Page 160 of 400 FirstFirst ... 60110150158159160161162170210260 ... LastLast
Results 1,591 to 1,600 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1591
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 153
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்


    இந்த தந்தை பாடுவதை கேளுங்கள் - கடவுளை இவர் பார்க்கிறாராம் - அவருடைய குழந்தையின் வடிவில் - கடவுளின் கருணை எப்படி தெரிகிறதாம் -கொஞ்சும் அந்த குழந்தையின் மழலை மூலமாக - இந்த பாடல் ஒரு கல்லையும் கனியாக்குமே !!


  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1592
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Well said Ravi.
    No more explanation would suit this.
    Best presentation of the esteem of a Father.
    மிக்க நன்றி சார் - பதிவை போட்டவுடன் படிக்க உங்களுக்கு நேரம் கிடைத்ததை எண்ணி பெருமை அடைகிறேன்

  5. #1593
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //ஆனால் ஒன்று மட்டும் உண்மை! ஒரு நல்ல மனைவியால் தாயைக்கூட ஈடு செய்யமுடியும் ஆனால் ஒரு நல்ல தந்தையை ஈடுசெய்ய இறைவன் கூட இன்னொரு உறவை படைக்கவில்லை காரணம் அவர் ஒரு நிகரற்ற அதிசயம் !! //

    ரவி சார்!

    அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். இதைவிட தந்தை பெருமை பேசும் வரிகள் இருக்கவே முடியாது. இனிமேல் உங்களுக்கு எழுத வராது என்ற கதைகள் வேண்டாம். இவ்வளவு விஷயங்களை எப்படி உங்களால் அற்புதமாக எழுத முடிகிறது? வாழ்த்துக்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes kalnayak liked this post
  7. #1594
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    பூவின் பாடல் 26: "பூப்பூவா பறந்து போகும் பட்டுப் பூச்சி அக்கா"
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    தினத்தந்தியில் முதல் பக்கம் வாசித்து விட்டு புரட்டினேன். சிந்துபாத் கடலில் நீந்திக் கொண்டிருந்தான். திடிரென அருகில் வந்த மிகப் பெரிய திமிங்கிலம் விழுங்கிய நீரில் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டான் சிந்துபாத். அவன் மட்டுமா நானும்தான். உள்ளே ஒரு ஊரையே கண்டான் சிந்துபாத். இதுபோல அவன் எத்தனை திமிங்கலங்களை பார்த்திருக்கிறான். நான்தான் வியந்து போனேன். அவனின் இடையில் லைலா தாங்கும் மரப் பெட்டி தொங்கிக் கொண்டிருந்தது.

    நானும் சிறுவயதில் இருந்து இந்த சிந்துபாத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்படியேதான் இருக்கிறான். என்றும் பதினாறு மார்கண்டேயனுக்கு, என்றும் பதினெட்டு கலைவேந்தனுக்கு (நான் விடணும்னு நெனைச்சாலும் முடியலை, என்ன பண்றது நாட்டில ரொம்ப பேரு இப்படிதான் இருக்கறாங்கன்னு இப்பவாவது கல்நாயக்குக்கு புரியட்டும்.) சிந்துபாத்தும் இந்த ரகத்தில் சேர்த்தி.
    சிந்துபாத்திடம் பேச்சு கொடுத்தேன். நீங்களும் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து கன்னித்தீவு தேடிக்கிட்டுதான் இருக்கீங்க. மந்திரவாதி மூசாவும் உன்னையும் லைலாவையும் நிம்மதியா இருக்க விடமாட்டேங்கிறான். (சிந்துபாத், மூசாவிற்கு வருகிறார், போகிறார் என்று எழுதி, பேசி அவர்கள் வயதை கூட்டக் கூடாதாம்). நீயும் சரின்னுட்டு சின்ன லைலாவோடு வாழலாமுன்னு நெனைக்க மாட்டேங்கறே. உனக்கும் எதுவாவது வழி கிடச்சதான்னு பார்த்தா அதுவும் கெடைக்க மாட்டேங்குது. இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே இருக்கப் போறீங்க, ஒரு வேலை வெட்டி கிடையாது. எதைச் சாப்பிட்டுதான் இம்புட்டு நாளா உயிர் வாழறீங்கன்னும் தெரியலை.

    தமிழ்நாடு முழுக்க உங்களை தெரியாதவங்க ரொம்ப கம்மி. கடல்ல கன்னித்தீவ தேடுற. இப்பிடி திமிங்கலத்துக்குள்ள வர்ற. புது தீவுக்கு போற . காட்டு மிருகங்களோட சண்டை போடற. பூதங்களை பார்க்கற. வாய், மூக்கு, காது வழியா சுலபமா அவங்க உடலுக்குள்ளார இப்ப திமிங்கலத்துக்கு உள்ளார இருக்கற மாதிரியே போயிட்டு வந்திடற. உனக்கெல்லாம் தோல்வியே கிடையாதா. என்றேன். "ஏம்பா இப்படி பொறாமைப் படறே" என்றான். 'எனக்குத் தேவைதான்' என்று மனதினுள் நினைத்துக்கொண்டு தொடர்ந்தேன். இல்லை. 'உங்க (சிந்துபாத் & லைலா) வாழ்கையில எதவாது உற்சாகம் இருந்திருக்கா?'ன்னு கேக்குறேன். என்றேன். என்னப்பா நீ படிச்சதில்லையா என்றான் சிந்து. இல்லை தமிழ்நாடு முழுக்க பிரபலமானவங்களா நீங்க ரெண்டு பேர் இருந்தாலும் தமிழ்நாட்டில பிரபலமான திரைப் படங்களை பார்த்திருக்கீங்களா என்று கொக்கியைப் போட்டேன். இல்லையே என்று பரிதாபமாக சொன்னான் சிந்து.

    ஆனால் உங்க கதையில வர்ற பேர பாத்திரங்களுக்கு வச்சு திரைப் படங்கள் வந்துருச்சு. ஏன் சமீபத்தில் 'யுத்தம் செய் 'படத்தில் 'கன்னித்தீவு பொண்ணா?' என்று கேள்வி கேட்டு ஒரு பாடல் வந்து பிரபலமாகி விட்டது. இது ஏன் 'கன்னித்தீவு'ன்னு பேர வச்சு ஒரு படம் 1980-லையே வந்திருக்குன்னு கூகுளே சொல்லுது. நீ இப்படி அப்பாவியா இருக்கறியே என்றேன். படா ஷோக்கா மாட்டிகினான் சிந்துபாத்.

    "சரி. அதுக்கு இப்ப என்ன?" என்றான் சிந்து. இல்லை பூவின் பாடல்கள்-னு ஒரு தொடர் எழுதறேன். அதுதான் உன்னோட பேட்டிய வச்சு ஒரு பாட்டைப் பத்தி எழுதலாமின்னு. அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்றான் சிந்து. 'ஆமாம் சினிமா படத்தோட தலைப்புக்கும் அதோட கதைங்களுக்கும் தொடர்பு இருக்கற மாதிரியில்ல நீ கேட்கற என்றேன். சரி என்ன பாட்டைப் பத்தி எழுதப் போற என்றான்.

    நீதான் நெறைய திக்குத்தெரியாத காட்டில எல்லாம் அலைஞ்சி இருக்கறியே. அதுமாதிரி ஒரு காட்டில் ஒரு குழந்தை பூச்சிங்க, பறவைங்க, மிருகங்களைப் பார்த்து பாடற ஒரு பாட்டு என்றேன். என்ன பாட்டு என்றான். தலைப்பில படி என்றேன்.

    யாரு எழுதின பாட்டு?

    நம்ம வாலிபக் கவிஞர் வாலி எழுதி, மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி. இசை அமைத்து எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய அற்புதமான பாடல்.

    எதைப் பத்தி எழுதி இருக்கிறார் வாலி?

    என்ன குழந்தைக்கு இந்த மிருகங்கள் கிட்ட இருக்கிற சந்தேகங்களை கேக்கிற மாதிரியான பாட்டுதான். கேட்டு பாரு உனக்கே புரியும் என்றேன்.

    Last edited by kalnayak; 4th July 2015 at 11:47 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  8. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, rajeshkrv, vasudevan31355 liked this post
  9. #1595
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    14

    'வருவாயா வேல்முருகா '

    'ஏன்' படத்தின் இன்னொரு அருமையான பாலாவின் பாடல். மிக மிக அருமையான பாடல். அந்தப் பாடல்தான் பாலாவின் தொடரில் அடுத்து வருவது.

    அண்ணன் சிரமப்பட்டுப் படித்து பி.ஏ.பட்டம் வாங்கி வருகிறான். அவன் பட்டம் வாங்க அல்லும் பகலும் இறைவனிடம் வேண்டிய அன்புத் தங்கையிடம் இந்த சந்தோஷ விஷயத்தைச் சொல்லுகிறான். தங்கை மகிழ்ச்சி அலைகளில் துள்ளிக் குதிக்கிறாள். அண்ணன் தனக்கு அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து விட்டதாகவும், இனி அந்த சின்ன வீட்டில் குடித்தனம் நடத்த வேண்டாம்...பெரிய வீடாகப் பார்க்கலாம் என்று கூறுகிறான்.

    தங்கை அந்த வீட்டின் வாசலில் தன் அண்ணன் வக்கீல் என்பதை பெருமையுடன் உணர்த்த 'ராமு பி.ஏ' என்று போர்டு வைத்து அழகு பார்க்கிறாள். அவள் மனமெல்லாம் மகிழ்ச்சி.

    அழகாகப் பாடவும் ஆரம்பிக்கிறாள்.

    லா லா
    லா ல ல ல ல லா

    என்று மிக இனிமையாக ஹம்மிங்குடன் பாடல் தொடங்குகிறாள். அவளுடன் சேர்ந்து அவள் அண்ணனும் பாடி மகிழ்கிறான்.

    'மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    மங்கை என் கோயிலிலே'

    என்று அந்த மங்கை மயங்கிப் பாட, அண்ணன் அந்த வரிகளில்

    'மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    தங்கையின் கோயிலிலே'

    என்று 'மங்கை' யின் இடத்தில் 'தங்கை' யை வைத்து மகிழ்கிறான்.

    அண்ணனுக்குத் தங்கையும், தங்கைக்கு அண்ணனும் துணை தேடி மகிழும் வரிகள்.

    'திருமணத் திருநாளுக்கு வரும் விருந்தினர்கள் இந்தப் பாவையின் உறவினர்கள்' என்ற வளமான, யாரும் நினைத்துப் பார்க்க முடியாத, எதிர்பாராத திடீர் தித்திப்பு வரிகள். பொருத்தமென்றால் பாடலுக்கு அப்படிப் பொருந்தும் பொருத்தம்.

    'திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
    அவர் பாவையின் உறவினர்கள்'

    கண்ணதாசன் ஒருவனாலேயே முடிந்த ஒன்று.




    வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    மங்கை என் கோயிலிலே

    வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள்
    தீபம் ஏற்றும் தங்கையின் கோயிலிலே

    அண்ணனுக்குப் பெண் பார்க்க
    வரும் என் அண்ணியை என் கண் பார்க்க

    ஹாஹா ஹா ஹா ஹா....(அற்புதம்... அற்புதம்)

    அண்ணனுக்குப் பெண் பார்க்க
    வரும் என் அண்ணியை என் கண் பார்க்க

    என் தங்கையின் துணையை நான் பார்க்க
    அந்த இன்பத்தை நீ பார்க்க

    நீ வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    தங்கையின் கோயிலிலே

    மார்கழியில் மாயவனும்
    தை மாசியிலே நாயகனும்

    ஹாஹா ஹா ஹா ஹா....

    மார்கழியில் மாயவனும்
    தை மாசியிலே நாயகனும்

    திருநாளுக்கு வருகின்ற விருந்தினர்கள்
    அவர் பாவையின் உறவினர்கள்

    நீயும் வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    மங்கை என் கோயிலிலே

    முன்னவனோ ஆலமரம்
    தம்பி முளைத்து வரும் சின்ன மரம்

    எங்கள் தோட்டத்தில் இன்று மூன்று மரம்
    எங்கள் வாழ்வே அன்பு மாயம்

    நீ வருவாயா வேல்முருகா
    என் மாளிகை வாசலிலே
    மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
    மங்கை என் கோயிலிலே


    பாடல் முடிந்து பார்த்தால் அந்தப் பேதை தங்கை அண்ணனை நினைத்து கனவு காணுகிறாள்.

    அண்ணனாக ஏ.வி.எம்.ராஜனும், தங்கையாக லஷ்மியும் வழக்கம் போல. இவர்களை யார் பார்த்தார்கள்?

    பாடலின் உண்மையான நாயகர்கள் பாலா, மற்றும் டி.ஆர்.பாப்பா மற்றும் சரளா.

    கோடி முறை கேட்டாலும் திகட்டாத தேவ கானமோ இந்தப் பாடல்!

    அடடா! 'இப்படியெல்லாம் பாடல்கள் இருக்குமா'?! என்று எண்ணி எண்ணி வியக்க வைக்கும் பாடல். அணு அணுவாகக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று உணர்வீர்கள்.

    இந்தப் பாடலை அபூர்வமான பின்னணிப் பாடகி எஸ்.சரளா தொடங்கும் போதே டோட்டலாக நாம் ஆ(ல்)ள் அவுட் ஆகி விடுவோம்.

    லா லா லா
    லா ல ல ல ல லா

    என்று இந்த வசியக் குரல் பெண்மணி பின் தொடர்ந்து 'லலல லலல லலல லலலலலா லலாலா' என்று இந்த ஹம்மிங்கை முடிக்கும் போது பாடலுக்குபோகவே மனசு வராது. அந்த ஹம்மிங்லேயே ஒன்றிப் போய் ரீவைண்ட் பண்ண ஆரம்பித்து விடுவோம் நம்மை அறியாமலேயே.


    சரளா பற்றி ஒரு சிறுகுறிப்பு (இலவச இணைப்பு)

    சரளா ஒரு அருமையான குரல்வளம் கொண்ட பாடகி. நிறைய இஸ்லாமிய பக்திப் பாடல்கள் பாடியவர்.

    முக்தாவின் 'தேன் மழை' காமெடிப் படத்தில் அறிமுகம். 'என்னடி! செல்லக் கண்ணு...எண்ணம் எங்கே போகுது?' மிக அருமையான பாடல் இது. சச்சு விஜயாவிடம் பாடுவது போல் வரும்.

    'பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா?' தாராபுரம் சுந்தரராஜனுடன் இணைந்து 'பொம்மலாட்டம்' படத்தில். இதுவும் முக்தாவின் படம்தான்.

    அப்புறம் 'நினைவில் நின்றவள்' அதே முக்தாவின் படத்தில் 'நந்தன் வந்தான் கோவிலிலே' என்ற அருமையான பாடல். சச்சுவிற்குப் பாடுவார்.

    மூன்றுமே முக்தாவின் முத்தான காமெடிப் படங்கள்.

    முக்தாவின் படங்களில் சச்சுவுக்கு நிறையப் பாடல்கள் பாடியது சரளாதான்.

    அவ்வளவு ஏன்? நம் 'இசைஞானி' இளையராஜாவின் இசையில் கூட 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் அவருடனேயே இணைந்து,

    'ஒனக்கெனத்தானே இந்நேரமா
    நானும் காத்திருந்தேன்
    ரகசியம் பேச மனசிருக்கு
    ராத்திரி நேரம் நெலவிருக்கு'

    என்ற அழகான பாடலைப் பாடியிருப்பார். (கிட்டத்தட்ட ஜென்ஸியின் குரல் போல)

    இஸ்லாமியப் பாடல்களில் கொடி நாட்டியவர்.

    http://www.inbaminge.com/t/allah/Nag...uslim%20Songs/

    'எல்லாமே நீதான்
    வல்லோனே அல்லா'

    பாடலை எவரால் மறக்க முடியும்?

    'சிந்தனையில் மேடை கட்டி
    கந்தனையே ஆட வைத்தேன்
    செந்தமிழில் சொல் எடுத்து
    எந்தனையே பாட வைத்தான்'

    என்று 'திருமலை தென்குமரி' திரைப்படத்தில் 'சீர்காழி'யுடன் சரளா இணைந்து பாடிய பாடல் மிகவும் பிரசித்தம். (இந்தப் பாடல் 'திருவருட்செல்வர்' படத்தில் இடம் பெற்றதாக பல இணைய தளங்கள் கூறும் கொடுமையை எங்கே போய் முட்டிக் கொண்டு அழ?!)

    சரளா இப்போது கோயமுத்தூர் ஆசிரமம் ஒன்றில் தன் மகளுடன் வசித்து வருகிறார். ஆசிரமத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறாராம். பிள்ளைகளுக்கு இசைப் பயிற்சியும் அளிக்கிறாராம்.

    சரளா பற்றிய அபூர்வ வீடியோவை இணையத்தில் தேடித் பிடித்தேன். அதில் சரளா வயதானவராக சிறிது நேரம் பேட்டி தருகிறார். ஆனால் அவர் தான் பாடிய பாடல்களைப் பாடிக் காட்டும் போது குரல் வளம் அப்படியே உள்ளது. மிகவும் எளிமையாக காணப் படுகிறார். பாவமாயும் பரிதாபமாயும் இருக்கிறது. சரளா பற்றிய அற்புத பொக்கிஷம் இந்த வீடியோ. அவசியம் பாருங்கள்.

    பாலா தொடரில் அவருடன் பாடிய இந்தப் பாடகியைப் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன்.




    இப்போது தொடருக்கு மீண்டும் வந்து விடுவோம்.

    உடன் வருவார் தொடரின் நாயகர். குரல் ஜாலங்களின் மன்னர். மிக அழகான வெண்ணெய்க் குரலுடன். அப்படியே குரல் மெழுகாய் உருகும். மிக இளமையான, இதமான வெண்கலக் குரல். அண்ணன் தங்கை பாச உணர்வுகளை வெகு அழகாகப் பிரதிபலிப்பார். பாலசுப்ரமணியம் பாடிய வேல்முருகன் பாட்டு.

    வழக்கம் போல அம்சம். இனிமையைக் குழைத்துத் தந்து தன் முத்திரையை நிலைநாட்டும் அந்த அமர்க்களமான இடம் ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய ஒன்று

    'அண்ணனுக்குப் பெண் பார்க்க-வரும்
    என் அண்ணியை என் கண் பார்க்க'

    என்று சரளா முடித்தவுடன் ஒரு ஹம்மிங் எடுப்பாரே இந்த பாலாடைப் பாடகர் பாலா! என்னத்தை சொல்ல!

    'ஹாஹா ஹா ஹா ஹா....என்று தொடர்ந்து 'ம்ஹூம் ம்....ம்' என்று ஒரு பிரளயமே நிகழ்த்துவாரே! உடம்பு அப்படியே சில்லிட்டுப் போகுமே! நாம் நார்மலுக்கு வர நாளாகுமே!

    பாலா! இந்த ஒரு ஹம்மிங் போதுமய்யா! நீ வேறெதுவும் பாடவே வேண்டாம். அடப் போய்யா!

    இதுவரை பாலாவின் பாடல்கள் பதின்மூன்று எழுதியிருக்கிறேன். சில பாடல்கள் ஒன்றையொன்று மிஞ்சும். எது டாப் என்று எழுதுவது சிரமம். இப்போதும் மாட்டிக் கொண்டேன்.

    இதுதான் டாப். இந்தப் பாடல்தான் டாப்.

    இந்த இன்பக் குழப்பத்தை இந்த இனிய குரலோன் அன்றி வேறு யார் தர முடியும்?

    இதற்கு மேல் வேண்டாம்.

    சொர்க்கத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.


    Last edited by vasudevan31355; 4th July 2015 at 11:39 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1596
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கல்நாயக் சார் , நாங்கள் யாருமே துரதிஷ்ட்டசாலி இல்லை என்பதை உங்கள் பூக்கள் பதிவை உடனே போட்டு நிரூபித்து விட்டீர்கள் - வாசு அவர்களைப்போல ஒரு " ஏன் " பதிவு என்று தொடக்கத்தில் நினைத்தேன் - பிறகு அதை கண்ணித்தீவாக ஆக்கி - ஒரு "கலை " அம்சத்துடன் சொல்லவந்ததை விளக்கி எங்கள் ஏக்கத்தையும் போக்கிவிட்டீர்கள் - அருமை என்று சொல்வது உங்கள் பதிவை குறைத்து சொல்வது போல ஆகிவிடுமோ என்ற பயத்தில் நன்றி என்ற ஒரே ஒரு வார்த்தையுடன் முடித்துக்கொள்கிறேன் - தொடருங்கள்
    Last edited by g94127302; 4th July 2015 at 02:41 PM.

  11. Thanks kalnayak thanked for this post
    Likes adiram, vasudevan31355 liked this post
  12. #1597
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு - எப்படி உங்கள் ஒவ்வொரு "பாலா " பதிவும் முந்தைய "பாலா " பதிவுகளைக்காட்டிலும் இன்னும் அதிகமாக எங்களை சொக்க வைக்கின்றது ? வேறு ஏதாவது மயக்க மருந்துகள் சேர்ப்பீர்களா ??

    "வருவாயா வேல் முருகா " இந்த பாடல் அன்று ஒலிக்காத பட்டி தொட்டிகள் கிடையாது - உங்கள் அலசலில் நாங்கள் " ஏன் ? ஏன் ?" என்று கேட்க்க முடியாமல் " வேல் ! வேல்!!" என்று சொல்ல வைத்து விட்டீர்கள் -- இலவச இணைப்பு அல்ல அது - எங்களுக்கு இலவச இனிப்பு " நீங்களே கோயம்பத்தூர் சென்று சரளாவை பேட்டி எடுத்ததைப்போன்ற ஒரு இன்ப உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் - பாலா கூட தன் பாடல்களை இவ்வளவு ரசித்து அலசியிருப்பாரா என்று தெரியவில்லை - உங்களை ரசிகராக அடைந்தது மூலம் மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாரர் என்று மட்டும் நன்றாக புரிகின்றது . அவர் மட்டுமா ? நாங்களும் தான் !!

  13. Thanks vasudevan31355 thanked for this post
    Likes adiram, Russellmai, kalnayak liked this post
  14. #1598
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    திரையில் பக்தி-7

    திருப்புகழைப்பாட பாட வாய் மணக்கும்
    இந்த பாடலை கேட்டால் நம் செவி இனிக்கும்

    இசையரசியுடன் சூலமங்கலம் பாடிய அருமையான பாடல்


  15. Likes chinnakkannan, Russellmai, uvausan liked this post
  16. #1599
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  17. #1600
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 154
    பாகம் 2 - தந்தை
    தந்தை - மகன் பந்தம்
    குழந்தை பருவம்


    உண்மை சம்பவம் 22

    அன்று பள்ளிக்கு விடுமுறை . என் மகனுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன் . நன்றாகவே படிக்கிறோம் என்ற நினைப்பு அவன் மனதில் அதிகமாக இருந்தது . இதுவே நாளடைவில் கர்வமாக மாறிவிடக்கூடாதே என்ற ஒரு பயத்தில் அவனிடம் ஒரு நீதிக்கதை ஒன்றரை சொல்லலாம் என்று ஆரம்பித்தேன் - நல்ல வேளையாக அவனும் கேட்க்கும் மூட் இல் இருந்தான் .

    ராமு ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
    தேங்காய் பேச ஆரம்பித்தது: நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட! என்றது. அடுத்து வாழைப்பழம், நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன் என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.

    அவன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது.

    நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்... எவ்வளவு மேலே மேலே உயர்ந்தாலும் கர்வமோ , கோபமோ வராமல் வாழ கற்றுகொள்ளவேண்டும் .....

    ராமுவின் கர்வம் அன்றே கொல்லப்பட்டுவிட்டது .......



  18. Thanks vasudevan31355 thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •