அள்ள அள்ள வற்றாத அமுதசுரபியாம் நம் ஆண்டவனுக்கு அடுத்த பாக திரி ஏற்றி வழிபாடு. திரியை சுடர் விட்டு பிரகாசமாய்த் துவங்கி வைத்த தம்பி செந்திவேல் அவர்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். திரிக்குத் தூண்டுகோலாய் அத்தனை பேரும் துணை நின்று தங்களுக்குத் தோள் கொடுப்போம்.

ஞான ஒளியாய் எங்கும் நிறைந்த பரம்பொருளாய் நீக்கமற நிறைந்திருக்கும் நடிப்பின் தெய்வத்திற்கு அடுத்த கட்ட புகழ்மாலை.

வழக்கம் போல திரிகளில் மணிமகுடம் சூட்டி முதலிடம் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் திரியை இன்னும் வளப்படுத்துவோம். செம்மைப் படுத்துவோம். அருமைத் தலைவனின் புகழ் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைப்போம்.

திரி செழிக்க மீண்டும் என் வளமான வாழ்த்துக்கள்.