேடம் நாயகிக்கு இணையான வேடம்! - மீரா கிருஷ்ணன் தூர்தர்ஷன் மற்றும் சில தனியார் தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்தவர் மீரா கிருஷ்ணன். கிட்டத்தட்ட 20 சீரியல்களில் அவர் நடித்துள்ளார். சினிமாவில் குணசித்ர நடிகையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆதிரா சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்.
    இதுபற்றி அவர் கூறுகையில்

    இந்த ஆதிரா சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக நடிக்கிறேன். அதனால் அவர் தோன்றும் பெரும்பாலான காட்சிகளில் நானும் வருகிறேன். அந்த வகையில், சீரியல்களைப்பொறுத்தவரை அம்மா வேடம் என்றால் கதாநாயகிக்கு இணையான வேடம் என்பது போல் உள்ளது. அதனால் அம்மா வேடங்களை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.
    மேலும், சினிமாவிலும் இப்போது நான் அதிகமாக அம்மா வேடங்களில் தான் நடிக்கிறேன். ஆனால் சினிமாவில் ஓரிரு தினங்களிலேயே என் சம்பந்தபபட்ட காட்சிகளை படமாக்கி விடுகிறார்கள். அதனால் எனக்கு நிறைய நேரம் இருப்பதால சீரியல்களில் எனது கவனம் அதிகரித்திருக்கிறது. அதோடு, நான் சின்னத்திரையில் நீண்டகால நடிகை என்பதால், என்னை யாருமே டம்மியான அம்மா வேடங்களுக்கு அழைப்பதில்லை. எனக்கு அதிகப்படியான காட்சிகள் இருந்தால் மட்டுமே அழைக்கிறார்கள். அந்த வகையில், சீரியல், சினிமா இரண்டிலுமே மனதிருப்தியுடன் நடித்து வருகிறேன் என்கிறார் மீரா கிருஷ்ணன்


    நன்றி: தினமலர்
    Last edited by aanaa; 5th April 2016 at 07:26 PM.
    "அன்பே சிவம்.

  4. #323
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவுக்கு வருகிறார் "அது இது எது" திவாகர்!
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "அது இது எது"; நிகழ்ச்சியில் நடித்து வருபவர் திவாகர். பல பிரபலங்களின் கெட்டப்புகளில் தோன்றி நடித்து பாராட்டு பெற்று வரும் அவருக்கு அடுத்தபடியாக சினிமாவிலும் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால் சினிமா வாய்ப்புகளை தான் வரவேற்பதாக கூறுகிறார் திவாகர்.
    இதுகுறித்து அவர் கூறுகையில்,"அது இது எது நிகழ்ச்சியில் எம்.ஆர்.ராதா, கவுண்டமணி, விணுசக்ரவர்த்தி, ரகுவரன் என பல பிரபலங்களின் கெட்டப்புகளில் தோன்றி நான் நடித்திருக்கிறேன். அதற்கு நேயர்கள் மத்தியில் ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அதோடு, வெற்றிமாறன், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் "அது இது எதுநிகழ்ச்சியை பார்த்து விட்டும் என்னை மட்டுமின்றி எங்களது டீமையே பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் நிகழ்ச்சியை கண்டுகளிப்பதாகவும் சொல்கிறார்கள். இதை எங்களுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம்.
    மேலும், ஒருமுறை நான் டைரக்டர் வெற்றிமாறனை சந்தித்தபோது, உங்களுக்கேற்ற வேடம் வரும்போது கண்டிப்பாக என் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். வேறு சில டைரக்டர்களும் இதேபோல் வாக் குறுதி தந்திருக்கிறார்கள். அந்த வகையில், இதற்கு முன்பு சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த நான், விரைவிலேயே சில படங்களில் கமிட்டாகி சின்னத்திரையைப் போலவே சினிமாவிலும் பிரபலமாகப்போகிறேன் என்று கூறும் திவாகர், சினிமாவில் காமெடி கலந்த குணசித்ர வேடங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  5. #324
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியல்கள் தான் என் நடிப்பு திறமையை வளர்த்தன! மதுமிலா


    சின்னத்திரையில் ஆபீஸ், அக்னி பறவை, தாயுமானவன் போன்ற தொடர்களில் நடித்தவர் மதுமிலா. இப்போது அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மாறாக சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
    இதுபற்றி மதுமிலா கூறுகையில், ஆபீஸ் சீரியலில்தான் நான் என்ட்ரி ஆனேன் என்றாலும், சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனபோதும் சினிமாவில் உடனடியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல்களில் கிடைத்த வாய்ப்புகள் மூலம் எனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு வந்தேன். அந்த வகையில், ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொருவிதமான வேடங்களில் நடித்தது எனக்கு நல்லதொரு அனுபவமாக அமைந் தது. அதோடு, எந்தமாதிரியான வேடங்களிலும் நடிக்கக்கூடிய தைரியத்தை ஏற்படுத்தின.
    இந்த நிலையில், பூஜை படத்தில் தங்கை வேடத்தில் சினிமாவில் என்ட்ரியான நான், ரோமியோ ஜூலியட்டில் தோழியாக நடித்து, அதையடுத்து மாப்ள சிங்கம் படத்தில் கவனிக்கப்படும் வேடத்தில் நடித்தேன். அதையடுத்து இப்போது இன்னொரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறேன். அந்த படத்திற்கு இன்னும் டைட்டீல் ரெடியாகவில்லை. மேலும், சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் நடித்து நல்லதொரு நடிகையாக நிலைக்க வேண்டும் என்பதுதான் எனது தற்போதைய நோக்கமாக உள்ளது என்கிறார் மதுமிலா.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  6. #325
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவில் பிசியாகும் ;அது இது எது; டைகர் தங்கதுரை!
    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ;அது இது எது நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டைகர் தங்கதுரை. அந்த நிகழ்ச்சியில் மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் அவர் இப்போது சினிமாவிலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    இதுபற்றி அவர் கூறுகையில், விஜய் டிவியின் 'அது இது எது' நிகழ்ச்சிதான் எனக்கு அடையாளம். அதில் எனது நடிப்பை டிவி நேயர்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினரும் கண்டுகளித்து வருகிறார்கள். அதோடு சில டைரக்டர்கள் என்னை நடிப்பதற்கும் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு சின்னத்திரையின் ஒரு நிகழ்ச்சி என்னை சினிமாத்துறைக்கு கொண்டு வந்திருக்கிறது.
    ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நான், இப்போது நயன்தாரா நடிக்கும் டிக் டிக் டிக், அட்டகத்தி தினேஷ் நடித்து வரும் அண்ணனுக்கு ஜே, மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள அட்டி என பல படங்களில் நடிக்கிறேன். இதில் நயன்தாராவின் டிக் டிக் டிக் படத்தில் இன்னும் நான் நடிக்கவில்லை. அந்த படத்தில் நடிக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். காரணம், நான் நயன்தாராவின் தீவிரமான ரசிகன். அவர் நடித்த நானும் ரவுடிதான் உள்பட பல படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி அவரை படங்களில் ரசித்து வந்த நான் இப்போது அவருடனேயே இணைந்து நடிக்கப்போகிறேன் என்கிறபோது ரொம்ப சந்தோசமாக உள்ளது.
    அதேபோல் அட்டகத்தி தினேசுடன் நடிக்கும் அண்ணனுக்கு ஜே படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். கதைப்படி தினேசின் நண்பனாக இருந்தும் ஒருகட்டத்தில் அவரையே கைது செய்கிற சூழலுக்கு நான் தள்ளப்படுவேன். ப்ரண்ட்ஷிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அந்த கேரக்டர் என்னை அதிகமாக பாதித்துள்ளது. அதேபோல் அட்டி படத்தில் நான்கு லீடு ரோல்களில் நானும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறும் டைகர் தங்கதுரை. என்னதான் சினிமாவில் நான் பிசியானபோதும், அது இது எது நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருவேன். காரணம், அது எனக்கு கிடைத்த நல்லதொரு மேடை. அதோடு, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு விதமான கேரக்டர்களில் நடிப்பது திறமைக்கு தீனி போடுகிற ஒரு விசயமாகவும் உள்ளது என்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #326
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    முழுநேர சீரியல் நடிகையாக இருக்கவே ஆசைப்படுகிறேன்! -கிருத்திகா
    முந்தானை முடிச்சு, வம்சம் தொடர்களுக்குப்பிறகு இப்போது கேளடி கண்மணி தொடரில் நடித்து வருகிறார் கிருத்திகா. இந்த சீரியலில் நாயகனாக நடிக்கும் அர்ணவின் அக்கா வேடத்தில் நடிக்கிறார். அதோடு தம்பிக்காக தட்டிக்கேட்கும் ஒரு துணிச்சலான வேடத்தில் நடித்திருக்கிறார்.<p>இதுபற்றி கிருத்திகா கூறுகையில்,
    >சின்னத்திரைகளில் எத்தனையோ மாறுபட்ட வேடங்களில் நடித்து விட்டேன். குறிப்பாக, வம்சம் தொடரில் வில்லித்தனமான ரோலில் நடித்தேன். என் கேரக்டர் இப்போது வரவில்லை. மீண்டும் என்ட்ரி கொடுப்பார்கள் என்று கருதுகிறேன். இந்நிலையில் தற்போது நான் கேளடி கண்மணி சீரியலில் நடித்து வருகிறேன். இதில் எனக்கு ஹீரோவுக்கு அக்காவாக நடிக்கும் செண்டிமென்டான வேடம். தம்பிக்கு போராடும் வேடம் என்பதால், நான் வில்லியாக நடித்த வேடங்களை விட இந்த வேடத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனக்கும் இது மனதளவில் திருப்தியை கொடுக்கிற வேடமாக அமைந்திருக்கிறது. என்றாலும், தொடர்ந்து ஒரே மாதிரியான வேடங்களாக நடிப்பதில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுக்கும் தொடர் களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன்.
    >குறிப்பாக, சைக்கோவாக, மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். இந்த மாதிரி கேரக்டர்களில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த வேண்டியதிருக்கும். அது ஒரு ஆர்ட்டிஸ்டாய் எனக்கு திருப்தியை கொடுக்கும். தொடர்ந்து என்னை ஒரே மாதிரியான வேடங்களில் பார்த்து வந்த நேயர்களுக் கும் புதிய அனுபவமாக அமையும். அதனால் என்னை சீரியல்களுக்கு புக் பண்ண வரும் டைரக்டர்களிடம் மாற்றுத்திறனாளி வேடங்கள் இருந்தால் கொடுங்கள் என்றும கேட்டு வருகிறேன். எனது நிறைவேறாத இந்த ஆசைகள் அடுத்தடுத்து நான் நடிக்கும் சீரியல்கள் மூலம் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன் என்று கூறும் கிருத்திகாவுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லையாம். முழுநேர சீரியல் நடிகையாக இருந்தாலே போதும் என்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #327
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரைதான் எனது அடையாளம்! -தொகுப்பாளர் அசார்
    சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் அசார். அதோடு ஏராளமான குரல்களில் மிமிக்ரி பண்ணும் திறன் கொண்டவர். அதனால் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நேயர்கள் எந்த நடிகரை மாதிரி பேச சொல்கிறார்களே அதேகுரலில் பேசி அவர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
    இதுபற்றி அசார் கூறுகையில்,
    மிமிக்ரி பேசும் திறன் எனக்கு இயற்கையிலேயே வந்தது. அதனால் அதை வைத்தே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பேசி வளர்ந்து விட்டேன். அதோடு நான் எப்போதுமே கலகலப்பாக இருப்பேன். அதனால் என்னைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வேன். அதனாலேயே என்னை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. அதோடு, சினிமா உலகைச் சேர்ந்தவர்களும் எனது மிமிக்ரி, காமெடி ஷோக்களை ரசிக்கிறார்கள். அதுவே இப்போது எனக்கு சினிமா கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.
    ஏற்கனவே விக்ரமனின் நினைத்தது யாரோ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்தேன். அதுகூட ஒரு பேஸ்புக் ஷோவில் நான் காமெடியாக பேசியதை பார்த்த டைரக்டர் விக்ரமன், என்னை அழைத்து அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பினை கொடுத்தார். அதையடுத்து இப்போது சாரல் என்ற படத்திலும் நடித்திருக்கிறேன். இதையடுத்தும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறேன் என்று கூறும் அசார், என்னதான் சினிமாவில் தொடர்ந்து நடித்தபோதும், சின்னத்திரையை நான் விடுவதில்லை. காரணம், எனக்கு அடையாளமே சின்னத்திரைதான். அதன்மூலம்தான் எனக்கு ஏராளமான ரசிகர் -ரசிகைகள் கிடைத் துள்ளனர். அதனால் சினிமாவில் நடித்து வந்தாலும், சின்னத்திரையில் எனது நிகழ்ச்சிகளை குறித்த நேரத்திற்குள் முடித்துக்கொடுத்த பிறகுதான் சினிமாவில் நடிக்க தேதி கொடுக்கிறேன் என்கிறார்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #328
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கலைநிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டும் வம்சம் வில்லி ஜெயஸ்ரீ!


    ரம்யாகிருஷ்ணன் தயாரித்து, நடித்து வரும் தொடர் வம்சம். அருள்ராய் இயக்கி வருகிறார். இந்த தொடரில் ரோஜா என்கிற வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. இதுதவிர வேறு எந்த தொடரிலும் அவர் நடிக்கவில்லை. காரணம், இந்த சீரியலுக்கு போக மீதமுள்ள நேரத்தை அவர் கலை நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்து வருகிறாராம்.
    இதுபற்றி ஜெயஸ்ரீ கூறும்போது, என் அம்மா லட்சுமிராவ், பெரிய பரத நாட்டிய கலைஞர். தில்லானா மோகனாம்பாள் உள்பட சில படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றியவர். இப்போதும் அவர் பரதநாட்டிய பள்ளி நடத்தி வருகிறார். மேலும், எனக்கும் சிறுவயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொடுத்து 5 வயதிலேயே எனக்கு அரங்கேற்றம் செய்து விட்டார். அதனால் எனக்கு நாட்டியத்தில் பெரிதாக சாதிக்க வேணடும் என்பதுதான் நீண்டகால ஆசையாக இருந்து வருகிறது.


    அதனால்தான், சின்னத்திரை சீரியலில் நடித்தபோதும், கலை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பரதநாட்டிய நடனங்களில் ஆடி வருகிறேன். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன் என்று கூறும் ஜெயஸ்ரீ, சீரியல், கலை நிகழ்ச்சிகள் போக மற்ற நேரங்களில் குழந்தைகளுக்கு பரதநாட்டியமும் கற்றுக்கொடுக்கிறாராம். இது அவருக்கு பெரிய ஆத்மதிருப்தியை கொடுக்கிறதாம்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #329
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியல்கள் தான் என் நடிப்பு திறமையை வளர்த்தன! மதுமிலா


    சின்னத்திரையில் ஆபீஸ், அக்னி பறவை, தாயுமானவன் போன்ற தொடர்களில் நடித்தவர் மதுமிலா. இப்போது அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மாறாக சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
    இதுபற்றி மதுமிலா கூறுகையில், ஆபீஸ் சீரியலில்தான் நான் என்ட்ரி ஆனேன் என்றாலும், சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஆனபோதும் சினிமாவில் உடனடியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல்களில் கிடைத்த வாய்ப்புகள் மூலம் எனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு வந்தேன். அந்த வகையில், ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொருவிதமான வேடங்களில் நடித்தது எனக்கு நல்லதொரு அனுபவமாக அமைந் தது. அதோடு, எந்தமாதிரியான வேடங்களிலும் நடிக்கக்கூடிய தைரியத்தை ஏற்படுத்தின.
    இந்த நிலையில், பூஜை படத்தில் தங்கை வேடத்தில் சினிமாவில் என்ட்ரியான நான், ரோமியோ ஜூலியட்டில் தோழியாக நடித்து, அதையடுத்து மாப்ள சிங்கம் படத்தில் கவனிக்கப்படும் வேடத்தில் நடித்தேன். அதையடுத்து இப்போது இன்னொரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறேன். அந்த படத்திற்கு இன்னும் டைட்டீல் ரெடியாகவில்லை. மேலும், சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் நடித்து நல்லதொரு நடிகையாக நிலைக்க வேண்டும் என்பதுதான் எனது தற்போதைய நோக்கமாக உள்ளது என்கிறார் மதுமிலா.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #330
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரையின் மலர் டீச்சர் நான்! -ஸ்ரிதிகா


    சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு, மதுரை டூ தேனி, வேங்கை என சில படங்களில் நடித்து விட்டு நாதஸ்வரம் தொடரில் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஸ்ரிதிகா. அதையடுத்து மாமியார் தேவை, உணர்வுகள் சங்கமம், வைதேகி என பல சீரியல்களில் நடித்தவர் தற்போது குலதெய்வம், என் இனிய தோழியே போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
    தனது நடிப்பு குறித்து நேயர்கள் சொல்லும் கருத்து பற்றி ஸ்ரிதிகா கூறுகையில், சின்னத்திரையைப் பொறுத்தவரை பெரும்பாலும் நான் செண்டிமென்ட் வேடங்களில்தான் நடித்திருக்கிறேன். அதை நேயர்கள் பெரிய அளவில் ரசித்துள்ளனர். அதோடு, மனதை தொடும் வேடங்களில் நடிக்கவே கேட்டுக்கொள்கிறார்கள். முக்கியமாக, பேஸ்புக்கில் என்னை தொடர்பு கொள்ளும் பெண்கள், குடும்பப் பெண்களுக்கு அறிவுறுத்தக்கூடிய நல்ல கருத்து சொல்லும் கேரக்டர்களிலும் நடிக்க சொல்கிறார்கள்.
    சீரியல்களைப் பொறுத்தவரை நேயர்களின் வரவேற்பு தான் முக்கியம் என்பதால், என்னிடமிருந்து எந்த மாதிரியான நடிப்பை நேயர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொண்டுதான் நான் கதாபாத்திரங்களை செலக்ட் செய்கிறேன் என்று கூறும் ஸ்ரிதிகா, நாதஸ்வரம் தொடரில் நான் நடித்த மலர் கேரக்டர் பெரிய அளவில் நேயர்கள் கவர்ந்த வேடம். அந்த வகையில் எனது பெயர் யாருக்குமே தெரியாது. இப்போதுவரை என்னை மலர் என்றுதான் சொல்கிறார்கள்.அந்த வகையில், பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவி எப்படி மலர் டீச்சராக பேசப்பட்டு வருகிறாரோ, அதற்கு முன்பே நாதஸ்வரம் தொடரில் நான் மலர் கேரக்டர் மூலம் பேசப்பட்டேன். ஆக, நான்தான் சின்னத்திரையின் மலர் டீச்சர் என்கிறார் ஸ்ரிதிகா.




    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Page 33 of 46 FirstFirst ... 23313233343543 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •