Results 2,671 to 2,680 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    இந்த பதிவும் உங்களுக்குத்தான்.

    ஒரு 20 நாட்களுக்கு முன்பு ஒருவரின் அலுவலகத்திற்கு நானும் ராகவேந்தர் சாரும் சென்றிருந்தோம். அங்கே எதிர்பாராவிதமாய் மற்றொருவர் வந்தார். நாங்கள் காண சென்றது திரை பிரபலம். வந்தவரோ சின்னத் திரை பிரபலம். Topic நடிகர் திலகம்தான். சிறிது நேரத்திற்கு பிறகு நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட சில காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு காட்சி வந்தது. உடனே அதை freeze செய்துவிட்டு இந்தக் காட்சியில் என்ன விஷேஷம் தெரியுமா என்று திரை பிரபலம் கேட்க சின்னத்திரை நபர் கவனிக்கவில்லையே, மீண்டும் போடுங்கள் என்று சொல்ல மீண்டும் அந்தக் காட்சி. சின்னத்திரை நடிகர் சற்று யோசிக்கிறார்.

    காட்சி இதுதான். வயதான பாதிரியார் ஈஸி சேரில் சாய்ந்திருக்க "முரட்டு பயலே இது யாருனு தெரியுதா" என்று அவரின் கேள்விக்கு வாய் திறந்து பதில் சொல்லாமல் வலது கண்ணை கருப்பு திரை மறைத்திருக்க வந்திருப்பவர் யார் என ஆண்டனி பார்க்கிறான். சட்டென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் தலையை சற்றே இடது புறம் சாய்த்து மீண்டும் பார்க்கிறான். இதுதான் காட்சி. இதில் என்ன ஸ்பெஷல் என்பதுதான் கேள்வி. பதிலையும் சினிமா பிரபலமே சொன்னார்.

    நம்மைப் போன்றவர்கள் அதாவது இரன்டு கண்களாலும் பார்க்க முடிபவர்களுக்கு பார்க்கும் மனிதனையோ அல்லது பொருளையோ நேராக பார்ப்போம். அதாவது இரண்டு கண்களும் ஒரு மையப் புள்ளியில் நிலை கொண்டு பிம்பத்தை நமது மூளைக்கு உணர்த்தும். அதே நேரத்தில் கண் பார்வை குறையுடையவர்களும் ஒரு கண் பார்வை இழந்தவர்களும் நம்மைப் போன்று பார்க்க இயலாது. எதிரே நிற்கும் பிம்பம் போன்ற எதையுமே அவர்கள் ஒரு கண்ணால் focus செய்வார்கள். அதில் சற்றே சிரமப்படும்போது பிம்பத்தை சரியாக உள்வாங்க அந்த focus சரியாக கிடைக்க எந்த கண் தெரிகிறதோ அந்தப் பக்கம் சற்றே தலையை சாய்த்து அதை சரி செய்வார்கள். வந்திருக்கும் பால்ய நண்பனை சரியாக அடையாளம் கண்டுகொள்ள ஆண்டனி அதைத்தான் செய்கிறான் என்று அவர் விளக்கியபோது மெய் சிலிர்த்து விட்டது.

    வெறும் முப்பது வினாடிகளுக்கும் குறைவாக வந்து போகும் அந்த ஒரு ஷாட்டிற்காக நடிகர் திலகம் வெளிப்படுத்திய அந்த நுணுக்கம், எந்தளவிற்கு தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு நீதி புலர்த்தினான் அந்த மகாகலைஞன் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

    ஆண்டனி பற்றியோ அல்லது அருண் பற்றியோ விஷயம் பேசப்படும்போது அதை உங்களை தவிர வேறு யாருக்கு dedicate செய்ய முடியும்!

    அன்புடன்

  2. Thanks Harrietlgy, adiram thanked for this post
    Likes Harrietlgy, adiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •