இங்கு யாருமே வருவதில்லையா? போவதற்கு எனக்கு சமூக வலைத்தளங்கள் பல இருந்தாலும், இருபதாண்டுகளாக இந்த TFMPAGE வந்து சென்ற என் கால்கள், பழக்கத்தின் காரணமாய் வராமல் இருக்க மறுக்கின்றன, அதனாலேயே நாளொன்றுக்கு இரு முறை வந்து தினம் தினம் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டி இருக்கிறது.

ஒரு ஆயுள் தண்டனைக்கு மேலான காலத்தை இந்த பகுதில் நான் செலவு செய்திருக்கிறேன். அது தண்டனையாக அல்ல, மகிழ்ச்சியாக! யாரும் இந்த பக்கம் வராத காரணத்தால் இந்த பகுதிகள் எல்லாம் இழுத்து மூடப்பட்டன என்று என்றேனும் என் பார்வையில் பட்டால் நான் மிகவும் வருந்த கூடும். எவரும் இங்கு வருவதற்கான எந்த தடயமும் இங்கு இல்லை.

ராஜா சார் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களை, மேன்மை தாங்கிய மக்கள் இங்கு எழுதியதை எல்லாம் மறக்க முடியவில்லை. இந்த இடத்தில் தெரிந்து கொண்ட விஷயங்களும் பாடல்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இங்கு எழுதிய, வந்து போன மக்களுக்கு என் நன்றி. இப்போது விடை பெறுகிறேன். நான் புண்ணியம் செய்தவனாய் இருப்பின் எங்கேனும் நீங்கள் எழுதிதை படிக்க நேரிடும். உங்களை பார்க்க நேரிடும். அது வரை....................................
இப்போதைக்கு பை!

வாழ்க ராஜா சார்! வளர்க அவர் புகழ் !