காலந்தானே அருமருந்து
காயங்கள் அதில் ஆறுது
கவலைகள் பல மறக்குது
கண்ணீர் சுவடும் மறையுது
Printable View
காலந்தானே அருமருந்து
காயங்கள் அதில் ஆறுது
கவலைகள் பல மறக்குது
கண்ணீர் சுவடும் மறையுது
மறையுது சூரியன் மறைத்தது கண்ணன்
மன்னவன் சயத்ரதன் சிரங்கொய்து நீக்க:
மாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி
மறை பட்டர் மேல் மன்னன் சினம் போக்க :
அறிவது ஒன்று அது ஆண்டவன் அருள்
அவனியில் தேவை போல அழிக்க காக்க
காக்க வைத்து சோதிப்பது காதலி மட்டுமா
காலம் வராமல் விதை வெடித்து முளைக்குமா
கருதான் வளர ஐயிரண்டு திங்கள் குறையுமா
கச்சிதமான கணக்குடைத்து இயற்கையம்மா
இயற்கையம்மா புரண்டால்
இடுப்புவலியில் துடித்தால்
இமயமலையதில் பிளந்தால்
இடரிது ஜனனமா மரணமா
மரணமா இப்படியுமென மனம் கடந்து துடிக்குது
மரித்து போனது பல எண்ணங்கள் மண்ணுக்கடியில்
தோண்டி எடுப்பதில் தோள்கள்பல ஒன்றாய் சேருது
வேண்டி வணங்குது கைகள்பல சீற்றம் வேண்டாமென
செவிசாய்க்குமா இனியாவது இயற்கை என்றில்லாமல்
புவிசார் அறிவியலை மேம்படுத்தி வருமுன் காப்போம்
காப்போம் மௌனம்
அறியாமை மறைக்க
இறுக்கம் குறைக்க
கலகம் தவிர்க்க
மனசாட்சி உறைக்க
உணர்வோம் நிதானம்
நிதானம் தடுமாற வைக்கும் குடிபோதையால்
நித்தமும் குறையத் தொடங்கும் ஆரோக்கியம்
விட்டில்பூச்சியாய் அழித்துக் கொள்ளும் மனோபாவம்
வீடுவாசல் சுற்றம் நட்புவட்டம் விட்டுவிலகும்
மது விற்கும்தொழிலே அரசின் வருவாய்க்கு அடிநாதம்
மண்வளம் மிகுந்தும் மனிதவளம் சுருங்கும் வினோதம்
வினோதம் ஆச்சர்யம் அதிசயம்
அபூர்வமல்ல அந்த அனுபவம்
வறுமையில் வாடுபவன் தான்
வழங்குவான் பங்கு பசியில்
வாடும் இன்னொரு உயிர்க்கு
நலிந்தவன் கை கொடுப்பான்
நடக்க முயலும் நொண்டிக்கு
வங்கியிருப்பு வசிக்க வீடு
வருமானம் தரும் அலுவலகம்
பட்டம் பதவி அந்தஸ்து ஏதும்
இல்லாதவன் கட்டாந்தரையில்
படுத்ததும் உறங்கிவிடுவான்
படுத்ததும் உறங்கிடுவான்
புண்ணியவான் ! உடனே எழும்
பாழாய் போன குறட்டை சத்தம்
பாழும் மனைவிக்கோ சிவராத்திரி
பாவமும் புண்ணியமும்
பக்கத்து பக்கத்தில் ! இதில்
பாவம் யாருக்கு?
புண்ணியம் எவருக்கு ?
https://encrypted-tbn0.gstatic.com/i...Zr6TTeB4e35AeQ
எவருக்குத் தெரியும்
அடுத்த அத்தியாயம்
தெரிந்தாலேது சுவாரசியம்
இது தலைவிதிசார் விசயம்
இலவங்காய் பழுக்காது
கிளிக்கு அது புரியாது
ஆறறிவு மனிதனுக்கு
புரியும் இயற்கை கணக்கு