-
12th June 2017, 09:55 PM
#1
Junior Member
Devoted Hubber
தூறல் நின்னு போச்சு: படமும் பாடல்களும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நான் பாக்கியராஜ் ரசிகன் என்று சொல்வதில் எனக்கு பெருமை. இந்த பாட்டு எனக்கு சரியா வரும்/வராது என்று தைரியமாய் தர்க்கம் செய்து தனக்கு வேண்டுவதை ராஜா சாரிடம் கேட்டு வாங்கி கொள்ளும் வித்தை தெரிந்தவர் அவர்.
சரி, பாடலுக்கு வருவோம்.
தங்கச்சங்கிலி பாடல் ஒரு கம்பீரமான கீரவாணி டூயட். அசோக் குமார், ராஜா சார் , வைரமுத்து மூவரும் இனைந்து பாக்கியராஜ், சுலக்ஷனாவுக்கு இந்த பாடல் மூலம் சொர்கத்தை காட்டி இருக்கிறார்கள், நமக்கும் தான்.
வார்த்தை பிரயோகமும் , வாத்திய அணிவகுப்பும் நொடிக்கு நொடி அசர வைக்கும். பல்லவி சரணமெல்லாம் தெய்வீகம், அது பற்றி நான் பிதற்றுவதை விட. இந்த பாடலின் மூண்டு முக்கிய 30 நொடிகள் பற்றி பேசியே தீரணும்..
பயந்த சுபாவம் உள்ள அந்த பெண், மாப்பிள்ளையின் பொய்யான மிரட்டலுக்காக பயந்து, தயங்கி தயங்கி வருகிறாள். சின்ன வயசு வேறு..சில பல உரசலுக்கு பிறகு அட்ரீனலின் ரஷ் (adrenaline rush) விறு விறுவென எட்டி பார்க்கிறது..பாடலும் தொடங்குறது..
ஆரம்பமே ஜானகியின் குரல் ஏதோ பனிப்பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் பூத்த ரோஜா போல் பிரெஷாக ஜொலிக்கிறது இல்லியா? அதை தொடர்ந்து வரும் அந்த மியூசிக்ல் ஸ்பிளாஷ் 30 நொடிகள் உயிரை கொள்ளை கொள்ளும் ... பிறகு முதல் மற்றும் இரண்டாம் இடை இசையும் அப்படியே.. முப்பது முப்பது நொடிகள் இரண்டும். அட்ரீனலின் ரஷ் பீச்சி அடிப்பதை இசையால் சொல்லி இருப்பார் ராஜா சார்.. இரண்டாவது இடை இசையில் வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போடும். நமக்கு நரம்புகள் புடைக்கும்.
ராஜா சார் 1982ல், தன்னுடைய 39ம் வயதில் இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். தஞ்சாவூர் அருள் திரையரங்கில், 7ம் வகுப்பு மாணவனான நான் அன்றைய தேதியில் பார்த்த படம். என் மலைப்பு இன்னமும் அடங்கவே இல்லை. நன்றி MAPPI.
-
12th June 2017 09:55 PM
# ADS
Circuit advertisement
Bookmarks