-
நடிகர் சங்கத்துக்கு இரண்டு கோடி கொடுத்தது யார்?
நடிகர் சங்கத் தேர்தலுக்கு முதன்மைக் காரணமாக இருந்த கட்டிட விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. எஸ்பிஐ நிறுவனத்துடன் முந்தைய பொறுப்பாளர்கள் போட்டிருந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத்தினர் கூறியதாவது, இன்று தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். கடந்த நிர்வாகத்தால் நடிகர் சங்க அறக்கட்டளை மூலம் 2010-ல் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தம் 9 பேர் கொண்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் 2 பேர் மட்டுமே கொண்டு போடப்பட்டதால் அது அறக்கட்டளை சட்டப்பட்டி தவறானது என சங்க உறுப்பினர் திரு.பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நடிகர்களான நாங்கள் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி பல முறை கோரிக்கை வைத்தோம். அது நிறைவேறாததால் தேர்தலிலும் பாண்டவர் அணி மூலம் நின்றோம். வெற்றியும் பெற்றோம்.
நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தபடி பதவிக்கு வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தனியார் நிறுவனத்துடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிலுள்ள சட்ட சிக்கல்களை விவாதித்தோம். முடிவில் அந்த ஒப்பந்தத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ.48 லட்சம் மற்றும் பத்திரப்பதிவுக்காக கொடுக்கப்பட்ட 1 கோடி 41 லட்சம் கடந்த 2 வருடங்களாக நடிகர் சங்க அலுவலுக்கு மாதாந்திர செலவுகளுக்கு கொடுக்கப்பட்ட சுமார் ரூ.60லட்சத்தையும் சேர்த்து 2 கோடியே 48 லட்ச ரூபாயை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டு சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழுவிலும் ஒப்புதல் வாங்கப்பட்டு இன்று ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வரலாற்றுப்பதிவு நிகழ்ந்தேற உதவிய நல்ல உள்ளங்களுக்கு இன்று நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இக்கால கட்டங்களுக்கான கால தாமதத்திறாக முதலீடு செய்த பணத்திற்கான வட்டியை ரத்து செய்து எதிர்காலத்தில் நடிகர் சங்கத்துடன் என்றும் ஒத்துழைப்போம் என்று கூறிய எஸ்.பி.ஐ சினிமாவிற்கு நன்றி.
இந்த ஒப்பந்தத்துக்கு பல கட்டங்களில் எதிர்ப்பைத் தெரிவித்து வந்த திருஎஸ்.வி.சேகர், திரு.மன்சூர் அலிகான், திரு.ஆனந்த்ராஜ்,திரு. குமரிமுத்து. திரு.பி.ஏ.காஜாமைதீ்ன், திரு.ஆர்.எம்.சுந்தரம் ஆகியோருக்கும் நன்றி.
பல சோதனைகளையும், மிரட்டல்களையும் சமாளித்து உறுப்பினர்களின் நலனுக்காக நிலத்தை மீட்டெடுக்க தனி்த்துப் போராடிய திரு. பூச்சி முருகனுக்கு நன்றி. ரூ. 2 கோடி கொடுத்தால்தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்ற சூழ்நிலையில், தற்போதைய சங்க அறக்கட்டளை அறங்காவலர் திரு.ஐசரி கணேஷ் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு குறுகிய காலத்தில் 2 கோடியைப் பெற்றுத் தந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த வழக்கிற்காக ஆரம்ப நிலையில் இருந்து வாதாடிய வழக்கறிஞர் திரு.தண்டபாணி, திரு.முத்து்க்குமார், திரு.சுல்தான் ஆகியோருக்கும், உடனிருந்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய உதவிய திரு. கிருஷ்ணாவுக்கும் நன்றிகள். என்று கூறினார்கள்.
அந்த நிகழ்ச்சியில், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, சங்கத் துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், கோவை சரளா, லலித குமாரி, சங்கீதா, ஜூனியர் பாலையா, சோனியா, பசுபதி, ஸ்ரீமன், டி.பி.கஜேந்திரன், உதயா, பிரேம்குமார், அயூப்கான், நியமன செயற்குழு உறுப்பினர் காஜாமைதீன், சிறப்பு விருந்தினர்கள் சத்யராஜ், பிரபு, ஐசரிகணேஸ் , ராஜேஸ்வரி, ஆர்.கே.சுரேஸ் , பவன் ,பொது மேலாளர் பால முருகன் மற்றும் ஏ.ஆர்.ஒக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
-
-
Akshay Kumar to star in Priyadarshan’s Hindi remake of Visaranai.https://pbs.twimg.com/media/Ca163CiUAAEkxlC.jpg
-
Prod City cine creations Satishkumar arranged Nadigar Sangam members to meet @SriSri in chennai
https://pbs.twimg.com/media/Ca1ntvtUAAAcLgx.jpg
-
'புலி' விழாவுக்குப் பின் மன உளைச்சல்: டி.ராஜேந்தர் புலம்பல் - TAMIL HINDU
http://tamil.thehindu.com/multimedia...a_2731056f.jpg 'போக்கிரி ராஜா' ஒரு பாடல் வெளியீட்டு விழாவில்...
'புலி' இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளானதாக 'போக்கிரி ராஜா' ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'போக்கிரி ராஜா'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.டி.செல்வக்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் 'அத்துவுட்டா' என்ற ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினரோடு டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது, "’புலி’ படத்துக்குப் பிறகு எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஏனென்றால் அந்த விழாவில் ’புலி’யைப் பற்றி தொடர்ச்சியாக பேசினேன். எனக்கு ’புலி’ என்றால் பிடிக்கும். ஈழத்தமிழர்களுடைய ஆதரவாளன் நான். இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்காக என் பதவியை ராஜினாமா செய்த பிழைக்கத் தெரியாத தமிழன். அந்த உணர்வு எனக்கு உண்டு.
டி.ஆர் பேசிய அடுக்கு மொழியை மற்றவர்கள் வேறு பார்வையில் பார்த்தால் தப்பில்லை. அது எந்த தொலைக்காட்சியில் வெளியிட்டாங்களோ, அதற்கு யாரெல்லாம் எப்படி பார்த்தார்கள் என்பது கடவுளுக்குத் தெரியும். நான் அந்த விழாவுக்கு சென்ற பிறகு மன உளைச்சலுக்கு ஆளானேன். எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். இந்த விழாவுக்கு பார்வையாளனாகவும், நண்பனாகவும் வருகிறேன் என்று சொன்னேன். இங்கு பேச்சாளராக வரவில்லை. 'வாலு' படம் பிரச்சினையின் போது வந்து நின்ற ஒரே ஒரு இதயம் பி.டி.செல்வக்குமார் தான்.
நான் இங்கு வந்து நிற்பதற்கு கடவுள் மீது நம்பிக்கை, தன்னம்பிக்கை, ஜோதிட நம்பிக்கை மூன்றும் தான் காரணம். இந்த மூணு கையை வைத்து தான் என் வாழ்க்கை. இந்த மூணு கை இருந்ததால் தான் நான் வாழ்க்கையில் ஆகவில்லை மொக்கை. இப்படி பேசுவதால் என்னிடம் கொடுத்திருக்கிறார்கள் மைக்கை.
டி.ராஜேந்தர் இதற்கு முன்னாடி இப்படி அடுக்குவான் என்று தெரியாதா. நீ நக்கல் பண்ணினால், நானும் நக்கல் பண்ணுவேன். வாழ்க்கையில் யார் தான் நக்கல் பண்ணவில்லை. நான் அத்தனை புலியை அடுக்கினேன் என்றால் எல்லாமே என் மனதில் இருந்து வந்தது. 'புலி' என்று தலைப்பு வைத்ததிற்கு ஒரு தில் வேண்டும். அந்த தில்லை வைத்து தான் என்னிடம் இருந்து சொல் வந்தது.
என்னை பொறுத்தவரைக்கும் ஹன்சிகா ஒரு குழந்தை மாதிரி. 'வாலு' படத்தை வேறு ஒருவர் தயாரித்திருந்தார். அப்படத்தை நான் வாங்கி கடன் பட்டு வெளியிட்டேன். தாறுமாறு என்ற பாடலை அந்த தயாரிப்பாளர் படப்பிடிப்பு பண்ணவில்லை. அப்பாடலை நான் ஒரு கோடி ரூபாய் செலவில் படப்பிடிப்பு பண்ணிய போது, ஹன்சிக TR UNCLE கேட்டாரா என்று சொல்லி வந்து எந்த ஒரு பலனையும் எதிர்பார்க்காமல் வந்து நடித்துக் கொடுத்ததற்கு நன்றி.
நான் அடுத்தவர்களை மாற்றுவதை விட, என்னை நான் மாற்றிக் கொண்டேன். எதுகை மோனை மட்டுமல்ல அடுக்கு மொழியிலும் பேசத் தெரியும். ஒரு காட்சியைச் சொல்லும்போது கூட நாயகியை தொடாமல் 35 வருடங்கள் வாழ்த்திருக்கிறேன். இதற்கெல்லாம் யாருமே விருது தர மாட்டார்கள். எனக்கு தேவையுமில்லை. இன்று வரைக்கும் நான் விருதுக்கு அலைந்ததே இல்லை. இந்த காலத்தில் விருதையும் காசு கொடுத்து தான் வாங்க வேண்டியதிருக்கிறது. மக்கள் கொடுத்த ரிவார்டு மட்டுமே போதும்" என்று தெரிவித்தார்.
மேலும், படக்குழுவினர் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு வாழ்த்தி பேசி எதுகை மோனை
யோடு தனது உரையை முடித்துக் கொண்டார்.
-
இவரையும் விட்டுவைக்கலையா இளையராஜா?
ஏதோ ஒரு பள்ளிக்கூட அறை. பிரம்பும், சாக்பீஸும், டஸ்டரும், நோட்டுப் புத்தகமும் இருக்கிறது.
இப்போது ஒருவர் நடந்து வருகிறார். வெளிநாட்டுக்காரர்.
உடைந்த தமிழில் பேசுகிறார்.
‘நமஸ்காரம்.. என் பேரு மத்தி..’ என்று ஆரம்பித்து தமிழிலேயே பேசுகிறார். அவர் எப்படித் தமிழ் பேசுகிறார் என்பதற்கு, பின்னால் போர்டில் குழந்தைக் கையெழுத்தில் இருக்கிற இரண்டு பாடல்களின் ஆரம்ப வரிகள் பதில் சொல்கிறது..
‘ஆகாய கங்கை’
‘மண்ணில் இந்தக’
இரண்டுமே இளையராஜாவின் பாடல்கள். கடல் கடந்தும், தமிழரல்லாத ஒருவரை தமிழ் பேச வைத்தது இசையன்றி வேறு எதுவாக இருக்கும்?
‘இளையராஜா பிடிக்கிறது’ என்ற அவரது கூற்றே அதை உறுதிப்படுத்துகிறது. .தொடர்ந்து, 'ஆகாய கங்கை' பாடலை ஒருவரி விடாமல் பாடுகிறார். முடிந்ததும் போர்டில் இருக்கிற ‘ஆகாய கங்கை’க்கு அருகில் OK போட்டுவிட்டு, ஒரும் மிடறு காஃபி குடித்துவிட்டு மண்ணில் இந்தக் காதலின்றி பாடுகிறார்.
இரண்டு பாடல் பாடி முடித்ததும், ஒரு தம்ஸ் அப் காட்டிவிட்டுப் போகிறார். அவரே போய் கேமராவை ஆஃப் செய்கிறார்.
இசை ஏதும் இல்லை. நம் ஜட்ஜ்கள் சொல்கிற சுருதி, லயம், தாளம், சங்கதி போன்ற சமாச்சாரங்கள் இல்லை. இருப்பதெல்லாம் அவருக்கு இசை மீதிருக்கிற காதல் மட்டுமே. ’என் தமிழ் நண்பனுக்கு இளையராஜா பிடிக்கும். அவர் மூலமாக நானும் ராஜா இசை கேட்க ஆரம்பித்தேன். இப்போது எனக்கும் இளையராஜா பிடிக்கும்’ என்றிருக்கிறார்.
கடல் கடந்து மொழிதெரியாத ஃபின்லாந்துக்காரரை இளையராஜா கவர்ந்திழுக்க என்ன காரணம்?
ஒன்றே ஒன்றுதான். ஒரே ஒரு ஊர்ல.. அல்லல்ல.. உலகத்துக்கே அவர்தான் ராஜா என்பதே அது!
http://www.youtube.com/embed/mGBEJn-7KCU
-
Anjaathe 2 In Preparation !!!:goodidea:
http://image.noelshack.com/fichiers/...5459966-aa.jpgThe movie « Anjathe » had offered the first commercial success to the director Mysskin and the latter would be about to direct the sequel of this movie. The official announcement is very expected soon. This project will be produced by Nemichand and Hitesh Jhabak who had produced the first part.The director produced the film « Savara kaththi » his assistant G.R. Aathityaa in which he plays the role of the antagonist. The director Raam takes the lead role with Poorna.
-
-
வித்தியாச படங்களைத் தயாரித்தவரின் புது அவதாரம்
அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், முண்டாசுபட்டி உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தன்னுடைய திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் பல புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர்.
தற்பொழுது சி.வி.குமார் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். அவர் இயக்கவிருக்கும் படத்திற்கு மாயவன் என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கு நடிகர் சந்திப் கிஷன் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜெ பி, மைம் கோபி, பாபு ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைக்கவிருக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். மேலும் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.