Page 41 of 46 FirstFirst ... 313940414243 ... LastLast
Results 401 to 410 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #401
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மௌன ராகம் ரேவதி மாதிரி!
    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஸ்ரீதிவ்யா, ஆந்திரதேசம் அனுப்பிவைத்த ஆப்பிள் ஆவார். அங்கு குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, பாரதி என்ற படத்தில் நடித்தமைக்காக 2006 ஆம் ஆண்டு ஆந்திர அரசின் நந்தி விருதும் பெற்றவர்.
    இன்றைய தேதியில் தமிழ் சினிமா இளம் ரசிகர்களின் கனவு நாயகி. அவர் என்ன நினைக்கிறார்... கேட்கலாமே...
    சினிமாவில் உங்களுக்கான இடம் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
    அதை நான் டிசைன் பண்ணமுடியாது. அதனால், எனக்கான இடத்தையும் நான் முடிவு செய்யமாட்டேன். நல்ல கேரக்டர்களில் நடிக்கவேண்டும். வெற்றிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். ஹீரோ, டைரக்டர் ஆகியோருக்கு வெற்றி எவ்வளவு முக்கியமோ, அதே போலவே ஹீரோயினுக்கும் முக்கியம். கவர்ச்சியாக நடித்தெல்லாம் நிற்கமுடியாது. அதற்காக ஓரிரு படங்கள் ஓடலாம். நான் கவர்ச்சியாக நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்ளமாட்டேன். சக நடிகைகளின் நடிப்புப்போட்டியில் குதிப்பேன். நடிப்பில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வேன்.
    நான் ஆந்திர சினிமாவில் குழந்தையாக நடிக்க வந்து, ஆங்கே ஆறு படங்களில் நாயகியாக நடித்து முடித்துதான் தமிழுக்கு வந்தேன். அதனால் எதையும் நிதானமாக முடிவெடுத்து குறைந்த அளவில் படங்களில் நடித்தாலும், நல்ல படங்களாக நடிக்க வேண்டும் அவ்வளவுதான்.
    நேரில் இவ்வளவு அமைதியாக பக்கத்தில் இருப்பவருக்கே கேட்காத மாதிரி பேசுகிறீர்கள். பெங்களூரு நாட்கள் படத்தில் துறுதுறுவென கலக்கியிருக்கிறீர்களே...
    நான் கலகலப்பான ஆளுதான். இப்ப கொஞ்சம் அப்படி ஆயிட்டேன். மலையாள "பெங்களூரு டேஸ்' படத்தை நான் ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். அப்போது எனக்கொரு எண்ணம் வந்தது. என்னுடைய ஸ்டைலில் இதைப் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று.
    ஏனென்றால் இயல்பிலேயே நான் அப்படியான பொண்ணுதான். ஆனால் படத்தில் நடிக்கும்போது ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா எல்லோரும் சேர்ந்து என்னை அழ வைத்துவிட்டார்கள். அப்படியொரு கலாட்டா. சாப்பிடும்போதுகூட சும்மா இருக்க மாட்டார்கள். ஏதாவது சொல்லி, சிரிப்பு காட்டுவார்கள். சாப்பாடு விக்கிக்கொள்ளும். ஆனால், மீண்டும் இதுபோன்ற ஒரு ஜாலியான டீம் அமையாது.
    நீங்க பல இளைஞர்கள் கனவில் வந்து அவர்களின் தூக்கத்தைக் கலைக்கிறீர்கள். உங்கள் கனவில் எந்தெந்த நாயகர்கள் வந்து தொல்லைத் தருகிறார்கள்...
    என் கனவில் எந்த ஹீரோவும் வந்துபோகலை. ஆனால் அஜித் சார், விஜய் சார், சூர்யா சார்கூடவெல்லாம் டூயட் பாடணும்னு ஆசை இருக்கிறது.
    அஜித், விஜய் கூட நடிப்பதற்கு ஒரே நேரத்தில் வாய்ப்பு கிடைக்கிறது... என்ன பண்ணுவீங்க?
    ஏன் இப்படிக் கோத்துவிடுறீங்க. என் பதிலைக் கேளுங்க ஷாக் ஆயிடுவீங்க. இரவு பகல்னு பாராமல் எப்படியாவது நடிச்சிடுவேன். இரண்டு பேர் படமும் ரொம்ப முக்கியமாச்சே. விஜய் சாருக்கு சூப்பராக செட்டாயிடுவேன். அஜித் சாருக்குத்தான் செட்டாவேனான்னு தெரியலை. ஏற்கெனவே அஜித் சாருக்கு தங்கையாக நடிக்க கூப்பிட்டார்கள். நான் நடிக்க மறுத்துவிட்டேன். அஜித் சாருக்கு எப்படிங்க தங்கையா நடிக்கிறது?
    குடும்பப் பாங்கான நடிகைகளே லிப்லாக் காட்சிகளில் நடிக்க துணிந்துவிட்ட காலம் இது. நீங்க அந்தமாதிரி முடிவுக்கு வருவீங்களா?
    பொதுவாக முத்தக் காட்சி என்பது சினிமாவில் திணிக்கப்படுவதில்லை. கதையில் அக்காட்சியின் முக்கியத்துவத்தைப் பொருத்தே அமைகிறது. எனக்கு லிப்லாக் காட்சி குறித்து இதுவரையில் எந்த ஐடியாவும் இல்லை. அதுபோன்ற சூழலும் அமையவில்லை. ஒருவேளை கதைக்கு முக்கியம் என்று நான் நடிக்கும் படத்தின் இயக்குநர் விரும்பினால், அப்போது யோசிப்பேன். இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை.
    "வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துக்குப் பிறகு "பென்சில்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானீர்கள். என்ன ஆச்சு பென்சிலுக்கு?
    நானும் அந்தப் படத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு ஸ்கூல் ஸ்டூடண்டாக வெயிட் எல்லாம் குறைத்து நடித்தேன். அந்த படத்தின் டிசைன் பார்த்தவர்கள் எல்லாம் எப்படிம்மா சேலை கட்டினா பொம்பளையாக தெரியுற, யூனிஃபார்ம் போட்டா ஸ்டூடண்டா தெரியுற என்று பாராட்டினார்கள். இது என்னுடைய மிகப்பெரிய ப்ளஸ். அதோபோல பென்சில் படத்தின் கதையும் நல்ல சப்ஜெக்ட். இம்மாதம் வெளிவந்துவிடும்.
    அடுத்தடுத்த புராஜெக்ட்?
    "பெங்களூர் நாட்கள்' முடிச்சாச்சு. அடுத்து கார்த்தி சாரோட நடிக்கிற "கஷ்மோரா'. இன்னும் இரண்டு புராஜெக்ட் பேசிக்கிட்டிருக்கேன்.
    "கஷ்மோரா' படத்தில் நயன்தாராவுக்குத்தான் முக்கியத்துவம் என்று பேசப்படுகிறதே..
    என்னைப் பொறுத்த அளவில், எனக்கு முக்கியத்துவம் உள்ள, என் நடிப்பும் பேசப்படுகிற பாத்திரங்களைத் தேர்வு செய்துதான் நடிக்கிறேன். அந்தப் படத்தில் நான் ஏன் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பது படம் வந்தால்தான் தெரியும். வரும்போது பாருங்கள்.
    சினிமாவில் உங்கள் கனவு...
    கண்டிப்பாக இருக்கிறது. மணிரத்னம் சார் படத்தில் நடிக்க வேண்டும். அது "மெüன ராகம்' ரேவதி கேரக்டர் மாதிரி அமையவேண்டும். அந்தக் கேரக்டரை நான் அவ்ளோ லவ் பண்றேன்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #402
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவில் தொடர்ந்து நடிக்க மகேஸ்வரி விருப்பம்


    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி மகேஸ்வரி. நிகழ்ச்சியில் ஆடல், பாடல் என்று கலக்கி வருகிறார். அதோடு விளம்பர படங்களிலும் நடித்தவர் இப்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் மூலம் சினிமா நடிகையாகவும் ஆகிவிட்டார்.


    "மீடியாவுக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதிர்ஷ்ட லட்சுமி நிகழ்ச்சி என்னை எல்லோரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. வெளியில் போனால் என்னை அதிர்ஷ்ட லட்சுமி என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். அது சந்தோஷமாக இருக்கிறது. தொகுப்பாளினி வேலை என்பது கேமரா முன்னால் நின்று ஸ்கிரிப்டை படித்துவிட்டுப்போவது என்று எளிதாக நினைக்கிறார்கள். இப்போது அப்படியில்லை. தங்களிடம் உள்ள தனித் திறமையை வெளிப்படுத்தினால் தான் அந்த நிகழ்ச்சியில் நிலைத்து நிற்க முடியும். ஸ்கிரிப்ட்டையும் தொகுப்பாளினிகள் தான் தயார் செய்து கொள்ள வேண்டும்.


    ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது வெங்கட்பிரபு சந்தித்தார். சினிமாவில் நடிக்கிறீங்களா என்று கேட்டார். ஏதோ விளையாட்டாக கேட்கிறார் என்று நினைத்து ஓகே சார் என்றேன். அதை மனதில் வைத்து சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடிக்க அழைத்தார். ரொம்ப ஜாலியான ஸ்கிரிப்ட், ஜாலியான படம் என்பதால் உடனே ஒப்புக் கொண்டேன். சினிமாவில் நடிப்பதும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருக்கிறது. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன்'' என்கிறார் மகேஸ்வரி.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  4. #403
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அனல் பறக்கும் நடிகைகள் பஞ்சாயத்து!

    ஜீ தமிழ் சேனலில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் லட்சுமிராமகிருஷ்ணன், பிரச்சினையுடன் வரும் தம்பதிகளின் பிரச்சினை களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்போது இன்னும் சில சேனல்களிலும் அதேபோன்ற நிகழ்ச்சிகளை வெவ்வேறு மாஜி நடிகைகளை வைத்து நடத்தி வருகின்றனர்


    இந்த நிலையில், நீதிமன்றம் இருக்கும்போது எதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை டி.வியில் நடத்த வேண்டும் என்று ஸ்ரீபிரியா, ராதிகா, ரஞ்சனி போன்ற மாஜி நடிகைகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஸ்ரீபிரியா, பணத்திற்காக சமூக சேவை செய்வது போன்று செயல்படுகிறார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணனை சாடியிருந்தார்.


    அதையடுத்து, நான் மட்டுமல்ல எல்லோருமே பணத்திற்காகத்தான் வேலை செய்கிறோம். நான் பணத்திற்கு வேலை செய்தாலும் அதில் உண்மையான சமூக அக்கறை உள்ளது என்று ஸ்ரீபிரியாவுக்கு பதில் கொடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆக, பஞ்சாயத்து நிகழ்ச்சியினால் மாஜி நடிகைகளிடம் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தீர்க்கவே இன்னொரு பஞ்சாயத்து வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது

    நன்றி: தினமலர்
    Last edited by aanaa; 16th December 2016 at 08:43 PM.
    "அன்பே சிவம்.

  5. #404
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமாவில் பிசியானார் தொகுப்பாளினி சுவாதிஷ்டா

    சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளி சுவாதிஷ்டா கிருஷ்ணன். பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். ஒருமுறை லிங்குசாமியை பேட்டி எடுக்கச் சென்றபோது "சினிமாவில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அப்போது மறுத்து விட்டு வந்துவிட்டார். ஒருமுறை மிஷ்கினை பேட்டி எடுத்தபோது "நான் சவரக்கத்தி என்ற படத்தை தயாரிக்கிறேன். அதில் நடிக்கிறீங்களா?" என்று கேட்டிருக்கிறார். அது இரண்டு குழந்தைக்கு தாய் கேரக்டர் என்பதால் மறுத்துவிட்டார். பின்னர் இன்னொரு கேரக்டர் இருக்கிறது என்று சொன்னபோது உடனே ஓகே சொல்லிவிட்டார். இப்படியாக சுவாதிஷ்டாவை சினிமா நடிகை ஆக்கிவிட்டார்கள்.


    முதல் படம் வெளிவருதற்கு முன்பே தற்போது மதம், கீ, அசோக் செல்வன் இயக்கும் படம் என 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார். "சின்ன வயசுல விளம்பர படங்கள்ல நடிச்சிக்கேன். மிஷ்கின் சார் கேட்டதும் மறுக்க முடியவில்லை நடிக்க ஒப்புக்கிட்டேன். ஆனா நடிக்கிறதுல குடும்பத்துக்கு அவ்வளவா பிடிக்கல குறிப்பா அப்பாவுக்கு. என்றாலும் நன்றாக நடித்து அவுங்க மனசை மாத்திடலாமுன்னு நம்பிக்கை இருக்கு. நல்ல கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிப்பேன். கிளாமராக நடிக்க மாட்டேன்" என்கிறார் சுவாதிஷ்டா.
    நன்றி: தினமலர்
    Last edited by aanaa; 16th December 2016 at 08:38 PM.
    "அன்பே சிவம்.

  6. #405
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    100 சேலையில் கலக்கும் ஐஸ்வர்யா ராகவ்

    சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தயரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராகவ். அவர் இப்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதாவது தொடர்ந்து 100 நாட்களுக்கு கைத்தறி புடவைகள் அணிந்து அதனை செல்பி எடுத்து தனது பேஸ்புக் டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். இதற்கு 100 டேய்ஸ் சாரீஸ் என்று தலைப்பும் கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராகவின் இந்த சேலை அணிவகுப்பு லைக்குகளை குவித்து வருகிறது


    ."இப்போதெல்லாம் சேலை அணிவது குறைந்து வருகிறது. குடும்ப விழாக்களில் மட்டுமே சேலை அணிகிறார்கள். எல்லா நேரத்திலும் சேலை அணியவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சியில் இறங்கினேன். நம் பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு சிறிய முயற்சி இது. இதை நான்தான் கண்டுபிடித்தேன் என்ற சொல்ல மாட்டேன், சில பெண்கள் பேஸ்புக்கில் இதற்கென தனி பக்கத்தையே உருவாக்கி படங்களை பதிவிட்டு வருகிறார்கள். நான் 100 நாள் 100 சேலை அணிகிறேன். இதற்கு 100 சேலை தேவையில்லை. ஒரே சேலையை இரண்டு விதமாக அணியலாம்" என்கிறார் ஐஸ்வர்யாராகவ்.

    நன்றி: தினமலர்
    Last edited by aanaa; 16th December 2016 at 08:39 PM.
    "அன்பே சிவம்.

  7. #406
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பிக்கிறேன்! -சின்னத்திரை ஸ்வேதா

    சின்னத்திரை உலகில் பல சேனல்களில் டான்சராக, ஆங்கராக, நடிகையாக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருந்தவர் ஸ்வேதா. இரண்டு ஆண்டுகள் மேல்படிப்புக்காக பிரான்ஸ் சென்றிருந்த அவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார். இதையடுத்து இரண்டு மெகா சீரியல்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் உள்ளார்.


    தினமலர் இணையதளத்திற்காக ஸ்வேதா அளித்த பேட்டி...


    நான் இரண்டரை வயதில் இருந்தே நடனம் கற்று வந்தேன். கேரளா பெண்ணாக இருந்தபோதும் கோயமுத்தூரில்தான் பிறந்து வளர்ந்தேன். 12 வருடமாக பரதநாட்டியம் பயின்ற பின்னர் மேற்கத்திய நடனம் பயின்றேன். நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேன். மீடியாக்களில் வரவேண்டும் என்ற ஆசைகூட எனக்கு அப்போது இருந்ததில்லை. நான் 6வது படித்தபோது தில்லானா தில்லானா -என்றொரு ஷோவில் டான்ஸ் பண்ணி முதல் பரிசு பெற்றேன். அதன்பிறகு தயா-2000 என்ற பெயரில் லதா ரஜினிகாந்த் மேடம் ஒரு ஷோ பண்ணினார்கள். அதில் ரஜினி விருது வாங்கினேன். பரதநாட்டியம், வெஸ்டர்ன், போக் என மூன்று நடனங்களையும் கலந்து நானே கம்போஸ் செய்த அந்த நிகழ்ச்சியில் நடனமாடினேன்.


    பத்தாவது படித்தபோது சின்னத்திரையில் சூப்பர் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடனமாடினேன். எனது குடும்பத்தினர் பெரிய சப்போட்டீவாக இருந்ததால், கோவையில் இருந்து சென்னை வந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் ஆடினேன். விபிள் மிஸ் சின்னத்திரையில் டைட்டீல் வின் பண்ணினேன். பின்னர் விஜய் டிவியில் விஜேவாக, ஜீ தமிழில் அஞ்சறை பெட்டி, ஜோடி நம்பர்-ஒன் பண்ணினேன். அப்போது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு, நான்கு மாதம் ஓய்வெடுத்தேன்


    அதன்பிறகு விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் திருமுருகன் இயக்கிய கார்த்திகை பெண்கள் சீரியலில் லீடு ரோலில் நடித்தேன். கல்கி படத்தில் ஸ்ருதி நடித்தது போன்று துறுதுறுவான வேடம். ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. அதன்பிறகு நான் வெளியில் எங்கு சென்றாலும் அந்த கேரக்டரின் வியூலா என்ற பெயரை சொல்லியே அழைத்தனர். விஷால் நடித்த சமர் படத்தில் அவரது தங்கையாக நடித்தேன். அதன்பிறகு, வெளிநாடு சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவு இருந்ததால் 2 ஆண்டு பிரான்ஸ் சென்று படித்தேன்.


    திரும்பி வந்தபோது பெங்களூரில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் என்னைப்பார்த்த பலரும் நான் நடித்த சீரியல்களை சொல்லி என்னை அடையாளம் கண்டதோடு தொடர்ந்து நடியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து ஜீ தமிழில் இருந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தனர். ரொம்ப சந்தோசமாயிடுச்சு. எங்கே விட்டேனோ அங்கேயிருந்தே மீண்டும் ஆரம்பித்தேன். இதுவரை 12 எபிசோடு முடித்து விட்டேன். ரஜினி ரவுண்டு, கமல் ரவுண்டு என ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவிதமாக ஆடினேன்.


    இப்போது சீரியல் வாய்ப்பும் வருகிறது. கார்த்திகை பெண்கள் சீரியலில் போல்டான பெண்ணாக நடித்தேன். அதை பண்ணும்போது நிறையபேர் என்னை உதாரணமாக எடுத்தனர். நிஜ வாழ்க்கையிலும் நான் தைரியமான பெண். அந்த கேரக்டர் பண்ணும்போது இன்னும் வளர்த்துக்கொண்டேன். அதனால் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் கதைகளில் நிறைய நடிக்க ஆசைப்படு கிறேன். எனக்கு யாருமே ரோல் மாடல் கிடையாது. ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு நல்ல விசயங்களை கற்றுக்கொள்வேன். உதாரணத்திற்கு கல்கி ஸ்ருதி மேடத்தை சொல்லலாம். அவர்களிடமிருந்தும் பல விசயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்.


    சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன். ஹீரோயின், சிஸ்டர் என எந்தமாதிரியான வேடம் கிடைத்தாலும் நடிப்பேன். மேலும், இப்போது இரண்டு மெகா தொடரில் நடிக்க பேசி வருகிறேன். ஆக, மீடியாதான் என் வாழ்க்கை என்றாகி விட்டது. அதனால் திருமணத்திற்கு முன்புவரை மீடியாவில் இருப்பேன். அதன்பிறகு புகுந்த வீட்டினர் சம்மதித்தால் தொடர்ந்து மீடியாவில் இருப்பேன். இல்லையேல் வேறுவிதமாக அப்போதைய சூழ்நிலைப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்வேன். என்வாழ்க்கையில் எல்லா விசயங்களும் நான் நினைத்து பார்த்திராத வகையில் நடந்துள்ளது. ஆனால் எல்லாமே நல்லதாகவே நடந்துள்ளது. அதனால் அது இப்போது நடப்பது போன்று திருமணத்திற்கு பிறகும் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஸ்வேதா.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #407
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆனார் தீபக் -


    சின்னத்திரை தொகுப்பாளர் தீபக், இப்போது சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். நடிகராக, தொகுப்பாளராக வெற்றிகரகமாக வலம் வந்து கொண்டிருந்தபோதே சினிமாவுக்குச் சென்றார். இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றும் தீபக்கிற்கு அடுத்த படம் வாய்ப்பு அத்தனை எளிதில் கிட்டவில்லை. இதனால் மீண்டும் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு திரும்பினார். தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.


    இதற்கிடையில் என் ஆட்டோகிராப் என்ற நிகழ்ச்சியின் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சின்னத்திரை தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர், சின்னத்திரை, பெரிய திரை நடிகர், சின்னத்திரை தயாரிப்பாளர் என பன்முகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் தீபக். விரைவில் அவர் நடிக்கும் படங்களின் அறிவிப்பும் வரவிருக்கிறது.


    "என்னை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ நாம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். வெற்றி நம்மை துரத்திக் கொண்டுவந்து சேரும். எங்கே தேங்கி நிற்கிறோமோ அங்குதான் தோல்வி வந்து நம்மை ஒட்டிக் கொள்ளும். நான் ஓடிக் கொண்டே இருக்கிறேன். கிடைக்கிற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறேன். பலன் இப்போது இல்லாவிட்டாலும் எப்போதாவது வந்து சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் தீபக்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #408
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வில்லனின் நடிப்பையும் ரசிக்கிறார்கள்! -சீரியல் வில்லன் கோபிஜி


    பல தொடர்களில் பாசிட்டிவ் வேடங்களில் நடித்து வந்த கோபிஜி, ஆதிரா, நாதஸ்வரம், வள்ளி ஆகிய தொடர்களில் அதிரடி வில்லனாகி விட்டார். அதோடு, தான் நடிக்கும் ஒவ்வொரு வேடங்களும் தனக்கு மனநிறைவு கொடுத்து வருவதாக சொல்கிறார் அவர்.


    தினமலர் இணையதளத்திற்காக கோபிஜி அளித்த பேட்டி..


    ஒரு சீரியலில் நல்லவனாக நடித்தால் அதை வரவேற்பதும், கெட்டவனாக நடித்தால் அவரை திட்டுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனபோதும், சமீபகாலமாக சீரியல் ரசிகர்களின் ரசனை மாறி வருகிறது. அதாவது, எந்த கேரக்டரில் நடித்தாலும் அவர்களின் பர்பாமென்ஸ் சிறப்பாக இருந்தால் அதை ரசிக்கிறார்கள். முக்கியமாக சீரியல் பார்க்கும்போது வில்லனை திட்டும் நேயர்கள், அவன் வித்தியாசமாக நடித்தால் அதை ரசிக்கவும் தவறுவதில்லை. அந்த பர்பாமென்ஸ் குறித்து பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.


    மேலும், தென்றல் சீரியல் வரை நான் பாசிட்டீவான வேடங்களில்தான் நடித்து வந்தேன். ஆனால் நாதஸ்வரம் சீரியலில் இருந்து வில்லனாகி விட்டேன். அந்த தொடரில் எனது நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டது. அதைப்பார்த்து ஆதிரா தொடரில் வில்லன் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடர் இன்னும் பெரிய அளவில் எனக்கு ரீச் கொடுத்தது. இப்போது வள்ளி என்ற தொடரிலும் வில்லனாக நடித் துக்கொண்டிருக்கிறேன். இப்படி அடுத்தடுத்து 3 தொடர்களில் வில்லனாக நடித்தபோதும், ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன்.


    அந்த சீரியல் எந்த மாதிரியான கதைக்களத்தில் அமைந்துள்ளதோ, அதில் வரக்கூடிய வில்லன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதை உள்வாங்கி அதற்கேற்ப நடித்து வருகிறேன். இப்படி சீரியலுக்கு சீரியல் நான் மாறுபட்ட நடிப்பை கொடுப்பதினால்தான் தொடர்ந்து எனக்கு வில்லன் வேடம் தருகிறார்கள். அதோடு, வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுக்க நானும் நிறைய மெனக்கெடுகிறேன். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடிப்பதில்லை. ஒவ்வொரு சீனையும் நன்றாக உணர்ந்து நடிக்கிறேன்.

    எனது அதிரடியான வில்லன் நடிப்பை பார்த்து விட்டு சினிமாவில் நடிக்கலாமே? என்று நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால் சின்னத்திரையில் பிசியாக இருப்பதால் சினிமாவில் நடிப்பது பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனபோதும் நல்ல வாய்ப்புகள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். டிவியில் பிரபலமான பலர் சினிமாவிலும் சாதித்து வருவதால், சரியான சந்தர்ப்பம் அமைந்தால் நானும் சாதிப்பேன் என்று கூறும் கோபிஜி, இப்போது நடித்து வரும் சீரியல்கள் எனக்கு மனநிறைவாக உள்ளது. என்னை நம்பி டைரக்டர்கள் நல்ல வேடம் தருகிறார்கள். அதை மனதில் கொண்டு ஒவ்வொரு சீரியலிலும் வித்தியாசமான நடிப்பை கொடுத்து வருகிறேன். எனது நடிப்பை நேயர்களும் ரசிக்கிறார்கள். நிறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். அதனால், நானும் கிடைக்கிற வாய்ப்புகளை நல்ல படியாக பயன்படுத்திக்கொண்டு வருவதாக நினைக்கிறேன் என்கிறார் கோபிஜி.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #409
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமா-சின்னத்திரை இரண்டையும் தொடர வேண்டும்! -நடிகர் விஜய் ஆனந்த்


    சின்னத்திரை தொகுப்பாளர் விஜய் ஆனந்த், தற்போது லட்சுமி வந்தாச்சு என்ற தொடரில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போராளி வேடத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து சினிமாவில் நிபுணன், மெர்லின், ஆச்சர்யக்குறி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.




    இதுபற்றி விஜய் ஆனந்த் கூறுகையில், தற்போது நான் நடித்து வரும் படங்களில் நிபுணன் படத்தில் டிடெக்டிவ் வேடத்தில் நடிக்கிறேன். அர்ஜூன் சாருடன் இணைந்து நடித்தது பெருமையான விசயம். படத்தில் நான் குறைவான காட்சிகளில் வந்தபோதும் அந்த கேரக்டர் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதேபோல், மெர்லின் படத்திலும் அழுத்தமான வேடத்தில் நடிக்கும் நான், ஆச்சர்யக்குறி படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இந்த படங்கள் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல இடத்தை பிடித்துத் தரும் என்று எதிர்பார்க்கிறேன்.


    மேலும், என்னைப்பொறுத்தவரை படம் முழுக்க நான்தான் வர வேண்டும் என்று நினைக்கவில்லை. நான்கு காட்சிகளில் நடித்தாலும் நச்சென்று பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய வேடங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் இதுதான் எனது நோக்கமாக உள்ளது. அதை மனதில் கொண்டுதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன். அதோடு, தொகுப்பாளர் மட்டுமின்றி சீரியல்களிலும் நடிக்கும் நான், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி வந்தாச்சு தொடரிலும் ஒரு போராளி வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு ரொம்ப பிடித்தமான கேரக்டர்.


    அந்த வகையில், சினிமா, சின்னத்திரை எதுவாக இருந்தாலும், நல்ல கேரக்டர்களாக இருந்தாலும் பாசிட்டிவ், நெகடீவ் என்று வித்தியாசம் பார்க்காமல் நடிப்பேன். சினிமாவில் பிசியாகி விட்டால் சின்னத்திரையை விட்டு விட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் என்னிடம் இல்லை. எப்போதும் இரண்டு மீடியாக்களிலும் நான் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக உள்ளது என்கிறார் விஜய் ஆனந்த்.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  11. #410
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பெண்களுக்கான சவால்களை சீரியல்களில் காட்டுகிறார்கள்! -நடிகை சிவகாமி


    ரோஜாக்கூட்டம், அத்திப்பூக்கள், முந்தானை முடிச்சு, மேகலா, பொன்னூஞ்சல், உறவுகள், வாணி ராணி என பல தொடர்களில் நடித்தவர் சிவகாமி. தற்போது கல்யாண பரிசு சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.


    தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


    >பெரும்பாலும் சீரியல்களில் பாசிட்டிவ் வேடங்களில் நடித்து வந்த நான், முதல் தடவையாக கல்யாண பரிசு சீரியலில் கல்யாணி என்ற நெகடீல் ரோலில் நடித்து வருகிறேன். பாசிட்டிவ் வேடங்களை விட நெகடீவ் வேடங்களே மக்கள் மத்தியில் எளிதில் ரீச்சாகிறது. அவர்கள் மனதில் அழுத்தமாக பதிகிறது. மேலும், வில்லியாக நடிப்பது சாதாரண மான விசயமும் அல்ல. கதையை நகர்த்தும் வேடம். அதனால் கதாபாத்திரமாக மாறி நடித்து வருகிறேன். சில சமயங்களில் எக்ஸ்ட்ராவாக டயலாக் சேர்த்துக்கொண்டாலும் டைரக்டர்கள் கட்டுப்பாடு விதிப்பதில்லை. இந்த சீரியலில் எனக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறது.


    ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ்?


    கல்யாணி கேரக்டரில் நான் வில்லியாக நடித்திருப்பதைப்பார்த்து விட்டு நேயர்கள் திட்டுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மாறாக சந்தோசப்படுகிறேன். காரணம் அதைத்தான் அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன். யதார்த்தமான எனது வில்லி நடிப்பு அவர்களது மனதில் அந்த அளவுக்கு பதிந்துள்ளது. இந்த வில்லி வேடம் என் மனதுக்கு நிறைவாக உள்ளது. இந்த சீரியலில் பிசியாக இருப்பதால் புதிய சீரியல்களில் கமிட்டாகாமல் இருக்கிறேன்.


    சினிமாவில் நடிக்கிறீர்களா?


    பெண் சிங்கம் என்ற படத்தில்தான் முதன்முதலாக நடிகையானேன். அந்த படத்தில் விவேக்குடன் காமெடி ரோலில் நடித்தேன். அதன்பிறகு சீரியலுக்கு வந்து ரோஜாக்கூட்டம், அத்திப்பூக்கள், முந்தானை முடிச்சு, மேகலா, பொன்னூஞ்சல், உறவுகள் என சீரியல்களில் பிசியாகி விட்டேன். பின்னர் ஒரு 5 வருட இடைவெளிக்குப்பிறகு இப்போது மறுபடியும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.


    சீரியல்களில் சொல்லப்படும் கருத்துக்கள் பற்றி?


    எல்லா சீரியல்களுமே குடும்பப் பிரச்சினைகளைப்பற்றியதாகத்தான் உள்ளது. பிரச்சினைகளில் சிக்கிக்கொள்பவர்கள் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை சொல்லும் வகையில்தான் உள்ளன. ஒவ்வொரு பிரச்சினைகளுக்குமே ஒரு தீர்வு இருக்கும். சில சீரியல்கள் பெண்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடியதாகவும் உள்ளன.சமீபகாலமாக தமிழ் சேனல்களில் வெளியாகும் இந்தி சீரியல்களைப்பற்றி சொல்லவேண்டுமென்றால், மேலோட்டமான காதல் கதைகளும், ஆழ்ந்த வில்லத் தனத்தையும்தான் காட்டுகிறது. நடக்காத விசயத்தை நடக்கிற மாதிரியும்தான் இருக்கும். ஆனால் தமிழ் சீரியல்களைப்பொறுத்தமட்டில் நம்மைச்சுற்றி என்னென்ன விசயங்கள் நடக்கிறதோ அதைதான் யதார்த்தமாக சொல்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் பொறுமை அப்படின்னா என்ன என்பதை தமிழ் சீரியல்களைப்பார்த்து கற்றுக் கொள்ளலாம்.


    சீரியல்களில் வரம்பு மீறப்படுகிறதே?


    எனக்கு தெரிந்து ரொமான்ஸ் என்பது லிமிட்டோடு இருப்பதாகத்தான் தெரிகிறது. அதோடு, பெண்களுக்கான சவால்களைத்தான் சீரியல்களில் அதிகமாக காட்டுகிறார்கள். அதோடு பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்கிற விழிப்புணர்வை பெண்களுக்கு கொடுக்கும் கதைகளும் நிறைய வருகின்றன. என்றாலும், முழுக்க முழுக்க அந்த மாதிரி கதைகள் வந்துள்ளதா என்று தெரியவில்லை. மேலும் தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை குறைக்கலாம்


    .><b>உங்களது ரோல் மாடல்?


    </b>>மனோரமா ஆச்சிதான் எனது ரோல் மாடல். அவங்க அளவுக்கு சாதிக்க முடியாது. ஆனால் அவர்கள் கால் தூசு அளவுக்காவது ஒரு பெயர் எடுக்கனும். அவர் செண்டிமென்ட், காமெடி, பின்னணி பாடுவது என அனைத்தும் கைதேர்ந்தவர். ஒவ்வொரு அசைவிலும் ஒரு நடிப்பு காட்டுவார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியாக நடிப்பார். மனோரமாவை மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் இனிமேல் பார்க்க முடியாது


    சீரியல் நேயர்களின் ரசணை மாறி விட்டதாக கூறப்படுகிறதே?


    செண்டிமென்ட், காமெடி, ரொமான்ஸ் என எல்லாம் கலந்த ஒரு கதம்பம்தான் சீரியல்கள். காமெடி என்பது மக்களை மகிழ்ச்சிப்படுத்தும். சீரியல்களில் வரும் காமெடியைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். அதனால் காமெடி காட்சிகளை சீரியல்களில் அதிகமாக இடம்பெறச்செய்யலாம் என்பது எனது கருத்து என்கிறார் சிவகாமி.

    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Page 41 of 46 FirstFirst ... 313940414243 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •