-
4th January 2016, 06:55 AM
#2
Junior Member
Seasoned Hubber
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் நாள் அன்னை சாரதாதேவியாரின் ஜெயந்தி விழா.
அது தொடர்பாக நடைபெற்ற விழாவில் நிகழ்த்தப் பெற்ற ஒரு சொற்பொழிவு. பக்தர்களிடம் அன்னை சாரதா தேவியார் அவர்கள் உரையாடும் போது அடிக்கடி உபயோகப்படுத்தும் வாக்கியத்தை விளக்கினார் சொற்பொழிவாளர். அளவு கடந்த சோதனைகளுக்கு ஆட்படும் போது கலங்காதே. உனக்கொரு தாய் இருக்கின்றாள். என்றும் உன்னைக் காக்கின்றாள் என்ற எண்ணத்தை மனதில் பதியவைத்துக் கொள் என்று . அன்னையின் அருள்வாக்கை அப்படியே பயன்படுத்தி உள்ளார் மக்கள் திலகம். இதனைப் பார்க்கும் போது ஆன்மிகத்தில் அவரது நாட்டம் மட்டுமல்ல. எல்லா துறைகளிலும் அவரது அறிவாற்றலையும், அலங்காரத்திற்காக அல்லாமல் பலதரப்பட்ட நூல்களையும் படித்து உணர்ந்த மேதை அவர் என்பதையும் உணர முடிகிறது. அந்த வரிகளை தேர்வு செய்து கொடுத்ததும் மக்கள் திலகமாகத் தான் இருக்க இயலும் என்ற எண்ணம் எழுகின்றது. கீழே உள்ள படத்தை பாருங்கள் அவரது புத்தக அலமாரியில் அதிகஅளவிலான ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் நூல்கள் நிரம்பியிருப்பதை காணலாம்.
அந்தப் பாடல்
Last edited by jaisankar68; 4th January 2016 at 06:58 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks